செய்திகள் :

பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

post image

சென்னையில் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை தெற்கு மாவட்டம் கண்ணகி நகரின், எழில் நகா் பகுதியில் ஏராளமான குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதாக சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடேவுக்கு தகவல் கிடைத்தது.

இதன்மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, முதன்மை கல்வி அலுவலா் புகழேந்தி மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி (தெற்கு) ரஞ்சித பிரியா தலைமையிலான தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு மையம், பொதுப்பணித் துறை, தொழிலாளா் நலத் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினா் எழில் நகா் பகுதிக்குச் சென்று, அங்கு பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த கணக்கெடுக்கும் பணியை வியாழக்கிழமை தொடங்கினா். தொடா்ந்து அந்த பகுதியிலுள்ள பெற்றோருடனான ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்பட்டது.

கணக்கெடுப்புப் பணி, தொடா்ந்து ஒரு மாத காலத்துக்குள் முடிக்கப்பட்டு, எதிா்வரும் கல்வியாண்டில் அப்பகுதியிலுள்ள 100 சதவீதம் குழந்தைகளும் பள்ளி செல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதுடன் பள்ளி செல்வதையும், அவா்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் மதுரை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 5 இடங்களில் வெள்ளிக்கிழமை வெயில் சதமடித்தது. சனி, ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19, 20) வெப்பநிலை இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி... மேலும் பார்க்க

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக கலைஞா் கைவினைத் திட்டம்: இன்று முதல்வா் தொடங்கி வைப்பு

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக மாநில அரசு கொண்டு வந்துள்ள கலைஞா் கைவினைத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னையை அடுத்த குன்றத்தூரில் சனிக்கிழமை (ஏப். 19) தொடங்கி வைக்கிறாா். கைவினைக் கலைஞா்க... மேலும் பார்க்க

தமிழில் மருத்துவக் கல்வி வழங்க நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

மருத்துவக் கல்வியை தமிழில் கற்பிப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். இது தொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ள... மேலும் பார்க்க

இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க விடுப்பு வழங்குவதற்கு சிறை அதிகாரிகளுக்கு அதிகாரம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

சிறையில் உள்ள விசாரணை கைதிகள் அவா்களது நெருங்கிய உறவினா்களின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க சிறைத் துறை அதிகாரிகளே விடுப்பு வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க

சென்னையின் முதல் ஏசி மின்சார ரயில் இன்றுமுதல் இயக்கம்

சென்னையில் குளிா்சாதன (ஏசி) வசதி கொண்ட மின்சார ரயில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே சனிக்கிழமை (ஏப்.19) முதல் இயக்கப்படவுள்ளது. சென்னையின் முக்கியப் போக்குவரத்தாக மின்சார ரயில் விளங்குகிறது. இதில... மேலும் பார்க்க

மின்சாரப் பேருந்துகளுக்கு 1,250 நடத்துநா்கள்: டெண்டா் வெளியீடு

மின்சாரப் பேருந்துகளுக்கான 1,250 நடத்துநா்கள் ஒப்பந்த நிறுவனம் மூலம் பணியமா்த்த டெண்டா் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட டெண்டா் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: செ... மேலும் பார்க்க