செய்திகள் :

விழுப்புரம்: `தமிழுக்கு முன்னுரிமை அளித்து பெயர் பலகை அமைக்க வேண்டும்'- ஆட்சியர் அதிரடி உத்தரவு!

post image

சென்னையை தென் மாவட்டங்களுடன் இணைக்கும் பாலமாக திகழ்கிறது விழுப்புரம் மாவட்டம். விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பேருந்து நிலையம் அமைந்திருப்பது மட்டுமன்றி ஏராளமான வரலாற்று சிறப்புமிக்க இடங்களும் அமைந்திருக்கின்றன. இவற்றில் பல ஆட்சியாளர்களால் ஆளப்பட்ட வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் செஞ்சிக்கோட்டை, திருவக்கரை வக்ரகாளியம்மன் கோயில், மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயில், எமதண்டீஸ்வரர் ஆலயம், கல்மரப் பூங்கா ஆகியவையும் குறிப்பிடத்தக்கவை. குறிப்பாக செஞ்சிக்கோட்டை மற்றும் மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயில் ஆகியவற்றைப் பார்வையிட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கில் மக்கள் வருவது மட்டுமன்றி வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான பார்வையாளர்கள் அன்றாடம் வந்து செல்கின்றனர். எனவே பல இடங்களில் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் தகவல் பலகைகள் வைக்கப்பட்டு இருக்கின்றன. 

தமிழ் மொழி

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஓர் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளார். ``விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிறுவனங்கள் மற்றும் கடைகளில் இருக்கும் பெயர் பலகைகள் வரும் மே 15-ம் தேதிக்குள் தமிழில் வைக்க வேண்டும். மேலும் பெயர் பலகையில் கடை அல்லது நிறுவனத்தின் பெயரை பெரிய அளவிலான தமிழ் எழுத்துக்களில் குறிப்பிட வேண்டும். ஆங்கிலம் மற்றும் பிற மொழிகள், தமிழ் எழுத்துக்களை விட சிறிய அளவில் இருக்க வேண்டும். மேலும் இந்தப் பெயர் பலகைகள் தமிழில் இல்லை என்றால், உடனடியாக அபராதம் விதிக்கப்படும். இதற்கென தனி கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த உத்தரவு குறித்து தமிழக முழுவதும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

TASMAC Raid: "பொய் தகவல் கூறி வழக்கை திசைதிருப்ப முயற்சி" - தமிழக அரசை குற்றம்சாட்டும் அமலாக்கத்துறை

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடத்தப்பட்ட சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்கக்கோரி டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் மற்றும் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த வழக்குகள், இன்று நீதி... மேலும் பார்க்க

Article 142, உச்ச நீதிமன்றம் : "ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணு ஏவுகணை" - ஜக்தீப் தன்கர் காட்டம்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காததையடுத்து, திமுக அரசு தாக்கல் செய்த ரிட் மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஏப்ரல் 8-ம் தேதியன்று ஒரு அ... மேலும் பார்க்க

`குளோபல் ஜாப் மார்க்கெட்; எனது கனவு’ - துணைவேந்தர்கள் கூட்டத்தில் முதல்வர் பேசியதென்ன?

தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்."'போதும்' என நினைக்கக் கூடாது" இதில் பேசி... மேலும் பார்க்க

Article 142 மூலம் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த உச்ச நீதிமன்றம் - விவாதிக்கப்படுவது ஏன்? | In-Depth

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத விவகாரத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கெதிரான தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் உரிமைகளை நிலைநிற... மேலும் பார்க்க

நாங்குநேரி சின்னதுரை மீது மீண்டும் கொடூர தாக்குதல் - 5 பேர் கொண்ட மர்மக் கும்பல் யார்?

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை, 2023-ம் ஆண்டு பிளஸ் டூ படித்துக் கொண்டிருந்த போது சாதிய பாகுபாடு காரணமாக சக மாணவர்களால் வீடு புகுந்து கொடூரமாக அரிவாளால் வெட்டப்பட்டார். அதில்... மேலும் பார்க்க

`திமுக நீர் மோர் பந்தலுக்காக குப்பை வண்டியில் சென்ற குடிநீர்' - அதிர்ச்சி வீடியோ, வலுக்கும் கண்டனம்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே சாமளாபுரம் பேரூராட்சித் தலைவராக உள்ளவர் திமுக-வைச் சேர்ந்த விநாயகா பழனிசாமி. இவரது ஏற்பாட்டில் முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, சாமளாபுரத்தில் நீர் மோர் பந்தல் ... மேலும் பார்க்க