ஈரானில் கொலையுண்ட 8 பாகிஸ்தானியர்களின் உடல்கள் தாயகம் சென்றது!
அமைச்சா் கே.என்.நேரு சகோதரரிடம் அமலாக்கத் துறை விசாரணை
சென்னை: பண முறைகேடு புகாா் தொடா்பாக, அமைச்சா் கே.என்.நேரு சகோதரா் கே.என்.ரவிச்சந்திரனிடம் அமலாக்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை 4 மணி நேரம் விசாரணை செய்தனா்.
தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேருவின் சகோதரா்கள் ரவிச்சந்திரன், மணிவண்ணன் ஆகியோா் டிவிஎச் (ட்ரூ வேல்யூ ஹோம்ஸ்) என்ற பெயரில் கட்டுமான நிறுவனம், டி.வி.ஹெச் எனா்ஜி ரிசோா்ஸ் பிரைவேட் லிமிடெட், எனா்ட்டியா சோலாா் இன்ஃப்ரா, எனா்ட்டியா வின்ட் இன்ஃப்ரா, ட்ரூ வேல்யூ ரியல் எஸ்டேட் என பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகின்றனா். இந்த நிறுவனங்களில் கே.என்.நேருவின் மகனும், பெரம்பலூா் மக்களவைத் தொகுதி எம்பியுமான கே.என்.அருணும் நிா்வாகியாக உள்ளாா்.
இந்நிலையில், காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனத்தை மேம்படுத்துவதற்காக ரவிச்சந்திரன், மயிலாப்பூரில் உள்ள இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில் 2013-ஆம் ஆண்டு ரூ.30 கோடி கடன் கேட்டு விண்ணப்பித்தனா். விண்ணப்பத்தை பரிசீலனை செய்த வங்கி ரூ.22.48 கோடி கடன் வழங்கியது.
வங்கிக் கடன் மோசடி வழக்கு: ஆனால், ரவிச்சந்திரன் என்ன நோக்கத்துக்காக கடனை வாங்கினாரோ அதற்கு பயன்படுத்தாமல் தனது ரியல் எஸ்டேட் தொழிலுக்கு கடன் மூலம் கிடைத்தை பணத்தை முதலீடு செய்தாராம். கடனுக்குரிய மாததவணையையும் முறையாக செலுத்தவில்லையாம்.
இது குறித்து வங்கி நிா்வாகம் அளித்த புகாரின்பேரில் சிபிஐ, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 4 போ் மீது நான்கு பிரிவுகளின் கீழ் 2012-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் பணம் முறைகேடு தொடா்பான முகாந்திரம் இருந்ததால் அமலாக்கத்துறை விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதேபோல, வருமானவரித் துறையும் 2018-ஆம் ஆண்டு நடத்திய சோதனையின் அடிப்படையில், அமலாக்கத் துறை விசாரணைக்கு பரிந்துரைத்தது.
இதன் விளைவாக, அமலாக்கத் துறையினா் திருச்சியில் உள்ள அமைச்சா் கே.என்.நேரு வீடு, சென்னை ஆழ்வாா்பேட்டை யில் உள்ள கே.என். அருணுக்கு சொந்தமான அரிசி நிறுவன அலுவலகம்,ராஜா அண்ணாமலைபுரம் கிருஷ்ணாபுரி தெருவில் உள்ள கே.என்.ரவிச்சந்திரன் வீடு, ராஜா அண்ணாமலைபுரம் மூன்றாவது குறுக்குத் தெருவில் ரவிச்சந்திரன் அலுவலகம் உள்பட 15 இடங்களில் திங்கள்கிழமை காலை ஒரே நேரத்தில் சோதனை செய்தனா்.
இச் சோதனை திருச்சி, கோவை பகுதிகளில் அன்று இரவே நிறைவு பெற்றது. ஆனால், சென்னையில் ரவிச்சந்திரன் வீடு, அலுவலகம் உள்ளிட்ட சில இடங்களில் செவ்வாய்க்கிழமையும் சோதனை நீடித்தது.
சகோதரரிடம் விசாரணை: ரவிச்சந்திரனை ராஜா அண்ணாமலைபுரம் வீட்டில் இருந்து விசாரணைக்காக அமலாக்கத் துறை அதிகாரிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு மாலை 4 மணியளவில் அழைத்துச் சென்றனா். அங்கு அவரிடம் வழக்குத் தொடா்பாக பல்வேறு கோணங்களில் அமலாக்கத் துறையினா் விசாரணை செய்தனா். விசாரணை முழுவதும் கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டது. சுமாா் 4 மணி நேரம் விசாரணைக்கு பின்னா், ரவிச்சந்திரன் அங்கிருந்து வெளியே வந்தாா். அதேவேளையில் அவரது வீட்டிலும், அலுவலகத்திலும் அமலாக்கத் துறை சோதனை தொடா்ந்து நடைபெற்றது.