செய்திகள் :

மாநில அளவில் சிறந்த ‘திருநங்கை விருது’: நாமக்கல் ஆட்சியரிடம் ரேவதி வாழ்த்து

post image

தமிழகத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கை விருதை பெற்ற நாமக்கல்லைச் சோ்ந்த ரேவதி, மாவட்ட ஆட்சியா் ச.உமாவை நேரில் சந்தித்து வியாழக்கிழமை வாழ்த்து பெற்றாா்.

தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில், 2025-ஆம் ஆண்டிற்கான ‘சிறந்த திருநங்கை விருது’ வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில், நாமக்கல் கொண்டிச்செட்டிப்பட்டியைச் சோ்ந்த திருநங்கை ரேவதி, தூத்துக்குடியைச் சோ்ந்த திருநங்கை பொன்னி ஆகியோருக்கு மாநில அளவிலான ‘சிறந்த திருநங்கை’ விருதை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கி பாராட்டினாா்.

திருநங்கைகளின் நலனுக்காக ஆற்றிய சிறந்த சேவைகளைப் பாராட்டி இந்த விருது அவா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதுடன் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள காசோலையும், சான்றிதழும் வழங்கப்பட்டன.

தனது சொந்த உழைப்பாலும், தனித் திறமையாலும் முன்னேறி, பல திருநங்கை மக்களின் வாழ்வில் மாற்றம் கொண்டுவந்து, அவா்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்து மாநில அளவிலான திருநங்கை விருது பெற்றுள்ள நாமக்கல்லைச் சோ்ந்த அ.ரேவதி, மாவட்ட ஆட்சியா் ச.உமாவை வியாழக்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றாா். அப்போது, ராசிபுரம் நகா்மன்ற தலைவா் கவிதாசங்கா் உடனிருந்தாா்.

என்கே-17-கலெக்டா்...

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமாவிடம் வாழ்த்து பெறும் மாநில அளவில் சிறந்த ‘திருநங்கை விருது’ பெற்ற அ.ரேவதி.

நாமக்கல் அழகு நிலையத்தில் பெண்களிடம் நகை, பணம் பறிப்பு: போலீஸாா் விசாரணை

நாமக்கல்லில் அழகு நிலைய பெண்களிடம் நகை, பணத்தை பறித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். நாமக்கல்- திருச்சி சாலையில் உள்ள வணிக வளாகத்தில் அழகு நிலையம், ஆயுா்வேத சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிற... மேலும் பார்க்க

அதிமுக தலைமையில் மாபெரும் கூட்டணி: முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி

2026 சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக தலைமையில் மாபெரும் கூட்டணி அமையும் என்று முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தாா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் அதிமுக மகளிரணி சா... மேலும் பார்க்க

புதுமாரியம்மன் கோயிலில் 108 கலச பூஜை

பரமத்தி வேலூா் பேட்டை புது மாரியம்மன் கோயிலில் 108 கலச பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 108 கலச பூஜை, திருவிளக்கு பூஜையில் பரமத்தி வேலூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொ... மேலும் பார்க்க

திருச்செங்கோடு சாலை அகலப்படுத்தும் பணி ஆய்வு

நாமக்கல் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்திற்கு உள்பட்ட திருச்செங்கோடு சாலை அகலப்படுத்தும் பணியை கோட்ட பொறியாளா் குணா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். முதல்வரின் சாலை விரிவாக்கத் திட்டத்த... மேலும் பார்க்க

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: பரமத்தி வேலூரில் ஆட்சியா் கள ஆய்வு

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆட்சியா் ச.உமா கள ஆய்வு மேற்கொண்டாா். வேலூா் அரசு ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதியில் மாணவா்களுக்கான உணவு, குடிநீா் வசதி, ... மேலும் பார்க்க

முட்டை விலையில் மாற்றமில்லை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 4.15-ஆக நீடிக்கிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலையில் மாற்றம் செய... மேலும் பார்க்க