செய்திகள் :

பேரவையிலிருந்து அதிமுகவினர் வெளியே(ற்றம்)! செங்கோட்டையன் உள்ளே!!

post image

தமிழக சட்டப்பேரவையில் இன்று அந்த தியாகி யார் என்ற வாசகம் பொறித்த பேட்ஜ் அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டு, பதாகைககளைக் காட்டியதால் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

ஆனால், அதிமுக எம்எல்ஏக்கள் அணிந்து வந்த பேட்ஜ் போன்று, செங்கோட்டையன் அணிந்து வராததால், அவரை அவைக் காவலர்கள் வெளியேற்றவில்லை.

அதிமுகவினர் வெளியேற்றப்பட்ட நிலையில், செங்கோட்டையன் அவைக்குள்ளேயே இருந்தார். அவருக்கு அவைத் தலைவர் அப்பாவு பேச அனுமதி வழங்கினார்.

கவன ஈர்ப்பு தீர்மானத்தில் செங்கோட்டையன் பங்கேற்று கேள்விகளை எழுப்பினார். கோபியில் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை விரிவாக்கம் தொடர்பாக செங்கோட்டையன் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து பேசினார்.

தொடர்ந்து பேசிய செங்கோட்டையன், சாயப்பட்டறைகளிலிருந்து ஆறுகளில் கழிவுநீர் வெளியேற்றப்படுவது தொடர்பாக அவை உறுப்பினர்கள் பேசினார்கள். எனவே, சாயக் கழிவுநீர் ஆறுகளில் கலப்பதை முழுமையாகத் தடுக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, உரிய தொழில்நுட்பக் குழுக்களை சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி, அவர்கள் அளிக்கும் பரிந்துரையின்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கும் இது தொடர்பான தீவிர நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று பதிலளித்தார்.

கையில் பதாகைகளுடன் வெளியேற்றப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் பேரவை வளாகத்தில் முழக்கங்கள் எழுப்பினர். பிறகு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார்.

வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது மக்களின் வயிறு எரிய வேண்டுமா? - முதல்வர் ஸ்டாலின்

நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது மக்களின் வயிறு எரிய வேண்டுமா? என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.நாடு முழுவதும் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்படுவதாக... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?

சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி குறித்து வதந்தி பரவிய நிலையில் பள்ளிக்கல்வித்துறை தரப்பிலிருந்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் ஏற்கெனவே திட்ட... மேலும் பார்க்க

வக்ஃப் வாரிய மசோதாவுக்கு எதிராக திமுகவும் உச்சநீதிமன்றத்தில் மனு!

வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக திமுக சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினா்கள் நியமனம், குறைந்தபட்சம் 5 ஆண்டுக... மேலும் பார்க்க

நெல்லையில் அறுந்துகிடந்த மின் கம்பியை மிதித்த ஆறு வயது சிறுவன் பலி!

சாலையில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து ஆறு வயது சிறுவன் பரிதாபமாக பலியானார்.இந்த சம்பவத்துக்கு, மின் ஊழியர்களின் கவனக் குறைவா? என்று துறை ரீதியிலான விசாரணை நடத்த முடிவு செ... மேலும் பார்க்க

ஆவடி காவல் ஆணையர் வாகனம் விபத்து: போக்குவரத்து புலனாய்வு காவல்துறை விசாரணை

சென்னை: சென்னை, ஆவடி காவல் ஆணையர் சங்கர் ஐபிஎஸ் சென்றுகொண்டிருந்த வாகனத்தின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் தீவிர வ... மேலும் பார்க்க

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற கோரவில்லை: ரகுபதி

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற கோரவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று (ஏப். 7) சட்டப் பேரவை வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்... மேலும் பார்க்க