செய்திகள் :

பிரதமர் மோடிக்கு திருவள்ளுவர் சிலையைப் பரிசளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு!

post image

தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு திருவள்ளுவர் உருவச்சிலையை அமைச்சர் தங்கம் தென்னரசு பரிசளித்தார்.

ராமேஸ்வரம் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப். 6) தமிழகம் வந்திருந்தார்.

அவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் வரவேற்றனர்.

தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் வந்த பிரதமர் மோடி பாம்பன் ரயில் பாலத்தை கொடியசைத்துத் திறந்து வைத்தார்.

பின்னர், பகல் 12.45 மணிக்குமேல் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் தரிசனம் மேற்கொண்டார்.

கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டு மாலை அணிவித்து தீர்த்தம் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ராமேஸ்வரத்தில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் பலகோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்கவுள்ளார்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமருக்கு தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு திருவள்ளுவர் உருவச்சிலையை பரிசாக வழங்கினார்.

மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் ராமரின் பட்டாபிஷேக ஓவியத்தை பிரதமருக்குப் பரிசளித்தார்.

இதையும் படிக்க | ராமநாதசுவாமி கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்!

நெருக்கடியில் தக்காளி விவசாயிகள்: பாஜகவை விமர்சித்த அகிலேஷ்!

உத்தரப் பிரதேசத்தில் தக்காளி விவசாயிகள் தங்களின் அடிப்படைச் செலவுகளைகூட வசூலிக்க முடியாத நெருக்கடியான நிலையில் உள்ளதாக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக அவரின் எக்ஸ... மேலும் பார்க்க

பிகாரில் ராகுல் தலைமையில் வெள்ளை டி-ஷர்ட் பேரணி

பிகாரிலிருந்து வேலை தேடி மக்கள் இடம்பெயர்வதை நிறுத்தக் கோரியும், இளைஞர்களுக்கு வேலை வழங்க வலியுறுத்தியும் காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் தலைமையில் இன்று வெள்ளைச் சட்டை பேரணி தொடங்கி நட... மேலும் பார்க்க

மசூதியில் காவிக் கொடிகளுடன் ஏறி கோஷமிட்ட ஹிந்து அமைப்பினர்!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள மசூதியில் ஹிந்து அமைப்பினர் காவிக் கொடிகளுடன் ஏறியதால் பதற்றம் நிலவியது. ஹிந்துக்களின் பண்டிகையான ராம நவமி நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், உத்தரப் பிரதே... மேலும் பார்க்க

சுத‌ர்​ச‌ன் ப‌ட்நா​ய‌க்​கி‌ற்கு பிரி‌ட்டனி‌ல் சா‌ண்‌ட் மா‌ஸ்​ட‌ர் விருது!

​உ​ல​க‌ப் புக‌ழ்​ù‌ப‌ற்ற‌ மண‌ல் சி‌ற்​ப‌க் கலை​ஞ‌ர் சுத‌ர்​ச‌ன் ப‌ட்நா​ய‌க்​கி‌ற்கு பிரி‌ட்​ட​னி‌ல் 'ஃபிரெ‌ட்டாரி‌ங்​ட‌ன் சா‌ண்‌ட் மா‌ஸ்​ட‌ர்' விருது வழ‌ங்​க‌ப்​ப‌ட்​டு‌ள்​ளது.பிரி‌ட்​ட​னி‌ல் உ‌ள்ள டா... மேலும் பார்க்க

போா்ச்சுகல், ஸ்லோவாகியா நாடுகளுக்கு குடியரசுத் தலைவா் அரசுமுறை பயணம்!

போா்ச்சுகல், ஸ்லோவாகியா ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு 4 நாள்கள் அரசுமுறை பயணமாக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றாா். இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான அமெரிக்காவின் கடுமைய... மேலும் பார்க்க

மசூதியில் ஜெலட்டின் குச்சிகளை வெடிக்க வைத்த இருவா் மீது பயங்கரவாத வழக்கு

மகாராஷ்டிர மாநிலத்தில் மசூதியில், பாறைகளைத் தகா்க்க பயன்படுத்தும் ஜெலட்டின் குச்சிகளை வெடிக்க வைத்த வழக்கில் கைதான இருவா் மீதும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்கீழ் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய... மேலும் பார்க்க