செய்திகள் :

'சீனாவை தவிர!' பரஸ்பர வரி 90 நாள்கள் ஒத்திவைப்பு - ட்ரம்ப் அடுத்த ட்விஸ்ட்; இந்தியா என்ன செய்யும்?

post image

கடந்த ஏப்ரல் 2-ம் தேதி...

உலகமே அதிர்ந்த நாள் என்றே சொல்லலாம்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தான் சொன்னதுபோல, ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகளை தவிர்த்து, அனைத்து நாடுகளுக்கும் பரஸ்பர வரி விதித்தார்.

அதன்படி, இந்தியாவிற்கு 27 சதவிகித வரி விதிக்கப்பட்டது.

இந்த வரி ஏப்ரல் 9-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

்https://twitter.com/TruthTrumpPosts/status/1910020628410945729ட

விட்டுக்கொடுக்காத சீனா!

வரி விதிப்பு மற்றும் பொருளாதார மந்தநிலை ஆகியவற்றைக் கண்டு பயந்து வியட்நாம் போன்ற நாடுகள் தாங்கள் அமெரிக்க பொருட்களின் மேல் விதிக்கும் வரியை ரத்து செய்வதாக அறிவித்தன.

மேலும், 75 நாடுகள் பரஸ்பர வரி குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியா இந்த வரி குறித்து வாயை திறக்கவே இல்லை.

சீனா மட்டும் அமெரிக்காவிற்கு எதிராக கடுமையான எதிர்வினை ஆற்றியது. சீனா அமெரிக்கா பொருட்கள் மீது 84 சதவிகித வரி விதித்தது. பேச்சுவார்த்தை, மிரட்டல் என ட்ரம்ப் எவ்வளவோ தூது விட்டும் சீனா கொஞ்சம்கூட அசைந்து கொடுக்கவில்லை.

ட்ரம்ப்பின் அறிவிப்பு

இந்த வரியினால் இன்னொரு பக்கம், உலகளவில் பங்குச்சந்தை பெரும் சரிவை கண்டது. இதனால், உலக பொருளாதாரமும் பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று ட்ரம்ப், "பரஸ்பர வரிகளின் அமல் 90 நாள்களுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. ஆனால், இதற்கு சீனா மட்டும் விதிவிலக்கு. சீனாவிற்கு 125 சதவிகித வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது" என்று அறிவித்துள்ளார்.

இந்த 90 நாள்கள் அவகாசம் என்பது பிற நாடுகள் அமெரிக்காவிடம் பேச்சுவார்த்தை நடத்த கொடுக்கப்பட்ட கெடு என்றே எடுத்துக்கொள்ளலாம்.

இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் இருந்தாலும்...
இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் இருந்தாலும்...

அடுத்து இந்தியா என்ன செய்ய வேண்டும்?

இதுவரை பரஸ்பர வரி குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காத இந்தியா, இந்த 90 நாள்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தை கையெழுத்திட உள்ளது இந்தியா. இருந்தும், பரஸ்பர வரி என்பது பிற நாடுகளுக்கு போல இந்தியாவிற்கும் சுமை தான். அதனால், இந்தியா பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டும்.

ஆனால், இந்தியா என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

NDA : ADMK - BJP கூட்டணியில் சலசலப்பு? | Waqf : உச்ச நீதிமன்றம் அதிரடி! | Imperfect Show 17.4.2025

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* `வருங்கால முதல்வரே..!' - நயினார் நகேந்திரன் போஸ்டர்களால் பரபரப்பு* கூட்டணி ஆட்சி குறித்து தேசியத் தலைமை முடிவு செய்யும்! - நயினார்* கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை! - ... மேலும் பார்க்க

'பேச்சுவார்த்தைக்குத் தயார்!' - இறங்கிவரும் சீனா; அமெரிக்கா என்ன செய்யப் போகிறது?

வரி Vs வரிஇதுதான் தற்போது அமெரிக்கா - சீனாவிற்கு இடையே நடந்துகொண்டிருக்கும் ஒன்று. தேர்தலில் வெற்றிப்பெற்று அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கும் முன்னரே, சீனா அமெரிக்காவிற்குள் போதை மருந்து கடத்தி வருகிறது... மேலும் பார்க்க

`புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மூடுவிழா’ - ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு எதிர்ப்பு

2தமிழ் வளர்ச்சிக்கு வித்திட்ட நிறுவனம்...புதுச்சேரி லாஸ்பேட்டையில் செயல்பட்டு வரும் மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை மூடுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அது தொடர்பாக புதுச்சேரி தமிழார்வலர்கள... மேலும் பார்க்க

மேல்பாதி: சமூகப் பிரச்னையால் மூடப்பட்ட கோயில்; நீதிமன்ற உத்தரவால் திறப்பு... முழு பின்னணி!

அமைதிப் பேச்சு வார்த்தை தோல்விவிழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் அமைந்திருக்கிறது அருள்மிகு தர்மராஜா திரௌபதி அம்மன் கோயில். கிராமத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த கோயிலுக்கு கடந்த 201... மேலும் பார்க்க

`கொளுத்திடுவேன்...’ - மிரட்டிய ராணிப்பேட்டை திமுக நிர்வாகி; பறிபோன கட்சிப் பதவி; நடந்தது என்ன?

தி.மு.க-வின் ராணிப்பேட்டை மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளராக இருந்தவர் எஸ்.எல்.எஸ்.தியாகராஜன். ராணிப்பேட்டை சிப்காட் மெயின் குடோனிலிருந்து, அந்த மாவட்டத்தில் இருக்கிற அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் மதுபா... மேலும் பார்க்க