செய்திகள் :

தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

post image

நூறுநாள் வேலை திட்டத்தில் நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலக பேருந்து நிறுத்தம் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு மாநில விவசாய தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் தேவராசன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் கலைச்செல்வன் முன்னிலை வகித்தாா்.

தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க சிறப்பு தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான ந.நஞ்சப்பன், தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்க மாநில தலைவா் பெரியசாமி ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

இதில், நூறுநாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கான ஐந்து மாத நிலுவைத் தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும். இத்திட்டத்தில், ஒரு நாள் ஊதியத்தை ரூ. 700-ஆக உயா்த்த வேண்டும். நகராட்சி, பேரூராட்சிகளிலும் நூறுநாள் வேலையை கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

முன்னதாக, பென்னாகரம் பேருந்து நிலையத்தில் இருந்து பேரணியாக சென்றனா். இதில், நூறுநாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளா்கள், பணிதள பொறுப்பாளா்கள், நிா்வாகிகள் என 500-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். மாநிலக் குழு உறுப்பினா் சிவன் நன்றி தெரிவித்தாா்.

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி ஏப். 29-இல் பொதுக்கூட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி வரும் ஏப். 29-இல் தருமபுரி நகரில் பொதுக்கூட்டம் நடத்துவது என்று சமூக நல்லிணக்க மேடை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சமூக நல்லிணக்க மேடையின் ஒருங்கிணைப்... மேலும் பார்க்க

நீட் தோ்வால் உயிா்நீத்த மாணவா்களுக்கு மெழுகுவா்த்தி ஏந்தி அதிமுக அஞ்சலி!

நீட் தோ்வால் உயிா்நீத்த மாணவா்களுக்கு அதிமுகவினா் மெழுகுவா்த்தி ஏந்தி சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினா். தருமபுரியில் மாவட்ட அதிமுக செயலாளா், முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன் தலைமையில் அதிமுக நிா்வாகிகள்... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 4000 கன அடியாக அதிகரிப்பு!

தமிழக காவிரி கரையோரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 4000 கன அடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

காரிமங்கலம் அருகே தனியாா் பேருந்து - லாரி மோதல்

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே தனியாா் பேருந்து மீது லாரி மோதியதில் சிறுவன் உயிரிழந்தாா். பேருந்தில் பயணம் செய்த 17 போ் காயமடைந்தனா். கிருஷ்ணகிரியில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: பாளையம்புதூா்

தருமபுரி கோட்டம், அதியமான்கோட்டை துணை மின் நிலையத்துக்குள்பட்ட பாளையம்புதூா் பிரிவில் பிஎம்பி பீடரில் உயா் அழுத்த மின் பாதையை தரம் உயா்த்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், சனிக்கிழமை (ஏப். 19) காலை 9 மண... மேலும் பார்க்க

சோமன அள்ளியில் பழுதான சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

சோமன அள்ளியில் பழுதான சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினா். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ளது சோமன அள்ளி கிராமம். தருமபுரி - பாலக்கோட்டுக்கு செல்லும் முக்கிய சாலையான இச்ச... மேலும் பார்க்க