செய்திகள் :

சிவகாசி: பள்ளி சிறுவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞர்? - போலீஸ் தீவிர விசாரணை

post image

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பள்ளி சிறுவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இளைஞரை நகர் காவல் நிலைய போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள். "சிவகாசி மருதுபாண்டியன் நகரைச் சேர்ந்தவர் சாம் டேவிட் (வயது 30). இன்னும் திருமணமாகவில்லை. விருதுநகரில் நடைபெற்று வரும் பொருட்காட்சியில் மெஷின் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார்.

இந்தநிலையில் பொருட்காட்சிக்குப் பொழுதுபோக்காக வந்த பள்ளிச் சிறுவர்கள் இரண்டு பேர் பகுதி நேரமாக வேலை செய்ய சாம் டேவிட்டிடம் வாய்ப்பு கேட்டுள்ளனர்.

அவரும், பொருட்காட்சி தொடர்பாக நோட்டீஸ் விளம்பரம் கொடுப்பது, டிக்கெட் கொடுப்பது மேலும் தனக்கு உதவியாக இருக்கும்படி சிறுவர்கள் இருவருக்கும் வேலை அளித்துள்ளார்.

காவல் நிலையம்

அத்துமீறல்

இந்தநிலையில் பொருட்காட்சி தொடர்பாக சிவகாசியில் விளம்பரம் செய்யவேண்டும் எனக்கூறி சிறுவர்கள் இருவரையும் சேம்டேவிட் சிவகாசிக்கு வரசொல்லியுள்ளார். அதன்படி சிவகாசிக்கு வந்த பள்ளி சிறுவர்கள் இருவரும் மருதுபாண்டியன் நகரில் உள்ள சாம்டேவிட் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு, சிறுவர்களுக்கு இருவருக்கும் சாம் டேவிட் குளிர்பானம் குடிக்க கொடுத்துள்ளார். முன்னதாக, அந்த குளிர்பானத்தில் மயக்கமருந்து ஏதோ கலந்து தயார் நிலையில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் குளிர்பானம் குடித்த சிறுவர்கள் இருவரும் சிறிது நேரத்திலேயே அரை மயக்கத்திற்கு சென்றுள்ளனர். தொடர்ந்து, அவர்கள் இருவரையும் படுக்கையறைக்கு அழைத்துச்சென்ற சாம்டேவிட், பள்ளி சிறுவர்களை பாலியல் ரீதியாக அத்துமீறி உள்ளதாக சொல்லப்படுகிறது.

சிறுவர்களுக்கு மயக்கம் தெளிந்ததும் இதுதொடர்பாக வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார். இதையடுத்து பள்ளி சிறுவர்கள் இருவரும் தங்களுக்கு நடந்ததை வீட்டு பெற்றோர்களிடம் கூறியதையடுத்து, இதுதொடர்பாக சிவகாசி டவுன் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றனர்.

கேரளா: "பொய்யாக பாலியல் புகார் அளித்தேன்" - 7 ஆண்டுக்குப் பின் மன்னிப்பு கேட்ட மாணவி; நடந்தது என்ன?

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கருநாகப்பள்ளியை அடுத்த குறுப்பந்தறவு பகுதியில் பாராமெடிக்கல் கல்வி நிறுவனம் ஒன்று செயல்பட்டுவந்தது.அந்த கல்வி நிறுவனத்தைக் கோட்டயம் மதுரவேலி பகுதியைச் சேர்ந்த சி.டி.ஜோமோ... மேலும் பார்க்க

பேத்தி மரணத்தில் சந்தேகம்; நடவடிக்கை எடுக்காத போலீஸ்; கலெக்டர் அலுவலகத்தில் புகாரை ஒட்டிய பெரியவர்!

மதுரை பந்தல்குடி பகுதியைச் சேர்ந்தவர் மாயழகன். இவரது பேத்தி ரம்யா கிருஷ்ணன், ரீபன் என்பவரைத் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி வீட்டில் நடந்த வாக்கு... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக ரூ.75 லட்சம் மோசடி; அரசு ஊழியர் சிறைக்குச் சென்ற பின்னணி!

அரக்கோணத்தைச் சேர்ந்த விஜி என்பவர், தொலைதூர தொடர்பு கல்வி மையத்தை நடத்தி வருகிறார். இவரின் கல்வி மையத்துக்கு சென்னை திருநீர்மலை பகுதியில் குடியிருக்கும் செல்வராஜ் என்பவர் கிளாஸ் எடுக்க சென்றிருக்கிறார... மேலும் பார்க்க

சென்னை: இன்ஸ்டா பழக்கம்; ஆன்லைன் நண்பரைச் சந்திக்கச் சென்ற மாணவனுக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவன், குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அந்தப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவனுக்கு இன்ஸ்ட்ராகிராம் மூலம் அமீன் எ... மேலும் பார்க்க

`ரயில்வே போலீஸுக்கு வேலை செஞ்சவன், இன்னைக்கு `ஏ’ கேட்டகிரி ரௌடி’ - காட்பாடி அலெக்ஸின் க்ரைம் ஹிஸ்டரி

வேலூர் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்த பிரபல ரௌடி அலெக்ஸ். வழிப்பறிக் கொள்ளை, கொலை என 38 குற்ற வழக்குகளில் தொடர்புடைய அலெக்ஸ் `ஏ’ கேட்டகிரி ரௌடியாக வலம் வந்துகொண்டிருக்கிறான். கடந்த 12-10-2016 -லிருந்த... மேலும் பார்க்க

Mollywood: ``போதையில் தவறாக நடந்தார்..'' - நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது நடிகை வின்சி அலோஷியஸ் புகார்

பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது மலையாள நடிகை வின்சி அலோஷியஸ் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்திருக்கிறார். நடிகர் ஷைன் டாம் சாக்கோ, வின்சி அலோஷியஸ், தீபக் பரம்போல், ஸ்ரீகாந்த் கண்டரகுலா ஆ... மேலும் பார்க்க