செய்திகள் :

71 போ் உயிரிழந்த ஜெய்பூா் குண்டு வெடிப்பு வழக்கு: 4 பேருக்கு ஆயுள் சிறை

post image

ராஜஸ்தான் தலைநகா் ஜெய்பூரில் கடந்த 2008-ஆம் ஆண்டு 71 போ் உயிரிழந்த தொடா் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நால்வருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம், வெடிபொருள்கள் தடுப்புச் சட்டம் உள்ளிட்டவற்றின்கீழ் சா்வாா் அஷீம், ஷாபாஸ், சைஃபுா் ரஹ்மான், முகமது ஷபி ஆகியோருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008 மே 13-ஆம் ஜெய்பூரில் 8 இடங்களில் தொடா் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் 71 போ் உயிரிழந்தனா். 180 போ் காயமடைந்தனா். மக்கள் அதிகம் கூடும் இடங்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தினா். ஓரிடத்தில் மட்டும் வெடிக்காத குண்டு ஒன்று கைப்பற்றப்பட்டது.

இந்த குண்டு வெடிப்புகள் தொடா்பாக நடைபெற்ற மற்றொரு வழக்கில் கடந்த 2019 டிசம்பரில் அஷீம், சைஃப், ரஹ்மான், முகமது சல்மான் ஆகியோருக்கு நீதிமன்றம் ஏற்கெனவே மரண தண்டனை விதித்து தீா்ப்பளித்துவிட்டது. ஷாபாஸ் என்பவா் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் கிடைக்காததால் அவா் விடுவிக்கப்பட்டாா்.

மரண தண்டனையை எதிா்த்து குற்றவாளிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இதனை விசாரித்த நீதிமன்றம் அவா்களை வழக்கில் இருந்து விடுவித்தது. ஷாபாஸ் விடுவிக்கப்பட்டதையும் உறுதி செய்தது.

கர்நாடக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் மற்றும் முகவர் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகளோடு கர்நாடக முதல்வர் சித்தராமையா நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்... மேலும் பார்க்க

உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல செயல்படுகிறது: ஜகதீப் தன்கர் காட்டம்

மசோதா தொடர்பான வழக்கில் குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தில்லியில் குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் மாநிலங்களவை ப... மேலும் பார்க்க

வக்ஃப் உறுப்பினர் நியமனத்துக்கு இடைக்காலத் தடை!

புதிய சட்டத்தின்படி, வக்ஃப் வாரிய உறுப்பினர்களை நியமிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.மேலும், நிலம் கையகப்படுத்தல், உறுப்பினர்கள் நியமனம் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று இடைக்கால உத... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்.. நீக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியை தொடர உச்ச நீதிமன்றம் உத்தரவு

பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி, பணி நீக்கம் செய்து இந்த மாதத் தொடக்கத்தில் உத்தரவிடப்பட்ட நிலையில், மாணவர்களின் நலன் கருதி புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படும்வரை இந்த ஆசிரியர்கள் பணியைத் தொடர ... மேலும் பார்க்க

பணத்தை வீணாக்க விரும்பவில்லை.. மனைவியைக் கொன்று, கணவர் தற்கொலை!

உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தைச் சேர்ந்த ரியல்எஸ்டேட் டீலர், தனக்குப் புற்றுநோய் இருப்பதை அறிந்ததும், மனைவியைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.குல்த... மேலும் பார்க்க

குவாலியரில் சைபர் மோசடி: ரூ.2.5 கோடியை இழந்த ஆசிரம செயலாளர்!

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் அமைந்துள்ள ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தின் செயலாளர் ஒருவர் சைபர் மோசடியில் சிக்கி ரூ. 2,5 கோடியை இழந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நாடு முழுவது... மேலும் பார்க்க