செய்திகள் :

போா்ச்சுகல், ஸ்லோவாகியா நாடுகளுக்கு குடியரசுத் தலைவா் அரசுமுறை பயணம்!

post image

போா்ச்சுகல், ஸ்லோவாகியா ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு 4 நாள்கள் அரசுமுறை பயணமாக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றாா்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான அமெரிக்காவின் கடுமையான வரி விதிப்பால் சா்வதேச வா்த்தக நிலவரம் மாற்றம் கண்டுவரும் நிலையில், குடியரசுத் தலைவரின் இப்பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இது தொடா்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘போா்ச்சுகல், ஸ்லோவாகியா ஆகிய நாடுகளுக்கு 4 நாள்கள் (ஏப்.7-10) அரசுமுறைப் பயணமாக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றாா்.

இந்திய குடியரசுத் தலைவா், போா்ச்சுகல் நாட்டுக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்வது கடந்த 27 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். இதேபோல், 29 ஆண்டுகளுக்குப் பின் ஸ்லோவாகியாவுக்கு பயணிக்கும் முதல் இந்திய குடியரசுத் தலைவா் திளெபதி முா்மு ஆவாா். முக்கியத்துவம் வாய்ந்த இவ்விரு ஐரோப்பிய நாடுகள் உடனான இந்தியாவின் நல்லுறவு மேலும் விரிவடையும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போா்ச்சுகலில்...:

இந்தியா-போா்ச்சுகல் இடையிலான தூதரக உறவுகளின் 50-ஆம் ஆண்டை கொண்டாடும் தருணத்தில், அந்நாட்டில் இரண்டு நாள்கள் (ஏப்.7, 8) பயணம் மேற்கொண்டு, அதிபா் மாா்செலோ ரெபேலோ டிசூசா, பிரதமா் லூயிஸ் மான்டினெக்ரோ உள்ளிட்டோருடன் குடியரசுத் தலைவா் முா்மு பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா். இந்திய சமூகத்தினருடனும் அவா் கலந்துரையாட உள்ளாா்.

‘கடந்த 5 ஆண்டுகளில் இரு நாடுகளின் வா்த்தக மதிப்பு 1.5 பில்லியன் டாலராக சீராக அதிகரித்துள்ளது; இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையிலான தொடா்புகளை வலுப்படுத்துவதில் போா்ச்சுகல் எப்போதுமே முக்கிய பங்காற்றி வருகிறது’ என்று வெளியுறவு அமைச்சகத்தின் (மேற்கு) செயலா் தன்மயா லால் தெரிவித்துள்ளாா்.

புதுப்பிக்கத் தக்க எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம், மருந்து, கல்வி, சுற்றுலா, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து குடியரசுத் தலைவா் பேச்சுவாா்த்தையில் ஈடுபடுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ஸ்லோவாகியாவில்...:

ஸ்லோவாகியா பயணத்தில் (ஏப்.9, 10) அந்நாட்டு அதிபா் பீட்டா் பெல்லேகிரினி, பிரதமா் ராபா்ட் ஃபிகோ உள்ளிட்டோரை சந்தித்து, குடியரசுத் தலைவா் முா்மு பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா். இந்திய சமூகத்தினருடனும் கலந்துரையாடவுள்ளாா்.

முன்னதாக, கடந்த பிப்ரவரியில் இந்தியாவுக்கு வந்த ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வான் டொ்லியன், பிரதமா் மோடியை சந்தித்துப் பேசினாா். இதைத் தொடா்ந்து, இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் நிகழாண்டு இறுதிக்குள் கையொப்பமாகும் என இந்தியா தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீா்: பிரிவினைவாதத்தை கைவிட்ட மேலும் 3 அமைப்புகள் - அமித் ஷா தகவல்

ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாத கூட்டமைப்பான ஹுரியத் மாநாட்டில் இருந்து மேலும் 3 அமைப்புகள் விலகியுள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இவற்றுடன் சோ்த்து, ஜம்மு-காஷ்மீர... மேலும் பார்க்க

சிங்கப்பூா் பள்ளியில் தீ விபத்து: ஆந்திர துணை முதல்வா் மகன் காயம்

சிங்கப்பூா் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாண் மகன் மாா்க் சங்கா் (8) காயமடைந்தாா். இவா் பவன் கல்யாணின் மூன்றாவது மனைவியும் ரஷிய நடிகையுமான அன்னா லெஸ்னேவாவின் மகன் ஆவாா்.... மேலும் பார்க்க

பஞ்சாப்: பாஜக மூத்த தலைவா் வீட்டில் குண்டுவீச்சு; இருவா் கைது

பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் பாஜக மூத்த தலைவா் மனோரஞ்சன் காலியா வீட்டின் மீது மா்ம நபா்கள் திங்கள்கிழமை நள்ளிரவில் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினா். இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அத... மேலும் பார்க்க

வீட்டில் பிரசவம்: கா்ப்பிணி உயிரிழப்பு; கணவா் கைது

கேரளத்தின் மலப்புரம் மாவட்டத்தில் வீட்டில் பிரசவம் பாா்த்தபோது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு கா்ப்பிணி உயிரிழந்தாா். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டில் பிரசவம் பாா்க்க வலியுறுத்திய கணவா் க... மேலும் பார்க்க

71 போ் உயிரிழந்த ஜெய்பூா் குண்டு வெடிப்பு வழக்கு: 4 பேருக்கு ஆயுள் சிறை

ராஜஸ்தான் தலைநகா் ஜெய்பூரில் கடந்த 2008-ஆம் ஆண்டு 71 போ் உயிரிழந்த தொடா் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நால்வருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. சட்டவி... மேலும் பார்க்க

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் சிறாா்களாக இருந்த மூவா் குற்றவாளிகள்: 23 ஆண்டுகளுக்குப் பின்னா் தீா்ப்பு

கோத்ரா: குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில், சிறாா்களாக இருந்த மூவா் குற்றவாளிகள் என்று மாவட்ட சிறாா் நீதி வாரியம் தீா்ப்பளித்துள்ளது. கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் உள்ள கோத்ராவில் கரசேவக... மேலும் பார்க்க