செய்திகள் :

"தந்தை யார் என்று சொல்லக் கூடாது...” - வாடகை தாயின் வாயை அடைக்க பணம் கொடுக்கிறாரா எலான் மஸ்க்?

post image

உலக பணக்காரரான எலான் மஸ்க், வாடகை தாய் மூலம் பல குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு, அதனை ரகசியமாக நிர்வகிக்க ஊக்கத்தொகைகள் கொடுப்பதாக சில அறிக்கைகள் கூறுகின்றன.

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்கின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளி வருகின்றன.

அப்படி தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் அறிக்கையின்படி, வாடகை தாய் மூலம் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு, அதனை ரகசியமாக நிர்வகிக்க ஊக்கத்தொகைகள் கொடுப்பதாக கூறப்படுகிறது.

எலான் மஸ்க், செயின்ட் கிளேர், பாடகர் கிரிம்ஸ், நியூராலிங்க் நிர்வாகி ஷிவோன் ஜிலிஸ் மற்றும் முன்னாள் மனைவி ஜஸ்டின் மஸ்க் ஆகிய நான்கு பெண்கள் மூலம் 14 குழந்தைகளுக்கு தந்தையாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால் உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று மஸ்க்கின் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

மஸ்க் ஒரு உயர் பதவியில் இருக்கும் ஜப்பானிய பெண்ணுக்கு விந்துக்களை வழங்கியதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன.

சமீபத்தில் மஸ்கின் 13 வது குழந்தையை பெற்றெடுத்த 26 வயதான செயின்ட் கிளேர், பொதுவெளியில் ஒரு தகவலை கூறினார். அதில், அவர் பெற்றெடுத்த குழந்தைக்கு தந்தை யார் என்பதையும் மஸ்க்குடனான அவரது உறவு பற்றியும் ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டதாக கூறினார்.

மஸ்கின் நீண்ட கால உதவியாளர் ஜாரெட் மூலம் எலான் மஸ்க்கின் நிதி உதவி பெற வேண்டும் என்றால், ரகசிய ஆவணத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டதாக கூறினார்.

இவ்வாறு ரகசியமாக வைக்க எலான் மஸ்க் ஒரு குறிப்பிட்ட தொகையை செயின்ட் கிளாருக்கு வழங்குவதாகவும் கூறியிருக்கிறார். ஆனால் இந்த சலுகையை அவர் நிராகரித்திருக்கிறார்.

Baby (Representational Image)

இருப்பினும் குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் மஸ்கின் பெயரை சேர்க்காமல் இருக்க ஒப்புக் கொண்டுள்ளார். தந்தை என்பதை வெளிப்படுத்தாமல் இருக்க ஒப்புக்கொண்டால் முதலில் $15 பில்லியன் மற்றும் மாதந்தோறும் $100,000 நிதியுதவியாக வழங்கப்படும் என்று கூறப்பட்டதாக செயின்ட் கிளேர் கூறினார்.

இந்த சலுகை மஸ்க்கின் நெருங்கிய உதவியாளர் ஜாரெட் பிர்ச்சால் மூலம் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டபோது வந்ததகாவும் கூறினார்.

இந்த உறவு பற்றி வெளியில் பகிரப்பட்ட பிறகு அவரின் நிதி உதவி குறைக்கப்பட்டதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன.

பிறப்பு விகிதம் குறைவது மனிதகுலத்தை ஆபத்தில் ஆழ்த்தும் என்ற கருத்தில் மஸ்க் நம்பிக்கை வைத்திருப்பதால், பல குழந்தைகளை பெற வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு எழுந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஃபோர்ப்ஸ் பத்திரிகையின்படி, எலோன் மஸ்க் $367.9 பில்லியன் நிகர மதிப்புடன் உலகின் மிகப்பெரிய பணக்காரர் ஆக உள்ளார். மேலும் மஸ்க் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின் கீழ் அரசாங்க செயல்திறன் துறையின் தலைவராகவும், அவரது அமைச்சரவையில் ஆலோசகராகவும் உள்ளார்.

`ஓசன்னா... தேவனே எம்மைக் கைவிடாதிரும்' - இயேசுவின் சிலுவைப் பாடுகளை ஏன் நினைவுக்கூற வேண்டும்?

மனித குல வரலாற்றில் மோசமான இரவுகளில் ஒன்று. அவரை அவர்கள் அறிவார்கள். அவர் ஆலயங்களிலும் பொது இடங்களிலும் பிரசங்கம் செய்பவர். மதம் வணிகமானபோது அதற்கு எதிராகக் குரல் எழுப்பி, 'கடவுளின் வீட்டை மீட்க வேண்ட... மேலும் பார்க்க

Infant trafficking: மகப்பேறு மருத்துவமனைகளில் குழந்தை கடத்தலை எப்படித் தடுக்கிறார்கள்?!

நாடு முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து பிறந்த குழந்தைகள் கடத்தப்படுவது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இதைத் தடுப்பதற்காக, மருத்துவமனையில் புதிதாகப் பிறந்த குழந்தைகள் திருடப்பட்டால், சம்பந்தப்பட்ட மருத்த... மேலும் பார்க்க

UP : `வருங்கால மருமகனுடன் வீட்டைவிட்டு வெளியேறியது ஏன்?’ - விசாரணையில் பெண் சொன்னதென்ன?

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகரை சேர்ந்த சப்னா என்ற பெண்ணின் மகளுக்கு ராகுல் என்பவருடன் திருமணம் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு இருந்தது. திருமணத்திற்கு 10 நாட்கள் மட்டுமே இருந்த நிலையில், சப்னா தனது வருங்க... மேலும் பார்க்க

Scuba Diving: ``நீருக்குள் சந்தித்தோம், அதனால்..'' - நீருக்கடியில் திருமணம் செய்த காதல் தம்பதி!

வித்தியாசமான முறையில் திருமணத்தை நடத்த வேண்டும் என்று விரும்பும் சில மணமக்கள், தங்களது திருமணங்களை தனித்துவமாக நடத்த முற்படுகின்றனர். அப்படி ஒரு காதல் ஜோடி நீருக்கடியில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.ப... மேலும் பார்க்க

தாராவி: `ஆவணங்களை தாக்கல் செய்யாதவர்கள், சட்டவிரோத குடியிருப்பாளர்கள்' - NMDPL அறிவிப்பால் அதிர்ச்சி

தாராவி குடிசை மேம்பாட்டு ஆணையம்ஆசியாவில் அதிக குடிசையுள்ள பகுதியாக பார்க்கப்படும் மும்பை தாராவியில் உள்ள குடியிருப்புகளை இடித்து விட்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை மாநில அரசு அதானி ந... மேலும் பார்க்க

இந்தியாவில் முதல் முறை: ஓடும் ரயிலில் ATM மெஷின்; அறிமுகம் செய்துள்ள மத்திய ரயில்வே

நாட்டில் இப்போது ஆன்லைன் பண பரிவர்த்தனை அதிகரித்துவிட்டது. பணத்தை நேரடியாகப் பயன்படுத்துவது குறைந்துவிட்டது. ஆனாலும் சில இடங்களில் ரொக்க பணத்தை மட்டுமே பயன்படுத்தவேண்டிய நிலை இருக்கிறது. குறிப்பாக ரயி... மேலும் பார்க்க