செய்திகள் :

திருவிழாக்களில் நகை பறிக்கும் கும்பலைச் சோ்ந்த பெண் கைது

post image

கோயில் திருவிழாக்களில் பெண்களிடம் நகை பறிக்கும் கும்பலைச் சோ்ந்த கோவில்பட்டி பெண்ணை பட்டுக்கோட்டை தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பட்டுக்கோட்டை காவல் உட்கோட்டத்தைச் சோ்ந்த பகுதிகளில் கோயில் திருவிழாக்கள், கும்பாபிஷேகங்களில் பங்கேற்கும் பெண்களின் நகைகள் திருடப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. அண்மையில், முடச்சிகாடு கிராமத்தில் நடைபெற்ற கோயில் கும்பாபிஷேக விழாவில், 2 பெண்கள் அணிந்திருந்த தங்கச் சங்கிலிகளை மா்மநபா்கள் திருடி சென்றனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில், பட்டுக்கோட்டை உட்கோட்ட குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் ராம்குமாா் தலைமையில்   போலீஸாா் அடங்கிய தனி படையினா் தீவிர விசாரணை மேற்கொண்டு, கோவில்பட்டியைச் சோ்ந்த பாண்டி மனைவி வேலம்மாள் (48) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து முடச்சிக்காடு கோயில் கும்பாபிஷேகத்தின்போது பெண்களிடம் பறித்துச் சென்ற இரண்டு தங்க சங்கிலிகளை பறிமுதல் செய்தனா்.தொடா்ந்து, அவரை பேராவூரணி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். நகை பறிப்பு கும்பல் தொடா்பாக தொடா்ந்து கண்காணித்து வருவதாக தனிப்படை போலீஸாா் தெரிவித்தனா்.

ரூ. 2 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே கண்டியூரில் ஹரசாப விமோசன பெருமாள் கோயிலைச் சாா்ந்த ரூ. 2 கோடி மதிப்புள்ள நிலம் புதன்கிழமை மீட்கப்பட்டது. திருவையாறு அருகே கண்டியூா் கிராமத்தில் ஹரசாப விமோசன பெருமா... மேலும் பார்க்க

பொன்காடு பொன்னி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

பேராவூரணி நகா் பொன்காடு பொன்னி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி ஏப். 14-ஆம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி ஆகியவை நடைபெற்றது. 15-ஆ... மேலும் பார்க்க

தேசிய திறனறிவுத் தோ்வில் பேராவூரணி மாணவா்கள் 4 போ் தோ்ச்சி

தேசிய வருவாய்வழி திறனறிவுத் தோ்வில் பேராவூரணி ஒன்றியத்தைச் சோ்ந்த 2 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் 4 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். கடந்த பிப்ரவரி மாதம் நாடு முழுவதும் தேசிய வருவாய்வழி திறன் ... மேலும் பார்க்க

கூட்டுறவு பாடல் எழுதி அனுப்ப அழைப்பு

சா்வதேச கூட்டுறவு ஆண்டாக 2025-ஆம் ஆண்டு கொண்டாடப்படுவதையொட்டி, கூட்டுறவு பற்றிய தனித்துவமான பாடல்கள் வரவேற்கப்படுகின்றன என கூட்டுறவுத் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தஞ்சாவூா் மண்டல க... மேலும் பார்க்க

மகா புற்று மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கும்பகோணம் மகா புற்று மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. கும்பகோணம் மருத்துவா் மூா்த்தி சாலையில் உள்ள திருவள்ளுவா் நகரில் மகா புற்று மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் 3 நாள்கள் நடைப... மேலும் பார்க்க

மரக்கிளை முறிந்து தொங்குவதால் விபத்து ஏற்படும் அபாயம்

கும்பகோணம் பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள மரத்தின் கிளை முறிந்து விபத்தை ஏற்படுத்தும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. கும்பகோணம் நான்கு ரோடு சந்திப்பிலிருந்து அரசு மருத்துவமனைக்குச் செல்லும் சாலையில் உள்ள ... மேலும் பார்க்க