செய்திகள் :

Trump Tariffs: 10 விநாடியில் ரூ.20 லட்சம் கோடி இழந்த இந்திய பங்குச்சந்தை - சரிவு ஏன்?

post image

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 சதவீத வரி விதித்துள்ளார்.

உலக நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அதிக பட்சமாக 50 சதவீதம் அளவுக்கு வரி விதித்து இருக்கிறார்.

இந்த வரி போக அனைத்து நாடுகளுக்கும் பொருந்தக்கூடிய 10% அடிப்படை வரியும் கூடுதலாக உண்டு.

டொனால்டு ட்ரம்ப்

இதனால் அமெரிக்க பங்குச்சந்தை கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதோடு அமெரிக்கா முழுவதும் அதிபரின் அறிவிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அமெரிக்க அதிபரின் அறிவிப்பால் ஆசிய பங்குச்சந்தையும் ஆட்டம் கண்டுள்ளது. அது இந்திய பங்குச்சந்தையையும் விட்டு வைக்கவில்லை.

இன்று காலையில் பங்குச்சந்தை திறந்தபோது பி.எஸ்.சி எனப்படும் மும்பை பங்குச்சந்தை 4 ஆயிரம் புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது. இதே போன்று தேசிய பங்குச்சந்தையான என்.எஸ்.சி. ஒரே நேரத்தில் 1000 புள்ளிகள் சரிந்தது.

பங்குச்சந்தை திறந்த 10 விநாடியில் இந்திய முதலீட்டாளர்கள் 20 லட்சம் கோடியை இழந்தனர். சிமென்ஸ் நிறுவன பங்கு 50 சதவீதம் வரை சரிந்து அதிர்ச்சி கொடுத்து. காலை 10 மணிக்கு முதல் 30 இடங்களில் இருக்கும் கம்பெனிகளின் பங்குகள் 2700 புள்ளிகள் சரிந்து காணப்பட்டது.

தேசிய பங்குச்சந்தை 22000 புள்ளிகளாக இருந்தது. படிப்படியாக சற்று உயர்ந்து பிற்பகல் 12 மணிக்கு பி.எஸ்.சி.3000 புள்ளிகள் சரிந்து தொடர்து முதலீட்டாளர்களை ஏழையாக்கிக்கொண்டிருக்கிறது.

மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தை 72157 புள்ளிகளாக வர்த்தகம் நடந்து கொண்டிருக்கிறது. பங்குச்சந்தை மட்டுமல்லாது இந்திய ரூபாய் மதிப்பும் இன்று சரிவை சந்தித்தது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அச்சத்தில் இந்திய பங்குச்சந்தையில் உள்ள பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். எனவே இந்திய உள்நாட்டு பொருளாதாரத்தை பாதுகாக்க பொருளாதார சீர்திருத்தம் அவசியம் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர்.

சீனா, ஜப்பான், தைவான், ஹாங்காங் பங்குச்சந்தையிலும் கடுமையான வீழ்ச்சியை பார்க்க முடிந்தது. இந்திய பங்குச்சந்தை கடந்த 10 மாதத்தில் இப்போதுதான் முதல் முறையாக இந்த அளவுக்கு சரிவைச் சந்தித்து இருக்கிறது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

பங்குச்சந்தை: 1000 புள்ளிகளை தாண்டிய சரிவில் நிப்டி; இன்று Black Monday-ஆ?!

அக்டோபர் 19, 1987.அது ஒரு திங்கட்கிழமை.அப்போது நிலவிய அரசியல் பரபரப்பு, புதிதாக சந்தையில் அறிமுகமான தொழில்நுட்பங்கள், நடந்த கரெக்‌ஷன்கள் போன்ற காரணங்களினால் உலகளவில் பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தத... மேலும் பார்க்க

பங்குச்சந்தை: `இன்று 1000 புள்ளிகள் சரிந்த நிப்டி' - முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

ட்ரம்ப்பின் வரி விதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக வேலையை காட்டத் தொடங்குகிறது. கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க சந்தை கடும் சரிவோடு தான் முடிந்தது. உதாரணமாக, அமெரிக்காவின் டவ் ஜோன்ஸ் சந்தை 980.84 புள்ளிகள் சரிவுக... மேலும் பார்க்க

`தன் கண்ணை தானே குத்திக்கொள்கிறார் ட்ரம்ப்!' - அமெரிக்காவில் பரஸ்பர வரியின் விளைவுகள் என்ன?

"ஆப்ரேஷன் முடிந்துவிட்டது. நோயாளி பிழைத்துவிட்டார் மற்றும் சரியாகி வருகிறார். நோயாளி முன்பை விட மிகவும் வலிமையானவராகவும், பெரியவராகவும், சிறந்தவராகவும், அதிக பலமனாவராகவும் வருவார் என்பது முன் கணிப்பு"... மேலும் பார்க்க