செய்திகள் :

ஆவடி காவல் ஆணையர் வாகனம் விபத்து: போக்குவரத்து புலனாய்வு காவல்துறை விசாரணை

post image

சென்னை: சென்னை, ஆவடி காவல் ஆணையர் சங்கர் ஐபிஎஸ் சென்றுகொண்டிருந்த வாகனத்தின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இந்த விபத்தில் சிக்கிய இரு காவலர்கள் தனியார் மருத்துவமனையில் லேசான காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நல்வாய்ப்பாக சென்னை பெருநகர ஆவடி காவல் ஆணையர் சங்கர் ஐபிஎஸ் காயமின்றி உயிர் தப்பினார்.

இன்று காலை திருவள்ளூர் மாவட்டம், செம்புலிவரம் அருகே முக்கிய பணியாக சங்கர் ஐபிஎஸ் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அதிக எடை கொண்ட சரக்கு லாரி ஒன்று சென்னை பெருநகர ஆவடி காவல் ஆணையரின் வாகனத்தின் மீது உரசியதால் விபத்து நேரிட்டது.

இந்த விபத்தில், சென்னை காவல் ஆணையரின் வாகனத்தை இயக்கிய கார் ஓட்டுநரான ஜெயக்குமார் மற்றும் காவலர் மாரிச்செல்வம், ஆகியோர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சென்னை ஆவடி காவல் ஆணையர் சங்கர் ஐபிஎஸ் அவருக்கு எந்த ஒரு காயம் இன்றி உயிர் தப்பினார்

மேலும் இந்த வாகன விபத்து எதிர்பாராத வகையில் நடந்த விபத்தா? அல்லது திட்டம் தீட்டி யாரேனும் சென்னை பெருநகர ஆவடி காவல் ஆணையர் சங்கர் ஐபிஎஸ் அவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் திட்டம் தீட்டினார்களா? என பல கோணங்களில் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?

சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி குறித்து வதந்தி பரவிய நிலையில் பள்ளிக்கல்வித்துறை தரப்பிலிருந்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் ஏற்கெனவே திட்ட... மேலும் பார்க்க

வக்ஃப் வாரிய மசோதாவுக்கு எதிராக திமுகவும் உச்சநீதிமன்றத்தில் மனு!

வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக திமுக சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினா்கள் நியமனம், குறைந்தபட்சம் 5 ஆண்டுக... மேலும் பார்க்க

நெல்லையில் அறுந்துகிடந்த மின் கம்பியை மிதித்த ஆறு வயது சிறுவன் பலி!

சாலையில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து ஆறு வயது சிறுவன் பரிதாபமாக பலியானார்.இந்த சம்பவத்துக்கு, மின் ஊழியர்களின் கவனக் குறைவா? என்று துறை ரீதியிலான விசாரணை நடத்த முடிவு செ... மேலும் பார்க்க

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற கோரவில்லை: ரகுபதி

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற கோரவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று (ஏப். 7) சட்டப் பேரவை வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்... மேலும் பார்க்க

சீமான் இன்று ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட்!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி சரக டிஐஜி வருண் குமார் தொடர்ந்த வழக்கில் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.தன்னையும், தனது குடும்பத்தினரை... மேலும் பார்க்க

சிவாஜி வீட்டில் பங்கு இல்லை: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய ராம்குமாருக்கு உத்தரவு

சென்னை: நடிகர் சிவாஜியின் வீட்டில் எனக்கு உரிமையோ, பங்கோ இல்லை என்று கூறி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு ராம்குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.நடிகா் சிவாஜி கணேசனின் அன்... மேலும் பார்க்க