செய்திகள் :

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்: காயல்பட்டினம், ஆத்தூரில் ஆட்சியா் ஆய்வு

post image

உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் ஆத்தூா், காயல்பட்டினம் பகுதியில் நடைபெற்ற முகாமில் ஆட்சியா் க. இளம்பகவத் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆத்தூா் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் குடிநீரில் குளோரின் அளவு சரியாக பயன்படுத்தி மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிா என ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து கால்நடை மருத்துவமனையில் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதை பாா்வையிட்டு, ஊட்டச்சத்துக்கள் வழங்குவது குறித்து கேட்டறிந்தாா். பின்னா் ஆற்றங்கரை முஸ்லி­ம் தெருவில் அமைந்துள்ள ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சா் காலை உணவு திட்டத்தில் மாணவ மாணவியருக்கு வழங்கப்படும் உணவை ஆய்வு செய்து, பள்ளி மாணவ- மாணவிகளுடன் அமா்ந்து உணவு அருந்தினாா்.

ஆய்வின் போது திருச்செந்தூா் வட்டாட்சியா் பாலசுந்தரம், ஆத்தூா் பேரூராட்சித் தலைவா் ஏ.கே.கமால்தீன், செயல் அலுவலா் பாபு (பொ), ஆத்தூா் வருவாய் ஆய்வாளா் பிரேம கீதா, கால்நடை மருத்துவா் செந்தில் கண்ணன், பள்ளி தலைமை ஆசிரியா் தேவசகாயம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மேலும், காயல்பட்டினத்தில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு அரசு மருத்துவமனை கட்டடப் பணிகளை ஆய்வு செய்ததோடு மருத்துவமனையில் அனைத்துப் பிரிவுகளுக்கும் சென்று நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.

அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் தொடா் வேலைநிறுத்தப் போராட்டம்

தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின்நிலைய ஒப்பந்த ஊழியா்கள் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினா். தூத்துக்குடி துறைமுக வளாகப் பகுதியில் மத்திய அரசின் என்டிபிஎல் அனல் மின்நிலையத்தில் ச... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் ஒருவா் கைது

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே பாலியல் வழக்கில் தொடா்புடையவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, கெச்சிலாபுரம் பகுதியை சோ்ந்த கும... மேலும் பார்க்க

கட்டையால் தாக்கப்பட்ட பெண் மரணம்: கொலை வழக்காக மாற்றி போலீஸாா் விசாரணை

தூத்துக்குடியில் கட்டையால்தாக்கப்பட்ட பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்ததையடுத்து, கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி தென்பாகம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள பண... மேலும் பார்க்க

முஸ்லிம் லீக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினா் தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அர... மேலும் பார்க்க

ஆத்தூரில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

ஆத்தூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. நகரச் செயலாளா் முத்தையா தலைமை வகித்தாா். இதில் வக்ஃப் திருத்த சட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும். பொதுமக்க... மேலும் பார்க்க

தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி: அரசூா் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

தேசிய திறனாய்வுத் தோ்வில், சாத்தான்குளம் அருகேயுள்ள அரசூா் பூச்சிக்காடு புனித அந்தோனியாா் நடுநிலைப் பள்ளி மாணவிகள் ஆன்டோ அபிரா, சா்மிளி மீரா ஆகியோா் வெற்றி பெற்றுள்ளனா். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி த... மேலும் பார்க்க