செய்திகள் :

அளவுக்கு அதிகமாக மது; விமானத்தில் ஜப்பான் தொழிலதிபர் மீது சிறுநீர் கழித்த இளைஞர்!

post image

டெல்லியில் இருந்து பேங்காக் சென்ற விமானத்தில் பயணித்த துஷார் (24) என்ற பயணி, விமானத்தில் இரண்டு கிளாஸ் மது வாங்கிக் குடித்தார். அவர் மது அருந்தியவுடன் அவரால் எழுந்திருக்க முடியவில்லை. சிறுநீர் கழிக்க அவர் இருக்கையில் இருந்து எழுந்தார்.

ஆனால் அவரால் மேற்கொண்டு நகர முடியவில்லை. இதனால் அப்படியே நின்று கொண்டு அருகில் அமர்ந்திருந்த பயணி மீது சிறுநீர் கழித்துவிட்டார். அவர் சிறுநீர் கழித்த நபர் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். அதுவும் ஜப்பானில் கம்பெனி ஒன்றின் உரிமையாளர் ஆவார். இதில் அருகில் இருந்த மற்றொரு பயணியும் பாதிக்கப்பட்டார். இது குறித்து விமான அதிகாரிகளிடம் புகார் கூறப்பட்டது. அவர்கள் பாதிக்கப்பட்ட பயணிக்குத் தேவையான உதவிகள் செய்ய முன்வந்தனர்.

ஆனால் அதனை ஏற்காத பயணி பேங்காக்கில் இறங்கிய பிறகு இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்தார். இதையடுத்து துஷார் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய 30 நாள்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் இது போன்று ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் பயணிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏர் இந்தியா எச்சரித்துள்ளது. இதற்கு முன்பு 2024ம் ஆண்டு குடிபோதையில் ஏர் இந்தியா விமானத்தில் ஒரு பயணி, வயதான பெண் பயணி மீது சிறுநீர் கழித்தார். 2023ம் ஆண்டு ஆர்யா வோரா என்ற மாணவர் அமெரிக்க விமானத்தில் சக பயணி மீது சிறுநீர் கழித்தார். அவர் அந்த விமானத்தில் பயணம் செய்ய நிரந்தர தடை விதிக்கப்பட்டது.

”இந்த சாதியில் பொறந்தது எங்க தப்பா?”- தாழ்த்தப்பட்டோர் ஆணைய விசாரணையில் கலங்கிய பெண்; பின்னணி என்ன?

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள நடுக்காவேரி, அரசமரத் தெருவைச் சேர்ந்த அய்யாவு (55) பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்.இவரது மனைவி சாந்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு த... மேலும் பார்க்க

கோவை சிறுமி அளித்த `பகீர்' வாக்குமூலம் - சிக்கிய ஜான் ஜெபராஜ் உறவினர்!

கோவை, காந்திபுரம் பகுதியில் உள்ள ஜெபக்கூடத்தில், ஜான் ஜெபராஜ் என்பவர் மத போதகராக இருந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். தன்னுடைய இசை நிகழ்ச்சி மூலம் அவர் கிறிஸ்தவ சமுதாயத்தில் பிரபலமானார். அ... மேலும் பார்க்க

Meerut Murder: பாம்புக் கடியில் இறந்தாரா கணவர்? மனைவி கைது; விசாரணையில் சிக்கியது எப்படி?

மீரட்டை சேர்ந்த அமித் (25) என்பவர் இரவில் உறங்கச் சென்றவர் காலையில் பாம்பு கடித்து இறந்து கிடந்தார். ஆரம்பத்தில் பாம்பு கடித்து இறந்ததாகவே போலீஸாரும் கருதினர்.மீரட் அருகில் உள்ள அக்பர்பூர் என்ற கிராமத... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூ.8 கோடி மதிப்பிலான போதைப்பொருள்; சிக்கிய பின்னணி என்ன?

நாகப்​பட்​டினம் மாவட்டம், விழுந்தமாவடியைச் சேர்ந்​தவர் அலெக்​ஸ் ​(வயது 32). இவர், போதைப்​பொருள் கடத்​தலில் ஈடு​படு​வ​தாக மத்​திய போதைப்​பொருள் தடுப்பு நுண்ணறி​வுப் பிரி​வினருக்குத் தகவல் கிடைத்​தது.இத... மேலும் பார்க்க

கரூர்: இரண்டு போக்சோ வழக்குகள் விசாரணை; ஒரே நாளில் அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

கரூர் மாவட்டம், ராயனூர் அருகே உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில் கடந்த 2020 -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 14-ம் தேதி ஒரு சிறுமியை கடத்தி, பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக, கரூர் அனைத்து மகளிர் காவல் ... மேலும் பார்க்க

சிவகாசி: பள்ளி சிறுவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞர்? - போலீஸ் தீவிர விசாரணை

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பள்ளி சிறுவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞரை நகர் காவல் நிலைய போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்... மேலும் பார்க்க