செய்திகள் :

Mollywood: ``போதையில் தவறாக நடந்தார்..'' - நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது நடிகை வின்சி அலோஷியஸ் புகார்

post image

பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது மலையாள நடிகை வின்சி அலோஷியஸ் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்திருக்கிறார்.

நடிகர் ஷைன் டாம் சாக்கோ, வின்சி அலோஷியஸ், தீபக் பரம்போல், ஸ்ரீகாந்த் கண்டரகுலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் சூத்திரவாக்கியம். இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது ஷைன் டாம் சாக்கோ போதைப் பொருள் பயன்படுத்தியதால் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக நடிகை வின்சி அலோஷியஸ் குற்றம்சாட்டினார்.

Shine Tom Chacko - vincy
நடிகை வின்சி

இது தொடர்பாக ஏற்கெனவே தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அப்போதே நடிகரின் பெயரைக் குறிப்பிடாமல், தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ``ஒரு காட்சி ஒத்திகையின் போது, ​​அவரது வாயிலிருந்து வெள்ளை நிறத்தில் ஏதோ ஒன்று மேஜையின் மீது சிந்தியது. படப்பிடிப்பு தளத்தில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது தெளிவாகத் தெரிந்தது.

இது சுற்றியுள்ள அனைவருக்கும் தொந்தரவை ஏற்படுத்தியது. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் போதைப்பொருள் பயன்படுத்துவது என்பது உங்கள் தனிப்பட்ட விஷயம். ஆனால் அது உங்களை சுற்றியிருப்பவர்களையும், தொழில்முறை சூழலையும் பாதிக்கும்போது, ​​அது ஏற்றுக்கொள்ள முடியாததாகிவிடும்." எனக் குறிப்பிட்டிருந்தார்.

Shine Tom Chacko - vincy
நடிகர்

அப்போதிருந்தே வின்சி அலோஷியஸ்க்கு ஆதரவாக பலரும் பதிவிட்டு வருகின்றனர். மலையாள திரைப்படக் கலைஞர்கள் சங்க தற்காலிக கமிட்டியின் பொறுப்பாளர் ஜெயன் சேர்த்தலா, ``மோசமான அனுபவத்தை ஏற்படுத்திய நடிகர் யார் என்ற விவரத்தை வின்சி வெளியிடவில்லை. ரகசியமாக இருந்தாலும், AMMA-விடம் தெரிவித்தால், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து கமிட்டி ஒருமனதாக முடிவெடுத்துள்ளது." என்றார்.

இந்த நிலையில்தான், நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது காவல் நிலையத்திலும் நடிகை வின்சி அலோஷியஸ் புகார் பதிவு செய்திருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

டெல்லி இளைஞர் படுகொலை; விசாரணை வளையத்தில் `Zikra' - துப்பாக்கியுடன் வலம் வரும் இந்த Lady Don யார்?

டெல்லி ஷீலம்பூர் பகுதியில் சமீபத்தில் குனால்(17) என்ற வாலிபர் பட்டப்பகலில் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். நேற்று முன் தினம் குனால் தனது வீட்டில் இருந்து பால் வாங்குவதற்காக வெளியில் கிளம்பிய போ... மேலும் பார்க்க

மணமேடையில் அதிர்ந்த மணமகன் - மணப்பெண் என காட்டப்பட்டவரின் தாயாரை திருமணம் செய்து வைக்க முயற்சியா?

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள பிரம்புரி என்ற இடத்தைச் சேர்ந்தவர் மொகமத் அசிம்(22). அசிம் பெற்றோர் இறந்துவிட்டனர். இதனால் தனது பூர்வீக வீட்டில் தனது சகோதரர் நதீமுடன் வசித்து வந்தார். இவருக்கு அவ... மேலும் பார்க்க

கேரளா: "பொய்யாக பாலியல் புகார் அளித்தேன்" - 7 ஆண்டுக்குப் பின் மன்னிப்பு கேட்ட மாணவி; நடந்தது என்ன?

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கருநாகப்பள்ளியை அடுத்த குறுப்பந்தறவு பகுதியில் பாராமெடிக்கல் கல்வி நிறுவனம் ஒன்று செயல்பட்டுவந்தது.அந்த கல்வி நிறுவனத்தைக் கோட்டயம் மதுரவேலி பகுதியைச் சேர்ந்த சி.டி.ஜோமோ... மேலும் பார்க்க

பேத்தி மரணத்தில் சந்தேகம்; நடவடிக்கை எடுக்காத போலீஸ்; கலெக்டர் அலுவலகத்தில் புகாரை ஒட்டிய பெரியவர்!

மதுரை பந்தல்குடி பகுதியைச் சேர்ந்தவர் மாயழகன். இவரது பேத்தி ரம்யா கிருஷ்ணன், ரீபன் என்பவரைத் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி வீட்டில் நடந்த வாக்கு... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக ரூ.75 லட்சம் மோசடி; அரசு ஊழியர் சிறைக்குச் சென்ற பின்னணி!

அரக்கோணத்தைச் சேர்ந்த விஜி என்பவர், தொலைதூர தொடர்பு கல்வி மையத்தை நடத்தி வருகிறார். இவரின் கல்வி மையத்துக்கு சென்னை திருநீர்மலை பகுதியில் குடியிருக்கும் செல்வராஜ் என்பவர் கிளாஸ் எடுக்க சென்றிருக்கிறார... மேலும் பார்க்க

சென்னை: இன்ஸ்டா பழக்கம்; ஆன்லைன் நண்பரைச் சந்திக்கச் சென்ற மாணவனுக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவன், குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அந்தப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவனுக்கு இன்ஸ்ட்ராகிராம் மூலம் அமீன் எ... மேலும் பார்க்க