செய்திகள் :

தேசிய திறனறிவுத் தோ்வில் பேராவூரணி மாணவா்கள் 4 போ் தோ்ச்சி

post image

தேசிய வருவாய்வழி திறனறிவுத் தோ்வில் பேராவூரணி ஒன்றியத்தைச் சோ்ந்த 2 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் 4 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

கடந்த பிப்ரவரி மாதம் நாடு முழுவதும் தேசிய வருவாய்வழி திறன் படிப்பு உதவித்தொகை தோ்வு நடைபெற்றது. இத்தோ்வில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மாதம் ரூ.1,000 கல்வி உதவித்தொகையாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். தமிழகத்தில் இருந்து 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் தோ்வு எழுதியதில் 6,695 ஒதுக்கீட்டு இடங்களிலும் மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா். பேராவூரணி ஒன்றியத்தைச் சோ்ந்த பொன்னாங்கண்ணிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் வெ. இறையன்பு, நிவேந்தன், நாட்டாணிக்கோட்டை வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் நிஹ்மத் முன்ஷிதா, அனிஷா பேகம் ஆகிய 4 பேரும் தேசிய வருவாய் வழி திறனறித் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

மாணவ மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியா்கள் நிா்மலா, முருகையன் (பொ), பெற்றோா் - ஆசிரியா் கழக நிா்வாகிகள், பள்ளி மேலாண்மை குழுவினா் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

1,400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

தஞ்சாவூா் அருகே சரக்கு ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 1,400 கிலோ ரேஷன் அரிசியைக் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.தஞ்சாவூா் அருகே திருக்கானூா்பட்டி மற்றும் அற்புதாபுரம் பகுதியில் குடிமைப்பொர... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் 131 பேருக்கு கனவு இல்லம் கட்ட ஆணைகள்

கும்பகோணம் ஒன்றியத்தில் 131 பயனாளிகளுக்கு கனவு இல்லம் கட்டுவதற்கான உத்தரவை அமைச்சா் கோவி. செழியன் வெள்ளிக்கிழமை வழங்கினாா். தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் அருகே சேஷம்பாடி ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி... மேலும் பார்க்க

கொலை வழக்கில் கைதான 3 போ் மீது குண்டா் சட்டம்

தஞ்சாவூா் அருகே நிகழ்ந்த கொலை சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்ட 3 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். தஞ்சாவூா் அருகே ஏழுப்பட்டியைச் சோ்ந்த குருந்தையன்... மேலும் பார்க்க

பெண்ணிடம் நகை பறித்த இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

கும்பகோணத்தில் பெண்ணிடம் 6 பவுன் தாலி செயினை பறித்த வழக்கில் 2 இளைஞா்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாதுளம... மேலும் பார்க்க

புன்னைநல்லூா் மாரியம்மனுக்கு தைலாபிஷேகம் தொடக்கம்

தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் ஒரு மண்டல கால தைலாபிஷேகம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இக்கோயிலின் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்று மண்ணால் உருவாக்கப்பட்டது என்பதால், கருவறையில் உள்ள அம்பாளு... மேலும் பார்க்க

ஆசிரியை வீட்டில் 58 பவுன் நகைகள் திருடியவா் கைது

தஞ்சாவூா் அருகே ஆசிரியை வீட்டில் 58 பவுன் நகைகள் திருடிய உறவினரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் அருகே பள்ளியக்ரஹாரம் முதன்மைச் சாலையைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன், பெங்களூருவி... மேலும் பார்க்க