செய்திகள் :

18 அமெரிக்க டிரோன்களைச் சுட்டு வீழ்த்தியுள்ளதாக யேமனின் ஹவுதி படை அறிவிப்பு!

post image

கடந்த 2023-ம் ஆண்டு முதல் 18 அமெரிக்க அதிநவீன டிரோன்களைச் சுட்டு வீழ்த்தியுள்ளதாக யேமனின் ஹவுதி கிளர்ச்சிப்படையினர் அறிவித்துள்ளனர்.

யேமன் நாட்டின் அல்-ஜாவ்ஃப் மாகாணத்தின் மீது கடந்த ஏப்.3 அன்று பறந்த அமெரிக்காவின் எம்.க்யூ.-9 ரக டிரோனை உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தரையிலிருந்து வானில் தாக்கும் ஏவுகணையைக் கொண்டு தகர்த்துள்ளதாக ஹவுதி கிளர்ச்சிப்படையின் செய்தித் தொடர்பாளர் யஹியா சரீயா தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், கடந்த 2023-ம் ஆண்டு காஸா மீதான இஸ்ரேலின் போர் துவங்கியதிலிருந்து யேமன் மீது பறந்த 18 டிரோன்களைச் சுட்டு வீழ்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து யஹியா சரீயா கூறுகையில், தற்போது சுட்டு வீழ்த்தப்பட்டுள்ள எம்.க்யூ.9 ரக டிரோன்கள் யேமன் நாட்டு மக்களுக்கு மிகவும் பழக்கமானதுதான் என்றும் இவை கடந்த 2023 அக்டோபர் முதல் தங்கள் நாட்டின் வட மாகணங்கள் மீது நாள்தோறும் பறந்துக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பானது நேற்று (ஏப்.8) ஹவுதி படைகளைக் குறிவைத்து யேமன் தலைநகர் சனா, ஹொதெய்தா ஆகிய நகரங்கள் மற்றும் மரிப், தமார், இப் ஆகிய மாகாணங்கள் மீதும் அமெரிக்கா 50-க்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்கள் நடத்திய சில மணி நேரங்களுக்கு பிறகு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்களினால் ஹொதெய்தா குடியிருப்புப் பகுதிகளில் ஒரு கர்ப்பிணி பெண் உள்பட 6 பேர் கொல்லப்பட்டதுடன் குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட16 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இருப்பினும், காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் நிறுத்தப்படும் வரை பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக தாங்கள் செயல்படுவோம் என்றும் அமெரிக்க போர்கப்பல்கள் மீதான தங்களது தாக்குதல்கள் தொடரும் எனவும் ஹவுதி படையினர் எச்சரித்துள்ளனர்.

முன்னதாக, கடந்த மார்ச் 15 முதல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறித்து காஸா மீதான தனது தாக்குதல்களை இஸ்ரேல் தொடர்ந்துள்ள நிலையில் இஸ்ரேல் மீது ஹவுதி படைகள் தாக்குதல் நடத்தாமல் தடுக்க யேமன் மீது அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:ரஷிய வெற்றி நாள்: பிரதமர் மோடிக்கு புதின் அழைப்பு!

வக்ஃப் சட்டம்: திட்டமிட்டபடி நாளை(ஏப். 18) ஆர்ப்பாட்டம்! - இந்திய யூனியன் முஸ்லீம் லீக்

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக திட்டமிட்டபடி தமிழகத்தில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நாளை(ஏப். 18) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக தில்லியில் குடியேறிய 8 வங்கதேசத்தினர் கைது!

சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய 8 வங்கதேசத்தினர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தெற்கு தில்லியின் காட்வாரியா சாராய் பகுதியில் சட்டவிரோதமாக குடியேறி வாழ்ந்து வந்த பாபியா காத்தூன் (வயது 3... மேலும் பார்க்க

ஆளுநர் ஆர்.என். ரவி திடீர் தில்லி பயணம்!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திடீரென இன்று(வியாழக்கிழமை) தில்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்... மேலும் பார்க்க

ஈரானில் கொலையுண்ட 8 பாகிஸ்தானியர்களின் உடல்கள் தாயகம் சென்றது!

ஈரான் நாட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட 8 பாகிஸ்தானியர்களின் உடல்கள் அவர்களது தாயகம் கொண்டு செல்லப்பட்டது.பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த 8 பேர் ஈரானின் சிஸ்தான் மாகாணத்தின் மெஹ்ர்ஸ்தான் மாவட்டத்த... மேலும் பார்க்க

வாணியம்பாடி அருகே பழமை வாய்ந்த சிவன் கோயிலில் இளையராஜா சுவாமி தரிசனம்

வாணியம்பாடி அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஸ்ரீ பிரஹன்நாயகி சமேத அதிதீஸ்வரர் சிவன் ஆலயத்தில் இசையமைப்பாளா் இளையராஜா வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பழைய... மேலும் பார்க்க

நாத்திகம் பெயரில் நாடகமாடும் கூட்டத்துக்கு மக்கள் பாடம் புகட்டுவாா்கள்: அண்ணாமலை

சென்னை: ஹிந்து மத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதை இனியும் தொடா்ந்தால், மக்கள் சரியான பாடம் புகட்டுவாா்கள் என தமிழக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.திமுக அமைச்சா்களிடையே, முதல்வா் குடும்ப... மேலும் பார்க்க