செய்திகள் :

ஜிப்லி புகைப்படம் வேண்டுமா? காவல்துறை எச்சரிக்கை

post image

அண்மை நாள்களாக, ஜிப்லி செய்யறிவு கலை மூலம் தங்களது புகைப்படங்களை மாற்றி அந்த ஜிப்லி புகைப்படங்களை பலரும் பகிர்ந்து வருகிறார்கள். ஆனால், நிச்சயமாக ஜிப்லி புகைப்படங்கள் வேண்டுமா என்று சிந்திக்குமாறும், தேவையில்லாமல் மோசடிகளில் சிக்க வேண்டாம் என்றும் தமிழக காவல்துறையின் சைபர் குற்றப் பிரிவு எச்சரித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் எச்சரிக்கைப் பதிவில்,

ஒரு பயனாளர், தான் எடுத்த செல்ஃபி அல்லது புகைப்படம், குழுப் புகைப்படங்களை செய்யறிவு தொழில்நுட்பத்தில் பதிவிட்டு, அதிலிருந்து ஜிப்லி புகைப்படங்களை பெறுகிறார். ஆனால், ஜிப்லி புகைப்படத்தைச் சுற்றி இருக்கும் அச்சுறுத்தல்களை பயனாளர்கள் மறந்துவிடுகிறார்கள்.

ஒரு பயனாளர், செய்யறிவு தொழில்நுட்பத்தில், தனது புகைப்படத்தைப் பதிவு செய்யும்போது, அது முகங்கள், உணர்வுகள், வெளிப்புறங்கள் என அனைத்தையும் பதிவு செய்துகொள்கிறது. இதனைக் கொண்டு பயனாளரின் ஒப்புதல் இல்லாமலே, செய்யறிவுக்கு உணர்வுகள், முகப்பாவம் குறித்து பயிற்சி அளிக்கப்படலாம்.

மேலும், ஒரு புகைப்படத்தைக் கொடுத்துவிட்டால், அதனை டெலீட் செய்யும் வாய்ப்பும் இல்லை.

மக்கள் எடுக்கும் ஜிப்லி புகைப்படங்கள், பல்வேறு சமூக வலைதளங்களிலும் பரவுகிறது. அதிகாரப்பூர்வமற்ற இணையதளங்களிலும் புழங்குகிறது. இதன் மூலம், ஒருவர் சைபர் குற்றவாளிகளுக்கு இரையாகலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சில இணையதளங்களில் ஜிப்லி தொழில்நுட்பத்தை இலவசமாக டவுன்லோடு செய்துகொள்ளும் வாய்ப்பும் கிடைக்கிறது. இதில் பதிவேற்றும் புகைப்படங்கள் டீப் ஃபேக் புகைப்படங்களாக மாற்றப்பட்டால் என்னவாகும்?

அது மட்டுமல்லாமல், ஜிப்லி தொழில்நுட்பம் என்று வரும் மோசடியாளர்களின் லிங்குகளை கிளிக் செய்து ஏமாறும் அபாயமும் இருப்பதால், கண்டிப்பாக ஜிப்லி புகைப்படம் வேண்டுமா என்பதை உறுதி செய்துகொள்ளுமாறும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

பாஜக ஆட்சியில் தலித்துகள், பெண்களுக்கு பாதுகாப்பில்லை: ராகுல் காந்தி

பாஜக ஆட்சியில் தலித்துகள் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் காது கேளாத, வாய் பேச முடியாத 11 வயது தலித் சிறுமி செவ்வாயன்று (ஏப். 15) காணாமல் போனார், ... மேலும் பார்க்க

விவசாயிகளிடம் 31 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை, 5 லட்சம் மெட்ரிக் டன் கடுகு கொள்முதல்!

சண்டிகர்: ஹரியாணாவில் விவசாயிகளிடமிருந்து முழுவதும் மொத்தம் 31.52 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கிய கொள்முதல் இன்று வரை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாய... மேலும் பார்க்க

மாநிலத்தை இந்திமயமாக்கினால் போராட்டம் வெடிக்கும்! பாஜக அரசுக்கு எதிர்க்கட்சி கண்டனம்!

மகாராஷ்டிரத்தில் இந்தி திணிப்புக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.மகாராஷ்டிரத்தில் ஆங்கிலவழி பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மாநில அரச... மேலும் பார்க்க

கர்நாடக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் மற்றும் முகவர் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகளோடு கர்நாடக முதல்வர் சித்தராமையா நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்... மேலும் பார்க்க

உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல செயல்படுகிறது: ஜகதீப் தன்கர் காட்டம்

மசோதா தொடர்பான வழக்கில் குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தில்லியில் குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் மாநிலங்களவை ப... மேலும் பார்க்க

வக்ஃப் உறுப்பினர் நியமனத்துக்கு இடைக்காலத் தடை!

புதிய சட்டத்தின்படி, வக்ஃப் வாரிய உறுப்பினர்களை நியமிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.மேலும், நிலம் கையகப்படுத்தல், உறுப்பினர்கள் நியமனம் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று இடைக்கால உத... மேலும் பார்க்க