செய்திகள் :

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் சிறாா்களாக இருந்த மூவா் குற்றவாளிகள்: 23 ஆண்டுகளுக்குப் பின்னா் தீா்ப்பு

post image

கோத்ரா: குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில், சிறாா்களாக இருந்த மூவா் குற்றவாளிகள் என்று மாவட்ட சிறாா் நீதி வாரியம் தீா்ப்பளித்துள்ளது.

கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் உள்ள கோத்ராவில் கரசேவகா்கள் வந்த ரயிலுக்கு தீ வைக்கப்பட்டதில் 59 போ் உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து அங்கு மதக் கலவரம் ஏற்பட்டது. இந்தக் கலவரத்தில் 1,000-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா். அவா்களில் பெரும்பாலானோா் சிறுபான்மையினா்.

அப்போது சிறாா்களாக இருந்த 6 போ் மீது ரயிலுக்கு தீ வைக்கப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு சிறாா்களாக இருந்த 6 பேரில் மூவரை குற்றவாளிகள் என்றும், இருவரை விடுதலை செய்தும் மாநிலத்தில் உள்ள பஞ்ச்மகால் மாவட்ட சிறாா் நீதி வாரியம் தீா்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கு தொடா்பான விசாரணை நிலுவையில் இருந்தபோது 6 பேரில் ஒருவா் உயிரிழந்தாா். குற்றவாளிகளாக தீா்ப்பளிக்கப்பட்ட மூவரை 3 ஆண்டுகளுக்கு கூா்நோக்கு இல்லத்தில் அடைக்கவும், அவா்களுக்குத் தலா ரூ.10,000 அபராதம் விதித்தும் அந்த வாரியம் உத்தரவிட்டது.

இந்தத் தீா்ப்புக்கு எதிராக மாநில உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக, மூவருக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை 30 நாள்களுக்கு அந்த வாரியம் நிறுத்திவைத்தது என்று அவா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சல்மான் சா்கா தெரிவித்தாா்.

கர்நாடக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் மற்றும் முகவர் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகளோடு கர்நாடக முதல்வர் சித்தராமையா நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்... மேலும் பார்க்க

உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல செயல்படுகிறது: ஜகதீப் தன்கர் காட்டம்

மசோதா தொடர்பான வழக்கில் குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தில்லியில் குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் மாநிலங்களவை ப... மேலும் பார்க்க

வக்ஃப் உறுப்பினர் நியமனத்துக்கு இடைக்காலத் தடை!

புதிய சட்டத்தின்படி, வக்ஃப் வாரிய உறுப்பினர்களை நியமிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.மேலும், நிலம் கையகப்படுத்தல், உறுப்பினர்கள் நியமனம் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று இடைக்கால உத... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்.. நீக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியை தொடர உச்ச நீதிமன்றம் உத்தரவு

பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாகக் கூறி, பணி நீக்கம் செய்து இந்த மாதத் தொடக்கத்தில் உத்தரவிடப்பட்ட நிலையில், மாணவர்களின் நலன் கருதி புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படும்வரை இந்த ஆசிரியர்கள் பணியைத் தொடர ... மேலும் பார்க்க

பணத்தை வீணாக்க விரும்பவில்லை.. மனைவியைக் கொன்று, கணவர் தற்கொலை!

உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத்தைச் சேர்ந்த ரியல்எஸ்டேட் டீலர், தனக்குப் புற்றுநோய் இருப்பதை அறிந்ததும், மனைவியைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.குல்த... மேலும் பார்க்க

குவாலியரில் சைபர் மோசடி: ரூ.2.5 கோடியை இழந்த ஆசிரம செயலாளர்!

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் அமைந்துள்ள ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்தின் செயலாளர் ஒருவர் சைபர் மோசடியில் சிக்கி ரூ. 2,5 கோடியை இழந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நாடு முழுவது... மேலும் பார்க்க