செய்திகள் :

கரூர்: இரண்டு போக்சோ வழக்குகள் விசாரணை; ஒரே நாளில் அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

post image

கரூர் மாவட்டம், ராயனூர் அருகே உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில் கடந்த 2020 -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 14-ம் தேதி ஒரு சிறுமியை கடத்தி, பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக, கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கரூர் கூடுதல் அமர்வு மகிலா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தான்தோன்றிமலை வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்த நிஷாந்த் (வயது: 24), குறிஞ்சி நகர் அரவிந்த் (வயது: 24), திருக்காம்புலியூர் வசந்த் என்கிற வசந்தகுமார் (வயது: 24) பெருமாள்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்த கலைவாணன் (வயது: 29), மருதம்பட்டி காலனி கோகுல்நாத் (வயது: 24), வையாபுரி நகர் பார்த்திபன் (வயது: 31) ஆகிய ஆறு பேர் கூட்டாக சேர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, குற்றபத்திரிகையை காவல்துறை தாக்கல் செய்து விசாரணை நடைபெற்று முடிந்தது.

accused

இந்நிலையில், மாவட்ட கூடுதல் அமர்வு மகிலாநீதிமன்ற நீதிபதி தங்கவேல் தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பில் குற்றம்சாட்டப்பட்ட நிஷாந்த் மற்றும் அரவிந்த் ஆகியோருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூபாய் ஆயிரம் அபராதமும், வசந்த் என்கிற வசந்தகுமார், கலைவாணன், கோகுல்நாத் மற்றும் பார்த்திபன் ஆகியோருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 1000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இதே போல, கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம், 19-ம் தேதி 16 வயது மதிக்கத்தக்க சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்தது தொடர்பாக, கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கரூர் மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்ற அமர்வில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

accused

இந்நிலையில், அந்த வழக்கின் விசாரணையும் முடிவுக்கு வந்து, நீதிபதி தங்கவேல் இந்த வழக்கிலும் தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபாய் ஏழு லட்சம் நிவாரண தொகை வழங்கவும், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அப்துல் சமத் (வயது: 59) என்பவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையம் வழங்கி கரூர் மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்ற அமர்வு நீதிபதி தங்கவேல் தீர்ப்பு வழங்கினார்.

accused

மேற்கண்ட இந்த இரண்டு வழக்குகளிலும் தொடர்புடைய குற்றவாளிகளை போலீஸார் திருச்சி மத்திய சிறையில் அடைப்பதற்காக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

ஒரே நாளில் இரண்டு வழக்குகளிலும் நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது, கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

கேரளா: "பொய்யாக பாலியல் புகார் அளித்தேன்" - 7 ஆண்டுக்குப் பின் மன்னிப்பு கேட்ட மாணவி; நடந்தது என்ன?

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கருநாகப்பள்ளியை அடுத்த குறுப்பந்தறவு பகுதியில் பாராமெடிக்கல் கல்வி நிறுவனம் ஒன்று செயல்பட்டுவந்தது.அந்த கல்வி நிறுவனத்தைக் கோட்டயம் மதுரவேலி பகுதியைச் சேர்ந்த சி.டி.ஜோமோ... மேலும் பார்க்க

பேத்தி மரணத்தில் சந்தேகம்; நடவடிக்கை எடுக்காத போலீஸ்; கலெக்டர் அலுவலகத்தில் புகாரை ஒட்டிய பெரியவர்!

மதுரை பந்தல்குடி பகுதியைச் சேர்ந்தவர் மாயழகன். இவரது பேத்தி ரம்யா கிருஷ்ணன், ரீபன் என்பவரைத் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி வீட்டில் நடந்த வாக்கு... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக ரூ.75 லட்சம் மோசடி; அரசு ஊழியர் சிறைக்குச் சென்ற பின்னணி!

அரக்கோணத்தைச் சேர்ந்த விஜி என்பவர், தொலைதூர தொடர்பு கல்வி மையத்தை நடத்தி வருகிறார். இவரின் கல்வி மையத்துக்கு சென்னை திருநீர்மலை பகுதியில் குடியிருக்கும் செல்வராஜ் என்பவர் கிளாஸ் எடுக்க சென்றிருக்கிறார... மேலும் பார்க்க

சென்னை: இன்ஸ்டா பழக்கம்; ஆன்லைன் நண்பரைச் சந்திக்கச் சென்ற மாணவனுக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவன், குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அந்தப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவனுக்கு இன்ஸ்ட்ராகிராம் மூலம் அமீன் எ... மேலும் பார்க்க

`ரயில்வே போலீஸுக்கு வேலை செஞ்சவன், இன்னைக்கு `ஏ’ கேட்டகிரி ரௌடி’ - காட்பாடி அலெக்ஸின் க்ரைம் ஹிஸ்டரி

வேலூர் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்த பிரபல ரௌடி அலெக்ஸ். வழிப்பறிக் கொள்ளை, கொலை என 38 குற்ற வழக்குகளில் தொடர்புடைய அலெக்ஸ் `ஏ’ கேட்டகிரி ரௌடியாக வலம் வந்துகொண்டிருக்கிறான். கடந்த 12-10-2016 -லிருந்த... மேலும் பார்க்க

Mollywood: ``போதையில் தவறாக நடந்தார்..'' - நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது நடிகை வின்சி அலோஷியஸ் புகார்

பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது மலையாள நடிகை வின்சி அலோஷியஸ் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்திருக்கிறார். நடிகர் ஷைன் டாம் சாக்கோ, வின்சி அலோஷியஸ், தீபக் பரம்போல், ஸ்ரீகாந்த் கண்டரகுலா ஆ... மேலும் பார்க்க