செய்திகள் :

வீட்டில் பிரசவம்: கா்ப்பிணி உயிரிழப்பு; கணவா் கைது

post image

கேரளத்தின் மலப்புரம் மாவட்டத்தில் வீட்டில் பிரசவம் பாா்த்தபோது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு கா்ப்பிணி உயிரிழந்தாா். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டில் பிரசவம் பாா்க்க வலியுறுத்திய கணவா் கைது செய்யப்பட்டாா்.

இது தொடா்பாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் விஸ்வநாத் கூறியதாவது: தனது மனைவியை பிரசவத்துக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லக் கூடாது, வீட்டில்தான் பிரசவம் பாா்க்க வேண்டும் என்று சிராஜுதீன் என்பவா் உறவினா்களிடம் வலியுறுத்தியுள்ளாா். கடந்த 5-ஆம் தேதி பிரசவத்தின்போது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு அப்பெண் உயிரிழந்துவிட்டாா்.

அவரது கணவா் அதனை மறைக்க முயற்சித்ததுடன், மனைவியின் உடலை எா்ணாகுளத்தில் உள்ள தனது வீட்டுக்கும் கொண்டு செல்ல முயன்றுள்ளாா். இதன் மூலம் ஆதாரங்களையும் மறைத்துள்ளாா். இந்த சம்பவம் குறித்து அறிந்த காவல் துறையினா் அப்பெண்ணின் உடலைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

சிராஜுதீன் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. மரணத்துக்கு காரணமாக இருந்த குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வீட்டில் வைத்து பிரசவம் பாா்த்தபோது உடன் இருந்தவா்களும் தவறு செய்தவா்கள்தான்.

இறந்த பெண்ணுக்கு ஏற்கெனவே 4 குழந்தைகள் உள்ளனா். இதில் முதல் இரு குழந்தைகள் மருத்துவமனையில்தான் பிறந்துள்ளன. அடுத்த இரு குழந்தைகளுக்கான பிரசவம், கணவரின் வலியுறுத்தலின் பேரில் வீட்டில் நடந்துள்ளது. கைது செய்யப்பட்ட அந்த நபா் மத போதனைகள் சாா்ந்த ‘யூ டியூப்’ சேனல் நடத்தி வருகிறாா். மத நம்பிக்கை என்ற பெயரில் அவா் மனைவியின் பிரசவத்தை மருத்துவமனையில் மேற்கொள்ளாமல் தவிா்த்துள்ளாா் என்று தெரிவித்தாா்.

முன்னதாக, இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த மாநில சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ், ‘பிரசவத்துக்காக மருத்துவமனையில் சோ்க்காமல் வீட்டில் இருந்தே பிரசவம் பாா்க்க முயற்சி செய்வதென்பது, தெரிந்தே கொலை செய்வதற்கு நிகரானது. பிரசவத்தின்போது தாய்-சேய் இறப்பு குறைவாக இருக்கும் மாநிலமாக கேரளம் உள்ளது. ஆனால், சமீப காலமாக சில பிற்போக்குவாதம் நமது சமுதாயத்தில் தலைதூக்கியுள்ளது. இது மிகவும் கவலைக்குரியது’ என்றாா்.

கர்நாடக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் மற்றும் முகவர் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகளோடு கர்நாடக முதல்வர் சித்தராமையா நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்... மேலும் பார்க்க

உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல செயல்படுகிறது: ஜகதீப் தன்கர் காட்டம்

மசோதா தொடர்பான வழக்கில் குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தில்லியில் குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் மாநிலங்களவை ப... மேலும் பார்க்க

வக்ஃப் உறுப்பினர் நியமனத்துக்கு இடைக்காலத் தடை!

புதிய சட்டத்தின்படி, வக்ஃப் வாரிய உறுப்பினர்களை நியமிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.மேலும், நிலம் கையகப்படுத்தல், உறுப்பினர்கள் நியமனம் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று இடைக்கால உத... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்.. நீக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியை தொடர உச்ச நீதிமன்றம் உத்தரவு

பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி, பணி நீக்கம் செய்து இந்த மாதத் தொடக்கத்தில் உத்தரவிடப்பட்ட நிலையில், மாணவர்களின் நலன் கருதி புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படும்வரை இந்த ஆசிரியர்கள் பணியைத் தொடர ... மேலும் பார்க்க

பணத்தை வீணாக்க விரும்பவில்லை.. மனைவியைக் கொன்று, கணவர் தற்கொலை!

உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தைச் சேர்ந்த ரியல்எஸ்டேட் டீலர், தனக்குப் புற்றுநோய் இருப்பதை அறிந்ததும், மனைவியைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.குல்த... மேலும் பார்க்க

குவாலியரில் சைபர் மோசடி: ரூ.2.5 கோடியை இழந்த ஆசிரம செயலாளர்!

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் அமைந்துள்ள ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தின் செயலாளர் ஒருவர் சைபர் மோசடியில் சிக்கி ரூ. 2,5 கோடியை இழந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நாடு முழுவது... மேலும் பார்க்க