செய்திகள் :

ரூ. 63,000 கோடியில் 26 ரஃபேல் விமானங்கள்: மத்திய அரசு ஒப்புதல்!

post image

இந்திய கடற்படைக்காக 26 ரஃபேல் போா் விமானங்களை பிரான்ஸ் அரசிடம் கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவைக் குழு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாத இறுதியில், பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சர் செபாஸ்டியன் லெகோர்னு இந்தியா வருகை தரவுள்ளார், அப்போது இரு நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே, இந்திய விமானப்படையின் அம்பாலா மற்றும் ஹஷிமாராவில் உள்ள தளங்களில் 36 ரஃபேல் ஜெட் விமானங்களை இயக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், தற்போது கொள்முதல் செய்யப்படவுள்ள 26 ரஃபேல் கடற்படை போர் விமானங்கள் இந்திய கடற்படைக்கு வழங்கப்படவுள்ளன. முற்றிலும் உள்நாட்டில் கட்டப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் போா்க் கப்பலில் இருந்து 26 விமானங்களும் இயக்கப்படவுள்ளன.

தற்போது ஐஎன்எஸ் விக்ராந்த்தில் இயக்கப்பட்டு வரும் மிக்-29கே ரக போர் விமானங்கள், தொடர்ந்து ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவில் இருந்து இயக்கப்படவுள்ளன.

மொத்தம் ரூ. 63,000 கோடி மதிப்பில் 22 ஒற்றை இருக்கை ரஃபேல் கடற்படை விமானங்கள் மற்றும் 4 இரண்டு இருக்கை ரஃபேல் கடற்படை விமானங்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. இதில், 10 விமானங்கள் நடுவானில் எரிபொருளை நிரப்பும் வசதியுடன் வடிவமைக்கப்படவுள்ளன.

ஒப்பந்தம் செய்யப்பட்ட தேதியில் இருந்து 5 ஆண்டுகளுக்குள் இந்தியாவிடம் 26 விமானங்களும் ஒப்படைக்கப்படும்.

இதையும் படிக்க : ஜெயலலிதாவுக்கு எதிராகப் பேசியது ஏன்? -ரஜினி விளக்கம்

பாஜக ஆட்சியில் தலித்துகள், பெண்களுக்கு பாதுகாப்பில்லை: ராகுல் காந்தி

பாஜக ஆட்சியில் தலித்துகள் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் காது கேளாத, வாய் பேச முடியாத 11 வயது தலித் சிறுமி செவ்வாயன்று (ஏப். 15) காணாமல் போனார், ... மேலும் பார்க்க

விவசாயிகளிடம் 31 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை, 5 லட்சம் மெட்ரிக் டன் கடுகு கொள்முதல்!

சண்டிகர்: ஹரியாணாவில் விவசாயிகளிடமிருந்து முழுவதும் மொத்தம் 31.52 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கிய கொள்முதல் இன்று வரை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாய... மேலும் பார்க்க

மாநிலத்தை இந்திமயமாக்கினால் போராட்டம் வெடிக்கும்! பாஜக அரசுக்கு எதிர்க்கட்சி கண்டனம்!

மகாராஷ்டிரத்தில் இந்தி திணிப்புக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.மகாராஷ்டிரத்தில் ஆங்கிலவழி பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மாநில அரச... மேலும் பார்க்க

கர்நாடக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் மற்றும் முகவர் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகளோடு கர்நாடக முதல்வர் சித்தராமையா நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்... மேலும் பார்க்க

உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல செயல்படுகிறது: ஜகதீப் தன்கர் காட்டம்

மசோதா தொடர்பான வழக்கில் குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தில்லியில் குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் மாநிலங்களவை ப... மேலும் பார்க்க

வக்ஃப் உறுப்பினர் நியமனத்துக்கு இடைக்காலத் தடை!

புதிய சட்டத்தின்படி, வக்ஃப் வாரிய உறுப்பினர்களை நியமிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.மேலும், நிலம் கையகப்படுத்தல், உறுப்பினர்கள் நியமனம் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று இடைக்கால உத... மேலும் பார்க்க