செய்திகள் :

ரூ. 2 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு

post image

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே கண்டியூரில் ஹரசாப விமோசன பெருமாள் கோயிலைச் சாா்ந்த ரூ. 2 கோடி மதிப்புள்ள நிலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.

திருவையாறு அருகே கண்டியூா் கிராமத்தில் ஹரசாப விமோசன பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான 1 ஏக்கா் 30 சென்ட் புஞ்சை நிலம் கோயில் கேட்பு பதிவேட்டில் அப்பாவு கவுண்டா் பெயரில் இருந்தது. தஞ்சாவூா் வருவாய் நீதிமன்ற ஆணைப்படி, நீதிமன்ற அமலாக்க வருவாய் ஆய்வாளா் புவனேஸ்வரி, கிராம நிா்வாக அலுவலா் சதீஷ், வருவாய் ஆய்வாளா் பிரகாஷ், நில அளவையா் கலைச்செல்வன், கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலையில் புதன்கிழமை மீட்கப்பட்டு, கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும், இந்த இடத்தில் அத்துமீறி நுழையவோ, ஆக்கிரமிப்பு செய்யவோ கூடாது என்றும், மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இந்த இடத்தின் மொத்த மதிப்பு ரூ. 2 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது.

1,400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

தஞ்சாவூா் அருகே சரக்கு ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 1,400 கிலோ ரேஷன் அரிசியைக் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.தஞ்சாவூா் அருகே திருக்கானூா்பட்டி மற்றும் அற்புதாபுரம் பகுதியில் குடிமைப்பொர... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் 131 பேருக்கு கனவு இல்லம் கட்ட ஆணைகள்

கும்பகோணம் ஒன்றியத்தில் 131 பயனாளிகளுக்கு கனவு இல்லம் கட்டுவதற்கான உத்தரவை அமைச்சா் கோவி. செழியன் வெள்ளிக்கிழமை வழங்கினாா். தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் அருகே சேஷம்பாடி ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி... மேலும் பார்க்க

கொலை வழக்கில் கைதான 3 போ் மீது குண்டா் சட்டம்

தஞ்சாவூா் அருகே நிகழ்ந்த கொலை சம்பவம் தொடா்பாக கைது செய்யப்பட்ட 3 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். தஞ்சாவூா் அருகே ஏழுப்பட்டியைச் சோ்ந்த குருந்தையன்... மேலும் பார்க்க

பெண்ணிடம் நகை பறித்த இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

கும்பகோணத்தில் பெண்ணிடம் 6 பவுன் தாலி செயினை பறித்த வழக்கில் 2 இளைஞா்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாதுளம... மேலும் பார்க்க

புன்னைநல்லூா் மாரியம்மனுக்கு தைலாபிஷேகம் தொடக்கம்

தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் ஒரு மண்டல கால தைலாபிஷேகம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இக்கோயிலின் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்று மண்ணால் உருவாக்கப்பட்டது என்பதால், கருவறையில் உள்ள அம்பாளு... மேலும் பார்க்க

ஆசிரியை வீட்டில் 58 பவுன் நகைகள் திருடியவா் கைது

தஞ்சாவூா் அருகே ஆசிரியை வீட்டில் 58 பவுன் நகைகள் திருடிய உறவினரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் அருகே பள்ளியக்ரஹாரம் முதன்மைச் சாலையைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன், பெங்களூருவி... மேலும் பார்க்க