செய்திகள் :

கோவை சிறுமி அளித்த `பகீர்' வாக்குமூலம் - சிக்கிய ஜான் ஜெபராஜ் உறவினர்!

post image

கோவை, காந்திபுரம் பகுதியில் உள்ள ஜெபக்கூடத்தில், ஜான் ஜெபராஜ் என்பவர் மத போதகராக இருந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். தன்னுடைய இசை நிகழ்ச்சி மூலம் அவர் கிறிஸ்தவ சமுதாயத்தில் பிரபலமானார். அவரின் மாமனார் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தார்.

ஜான் ஜெபராஜ்

அந்த சிறுமிக்கு தற்போது 17 வயதாகிறது. இதனிடையே ஜான் ஜெபராஜ் கடந்தாண்டு தன் வீட்டில் அந்த சிறுமி உள்பட இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் எழுந்தது.

இது குறித்து சிறுமிகள் புகாரின் அடிப்படையில் கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் ஜான் ஜெபராஜ் தலைமறைவாகியிருந்தார். அவரைப் பிடிப்பதற்காக காவல்துறையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

ஜான் ஜெபராஜ் கைது செய்யப்பட்ட போது

இதையடுத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் கேரள மாநிலம், மூணாறில் வைத்து கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அந்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜான் ஜெபராஜ் மனைவியின் சகோதரர் பென்னெட் ஹாரீஷ் (32). பாதிக்கப்பட்ட17 வயது சிறுமி அளித்துள்ள வாக்கு மூலத்தின்படி, பென்னெட் ஹாரீஷ் என்பவரும் கடந்தாண்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் பென்னெட்டையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போக்சோ
போக்சோ

இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் கூறுகையில், “செக்சன் 164-ன் கீழ் அந்த சிறுமி பதில் கொடுத்துள்ளார். அதனடிப்படையில் அவரை கைது செய்துள்ளோம். தற்போதுவரை வேறு யார் மீதும் சிறுமி புகார் கூறவில்லை.” என்றார்.

டெல்லி இளைஞர் படுகொலை; விசாரணை வளையத்தில் `Zikra' - துப்பாக்கியுடன் வலம் வரும் இந்த Lady Don யார்?

டெல்லி ஷீலம்பூர் பகுதியில் சமீபத்தில் குனால்(17) என்ற வாலிபர் பட்டப்பகலில் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். நேற்று முன் தினம் குனால் தனது வீட்டில் இருந்து பால் வாங்குவதற்காக வெளியில் கிளம்பிய போ... மேலும் பார்க்க

மணமேடையில் அதிர்ந்த மணமகன் - மணப்பெண் என காட்டப்பட்டவரின் தாயாரை திருமணம் செய்து வைக்க முயற்சியா?

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள பிரம்புரி என்ற இடத்தைச் சேர்ந்தவர் மொகமத் அசிம்(22). அசிம் பெற்றோர் இறந்துவிட்டனர். இதனால் தனது பூர்வீக வீட்டில் தனது சகோதரர் நதீமுடன் வசித்து வந்தார். இவருக்கு அவ... மேலும் பார்க்க

கேரளா: "பொய்யாக பாலியல் புகார் அளித்தேன்" - 7 ஆண்டுக்குப் பின் மன்னிப்பு கேட்ட மாணவி; நடந்தது என்ன?

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கருநாகப்பள்ளியை அடுத்த குறுப்பந்தறவு பகுதியில் பாராமெடிக்கல் கல்வி நிறுவனம் ஒன்று செயல்பட்டுவந்தது.அந்த கல்வி நிறுவனத்தைக் கோட்டயம் மதுரவேலி பகுதியைச் சேர்ந்த சி.டி.ஜோமோ... மேலும் பார்க்க

பேத்தி மரணத்தில் சந்தேகம்; நடவடிக்கை எடுக்காத போலீஸ்; கலெக்டர் அலுவலகத்தில் புகாரை ஒட்டிய பெரியவர்!

மதுரை பந்தல்குடி பகுதியைச் சேர்ந்தவர் மாயழகன். இவரது பேத்தி ரம்யா கிருஷ்ணன், ரீபன் என்பவரைத் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி வீட்டில் நடந்த வாக்கு... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக ரூ.75 லட்சம் மோசடி; அரசு ஊழியர் சிறைக்குச் சென்ற பின்னணி!

அரக்கோணத்தைச் சேர்ந்த விஜி என்பவர், தொலைதூர தொடர்பு கல்வி மையத்தை நடத்தி வருகிறார். இவரின் கல்வி மையத்துக்கு சென்னை திருநீர்மலை பகுதியில் குடியிருக்கும் செல்வராஜ் என்பவர் கிளாஸ் எடுக்க சென்றிருக்கிறார... மேலும் பார்க்க

சென்னை: இன்ஸ்டா பழக்கம்; ஆன்லைன் நண்பரைச் சந்திக்கச் சென்ற மாணவனுக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவன், குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அந்தப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவனுக்கு இன்ஸ்ட்ராகிராம் மூலம் அமீன் எ... மேலும் பார்க்க