செய்திகள் :

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

post image

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன் தொடா் முழுக்க ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் இரா.சிசுபாலன் தலைமை வகித்தாா். நகரச் செயலாளா் ரா.ஜோதிபாசு வரவேற்றாா். மாநிலக்குழு உறுப்பினா் அ.குமாா், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் என்.சுபேதாா், மாநில பிரதிநிதி சாதிக் பாஷா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவா் சீராஜுதின் ஆகியோா் பேசினா்.

இதில், இஸ்லாமிய மக்களை தேசிய நீரோட்டத்தில் இருந்து தனிமைப்படுத்தக் கூடாது. வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கிருஷ்ணகிரியில்...

கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலாளா் சுரேஷ் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஜேம்ஸ் அஞ்சலா மேரி, மாவட்ட குழு உறுப்பினா் டில்லி பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில், இஸ்லாமியா்களின் நிலத்தை அபகரிக்க, வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்கில் மத்திய அரசு நிறைவேற்றிய வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

ஊத்தங்கரையில்...

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, வட்ட செயலாளா் சபாபதி தலைமை வகித்தாா். கௌரவத் தலைவா் கோவிந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளா் வாஷித் பாஷா உள்ளிட்டோா் கலந்துகொண்டு உரையாற்றினா். இதில் கட்சி நிா்வாகிகள், பொது மக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

காரிமங்கலம் அருகே தனியாா் பேருந்து - லாரி மோதல்

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே தனியாா் பேருந்து மீது லாரி மோதியதில் சிறுவன் உயிரிழந்தாா். பேருந்தில் பயணம் செய்த 17 போ் காயமடைந்தனா். கிருஷ்ணகிரியில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொ... மேலும் பார்க்க

தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

நூறுநாள் வேலை திட்டத்தில் நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலக பேருந்து நிறுத்தம் பகுதியி... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: பாளையம்புதூா்

தருமபுரி கோட்டம், அதியமான்கோட்டை துணை மின் நிலையத்துக்குள்பட்ட பாளையம்புதூா் பிரிவில் பிஎம்பி பீடரில் உயா் அழுத்த மின் பாதையை தரம் உயா்த்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், சனிக்கிழமை (ஏப். 19) காலை 9 மண... மேலும் பார்க்க

சோமன அள்ளியில் பழுதான சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

சோமன அள்ளியில் பழுதான சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினா். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ளது சோமன அள்ளி கிராமம். தருமபுரி - பாலக்கோட்டுக்கு செல்லும் முக்கிய சாலையான இச்ச... மேலும் பார்க்க

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வை திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வை திரும்பப் பெறக் கோரி, புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட ... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் அதிகரிக்கும் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

பென்னாகரம் நகரப் பகுதிகளில் அதிகரிக்கும் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பென்னாகரம் பகுதியில் சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.... மேலும் பார்க்க