புதுக்கோட்டை: இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூ.8 கோடி மதிப்பிலான போதைப்பொருள்; சிக்கிய பின்னணி என்ன?
நாகப்பட்டினம் மாவட்டம், விழுந்தமாவடியைச் சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 32). இவர், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அவரைக் கடந்த ஒரு வாரகாலமாக போலீஸார் கண்காணித்து வந்தனர். இதனிடையே, அவர் புதுக்கோட்டை வழியாக இலங்கைக்குப் படகு மூலமாக போதைப்பொருட்களைக் கடத்தி செல்லவிருப்பதாகத் தகவல் கிடைத்தது.
இந்நிலையில், புதுக்கோட்டை மேலவிலக்குடியிலிருந்த அலெக்ஸை இரு தினங்களுக்கு முன் கைது செய்த மத்திய போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸார், அவரிடம் கிடிக்குப்பிடி விசாரணையை மேற்கொண்டனர்.
ஆரம்பத்தில், அவர்களிடம் உண்மையைச் சொல்லாமல் டிமிக்கி கொடுத்தாலும், போலீஸாரின் தொடர் விசாரணைக்குப் பிறகு, அவரிடமிருந்த 950 கிராம் எடையுள்ள, ரூ.8 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருளையும், ரூ.2 லட்சம் ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

அதனைத்தொடர்ந்து, புதுக்கோட்டை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அலெக்ஸை ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், தற்போது கைதாகியுள்ள அலெக்ஸ் மீது பல்வேறு மாநிலங்களிலிருந்து இலங்கைக்குப் போதைப்பொருள் கடத்தியது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.
இலங்கைக்குக் கடல் மார்க்கமாக ரூ. 8 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களைக் கடத்த இருந்ததாக இளைஞர் ஒருவர் கைதாகியுள்ள சம்பவம், புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs