செய்திகள் :

மசூதியில் காவிக் கொடிகளுடன் ஏறி கோஷமிட்ட ஹிந்து அமைப்பினர்!

post image

உத்தரப் பிரதேசத்தில் உள்ள மசூதியில் ஹிந்து அமைப்பினர் காவிக் கொடிகளுடன் ஏறியதால் பதற்றம் நிலவியது.

ஹிந்துக்களின் பண்டிகையான ராம நவமி நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் வகுப்புவாத கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக ஹிந்து அமைப்பினர் நடந்துகொண்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரயாக்ராஜில் பல இடங்களில் ராம நவமி கொண்டாடப்பட்ட நிலையில், சிக்கந்தரா பகுதியில் இருக்கும் சையத் சலார் காசி தர்காவில் நேற்று ஹிந்து அமைப்பினர் காவிக் கொடிகளுடன் ஏறி கோஷமிட்டுள்ளனர்.

அந்தப் பகுதியில் பேரணி சென்ற ஹிந்து அமைப்பினர் திடீரென தர்காவின் மீது ஏறி ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என கத்தியபடியே கொடிகளை அங்கு கட்ட முயன்றுள்ளனர். மேலும், தர்காவுடன் கூடிய அந்த மசூதியை இடித்து கோவில் கட்டவேண்டும் என்றும் கூறி கோஷமிட்டுள்ளனர்.

இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவியதைத் தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து ஹிந்து அமைப்பினரை தர்காவில் இருந்து வெளியேற்றினர்.

மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்வதாக காவல்துறையினர் உறுதியளித்தனர்.

இதையும் படிக்க | மசூதியில் ஜெலட்டின் குச்சிகளை வெடிக்க வைத்த இருவா் மீது பயங்கரவாத வழக்கு

மேற்குவங்கத்தில் வக்ஃப் திருத்த மசோதா அமல்படுத்தப்படாது: மமதா பானர்ஜி

மேற்கு வங்கத்தில் வக்ஃப் வாரிய திருத்த மசோதா அமல்படுத்தப்படாது என்று முதல்வர் மமதா பானர்ஜி கூறியுள்ளார். கொல்கத்தாவில் ஜெயின் சமூகத்தினரிடையே பேசிய முதல்வர் மமதா பானர்ஜி, சிறுபான்மையின மக்களையும் அவர்... மேலும் பார்க்க

பவன் கல்யாண் மகன் மார்க் சங்கர் எப்படியிருக்கிறார்?

சிங்கப்பூரில், பள்ளி இயங்கி வந்த கட்டடத்தில் நேரிட்ட தீ விபத்தில் 10 வயது சிறுமி பலியான நிலையில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மகன் மார்க் சங்கர் உள்பட 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு - காஷ்மீரின் உதம்பூரில் நடைபெற்று வரும் துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண... மேலும் பார்க்க

ஜிப்லி புகைப்படம் வேண்டுமா? காவல்துறை எச்சரிக்கை

அண்மை நாள்களாக, ஜிப்லி செய்யறிவு கலை மூலம் தங்களது புகைப்படங்களை மாற்றி அந்த ஜிப்லி புகைப்படங்களை பலரும் பகிர்ந்து வருகிறார்கள். ஆனால், நிச்சயமாக ஜிப்லி புகைப்படங்கள் வேண்டுமா என்று சிந்திக்குமாறும், ... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் வேலையிழந்த ஆசிரியர்கள் போராட்டம்! போலீசார் தடியடி நடத்தியதாக குற்றச்சாட்டு!

மேற்கு வங்கத்தில் முறைகேடு புகாரில் வேலையிழந்த ஆசிரியர்கள் அந்த மாநில அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு வங்​கத்​தில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆசிரியர்​களை நியமனம் செய்​த​தில் முறை​கேட... மேலும் பார்க்க

ரூ. 63,000 கோடியில் 26 ரஃபேல் விமானங்கள்: மத்திய அரசு ஒப்புதல்!

இந்திய கடற்படைக்காக 26 ரஃபேல் போா் விமானங்களை பிரான்ஸ் அரசிடம் கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவைக் குழு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த மாத இறுதியில்... மேலும் பார்க்க