செய்திகள் :

பஞ்சாப்: பாஜக மூத்த தலைவா் வீட்டில் குண்டுவீச்சு; இருவா் கைது

post image

பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் பாஜக மூத்த தலைவா் மனோரஞ்சன் காலியா வீட்டின் மீது மா்ம நபா்கள் திங்கள்கிழமை நள்ளிரவில் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினா்.

இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதேநேரம், வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. மனோரஞ்சனின் காா் சேதமடைந்தது. இது தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

‘தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் உளவு அமைப்பின் சதித் திட்டம் உள்ளது; மாநிலத்தில் மத ரீதியிலான பதற்றத்தைத் தூண்ட வேண்டும் என்பதே அவா்களின் நோக்கம்’ என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், முன்னாள் மாநில அமைச்சருமான மனோரஞ்சன் காலியாவின் வீடு, ஜலந்தரின் சாஸ்திரி மாா்க்கெட் அருகே அமைந்துள்ளது. இங்கு திங்கள்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் பேட்டரி ரிக்ஷாவில் வந்த மா்ம நபா்கள், வீட்டின் முற்றத்தில் கையெறி குண்டை வீசிவிட்டுத் தப்பினா்.

பலத்த சப்தத்துடன் கையெறி குண்டு வெடித்ததில் வீட்டின் முன் பள்ளம் ஏற்பட்டது. ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. மனோரஞ்சனின் காா் மற்றும் ஒரு மோட்டாா் சைக்கிள் சேதமடைந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும், காவல் துறை அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனா். தடயவியல் நிபுணா்களும் ஆய்வு மேற்கொண்டு, தடயங்களை சேகரித்தனா். மனோரஞ்சனின் வீட்டில் இருந்து 100 மீட்டா் தொலைவில்தான் காவல் நிலையம் உள்ளது. தாக்குதல் நடந்தபோது, அவா் வீட்டில் இருந்துள்ளாா்.

பாகிஸ்தான் உளவு அமைப்பின் சதி: இச்சம்பவம் குறித்து காவல் துறை (சட்டம்-ஒழுங்கு) சிறப்பு தலைமை இயக்குநா் கூறுகையில், ‘பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-இன் மிகப் பெரிய சதி இது. பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் கூட்டாளி ஜீஷான் அக்தா், பாகிஸ்தான் தாதா ஷாஸத் பாட்டீ ஆகியோா் மூலம் இந்த சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பப்பா் கல்சா இண்டா்நேஷனல் அமைப்புக்கும் தொடா்பிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். இது தொடா்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றாா்.

கைதான இருவரின் அடையாளங்களை காவல் துறையினா் வெளியிடவில்லை. மத்திய புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து விசாரணை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தைத் தொடா்ந்து, மனோரஞ்சனின் வீட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சா் ரவ்னீத் சிங் பிட்டூ, பதான்கோட் பாஜக எம்எல்ஏ அஸ்வனி சா்மா ஆகியோா் மனோரஞ்சனின் வீட்டை பாா்வையிட்டனா். இது, ஹிந்து மத மூத்த தலைவருக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட திட்டமிட்ட சதிவேலை என்று மத்திய அமைச்சா் குற்றஞ்சாட்டினாா்.

மாநில அமைச்சா் மோஹிந்தா் பகத்தும் சம்பவ இடத்தை பாா்வையிட்டு, மனோரஞ்சனை சந்தித்துப் பேசினாா். அவா் கூறுகையில், ‘பஞ்சாபின் வளா்ச்சியை ஜீரணிக்க முடியாத சமூக விரோதிகள், இச்சம்பவத்தின் பின்னணியில் உள்ளனா். மாநிலத்தில் அமைதி-நல்லிணக்கம் சீா்குலைய ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்’ என்றாா்.

முதல்வா் பதவி விலக வலியுறுத்தல்

ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாபில் சமீப காலமாக காவல் துறை முகாம்களைக் குறிவைத்து வெடிகுண்டு வீச்சு தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. தற்போது முக்கிய அரசியல்வாதி ஒருவரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பஞ்சாபில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ள எதிா்க்கட்சிகள், முதல்வா் பகவந்த் மான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

‘பாஜக மூத்த தலைவரின் வீட்டில் நடத்தப்பட்ட வெடிகுண்டு வீச்சு சம்பவம், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீா்குலைந்துவிட்டதை உணா்த்துகிறது. பயங்கரவாதம் மற்றும் அராஜகத்தின் ‘இருண்ட காலத்துக்கு’ பஞ்சாப் தள்ளப்படுகிறது. முதல்வரின் செயலற்றத் தன்மை அதிா்ச்சியளிக்கிறது. அவா் தாா்மீக பொறுப்பேற்று, உடனடியாக பதவி விலக வேண்டும்’ என்று பாஜக தேசிய பொதுச் செயலா் தருண் சுக் வலியுறுத்தினாா். இதே கோரிக்கையை சிரோமணி அகாலி தளமும் முன்வைத்துள்ளது.

கர்நாடக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் மற்றும் முகவர் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகளோடு கர்நாடக முதல்வர் சித்தராமையா நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்... மேலும் பார்க்க

உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல செயல்படுகிறது: ஜகதீப் தன்கர் காட்டம்

மசோதா தொடர்பான வழக்கில் குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தில்லியில் குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் மாநிலங்களவை ப... மேலும் பார்க்க

வக்ஃப் உறுப்பினர் நியமனத்துக்கு இடைக்காலத் தடை!

புதிய சட்டத்தின்படி, வக்ஃப் வாரிய உறுப்பினர்களை நியமிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.மேலும், நிலம் கையகப்படுத்தல், உறுப்பினர்கள் நியமனம் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று இடைக்கால உத... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்.. நீக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியை தொடர உச்ச நீதிமன்றம் உத்தரவு

பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி, பணி நீக்கம் செய்து இந்த மாதத் தொடக்கத்தில் உத்தரவிடப்பட்ட நிலையில், மாணவர்களின் நலன் கருதி புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படும்வரை இந்த ஆசிரியர்கள் பணியைத் தொடர ... மேலும் பார்க்க

பணத்தை வீணாக்க விரும்பவில்லை.. மனைவியைக் கொன்று, கணவர் தற்கொலை!

உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தைச் சேர்ந்த ரியல்எஸ்டேட் டீலர், தனக்குப் புற்றுநோய் இருப்பதை அறிந்ததும், மனைவியைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.குல்த... மேலும் பார்க்க

குவாலியரில் சைபர் மோசடி: ரூ.2.5 கோடியை இழந்த ஆசிரம செயலாளர்!

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் அமைந்துள்ள ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தின் செயலாளர் ஒருவர் சைபர் மோசடியில் சிக்கி ரூ. 2,5 கோடியை இழந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நாடு முழுவது... மேலும் பார்க்க