செய்திகள் :

பேட்டிங்கில் ஆணவம் கூடாது, ஐபிஎல் வித்தியாசமானது..! விராட் கோலியின் பேட்டி!

post image

ஆர்சிபியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஜியோ ஹாட்ஸ்டாருக்கு அளித்த பேட்டியில் பேட்டிங்கில் ஈகோ (ஆணவம்) இருக்கக் கூடாது எனக் கூறியுள்ளார்.

மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் தொடக்கம் முதலே அதிரடி காட்டிய வீரர் அரைசதம் கடந்து முடிவில் 67 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இது விராட் கோலி 99-வது டி20 அரைசதமாகவும் ஐபிஎல்-இல் 57ஆவதாகவும் பதிவானது. இதன் மூலம், டி20 போட்டிகளில் 13,000 ரன்கள் குவித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக விராட் கோலி மாறினார்.

இது குறித்து ஜியோ ஹாட்ஸ்டாருக்கு அளித்த பேட்டியில் விராட் கோலி பேசியதாவது:

பேட்டிங்கில் 'ஈகோ' கூடாது

பேட்டிங்கில் ஈகோ (ஆணவம்) இருக்கக் கூடாது. யாரையும் நாம் அதிகமாக நிழலடிப்புச் செய்யவும் முயற்சிக்கக் கூடாது.

எப்போதும் போட்டியின் சூழ்நிலையை உணர்ந்து விளையாட வேண்டும். நான் எப்போதுமே சூழ்நிலைக்கு தகுந்தவாறுதான் விளையாடுவேன். இது குறித்து நானே என்னைப் பெருமையாக நினைப்பேன்.

நான் பேட்டிங்கில் நல்ல ரிதமில் இருந்தால் நானாகவே முன்னெடுத்து விளையாடுவேன்.

வேறு யாராவது நல்ல ரிதமில் விளையாடினால் அவர்கள் முன்னெடுத்து விளையாடுவார்கள்.

ஆர்சிபியில் பெரிய தொடக்கம் கிடைக்கவில்லை

முதல் 3 ஆண்டுகளில் எனக்கு ஆர்சிபியில் டாப் ஆர்டரில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதனால், ஐபிஎல் தொடரில் பெரிதாக தொடங்க முடியவில்லை. ஆனால், 2010 முதல் தொடர்ச்சியாக நன்றாக விளையாட தொடங்கினேன்.

பின்னர், 2011 முதல் தொடர்ச்சியாக நம்.3இல் களமிறங்கினேன். அப்போதுதான் எனது ஐபிஎல் வாழ்க்கை தொடங்கியது.

ஐபிஎல் வித்தியாசமானது

ஐபிஎல் தொடர் கட்டமைக்கப்பட்டிருக்கும் வித்தினால் அது தனித்துவமான மிகவும் சவலானதாக இருக்கிறது.

இது குறுகிய இருதரப்பு தொடர்களாக இல்லாமல், பல வாரங்களில் நடைபெறுகிறது. புள்ளிப் பட்டியலில் மாற்றம் நிகழ்ந்துகொண்டே இருக்கும். அந்த மாற்றம் தொடர்ச்சியாக அழுத்தத்தை அளிக்கும்.

இதனால்தான் மற்ற தொடர்களைவிட ஐபிஎல் தொடரின் இயல்பு நம்மை மன ரீதியாக சவால் அளிக்கும். இதுதான் எனது டி20 திறமையை வளர்க்கிறது என்றார்.

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை பந்துவீச்சு!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 33-வது ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.மும்பை அணி 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ப... மேலும் பார்க்க

சூப்பா் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி!

ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் புதன்கிழமை மோதிய ஆட்டம் ‘டை’ ஆனது. சூப்பா் ஓவரில் டெல்லி வென்றது. நடப்பு சீசனில் ஒரு ஆட்டத்தில் சூப்பா் ஓவா் மூலம் முடிவு எட்டப்ப... மேலும் பார்க்க

தோல்விகளுக்கு முற்றுப்புள்ளியா? தில்லிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு!

ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரின் 32-வது போட்டியாக இன்று தில்லி கேப்பிடல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.தொடர் வெற்றி பெற்று வரும் தில்லி அணி கடைசி... மேலும் பார்க்க

லக்னௌ அணியில் இணைந்த மயங்க் யாதவ்!

லக்னௌ அணியின் வேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் அதன் அணியில் இணைந்தார். கடந்த ஐபிஎல் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய மயங்க் யாதவ் தற்போது மீண்டும் அணியில் இணைந்துள்ளார். இந்திய வீரர்களில் அதிவேகமாக... மேலும் பார்க்க

ஐபிஎல் 2025-இன் சிறந்த பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ்: மோஹித் சர்மா

தில்லி கேபிடல்ஸ் அணியின் சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் இந்த ஐபிஎல் சீசனில் தலைசிறந்த பந்துவீச்சாளர் என மோஹித் சர்மா கூறியுள்ளார். தில்லி கேபிடல்ஸ் அணி 5 போட்டிகளில் 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டி... மேலும் பார்க்க

மக்களின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்..! இந்திய அணியை வழிநடத்த ரசிகர்கள் கோரிக்கை!

ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுவரும் ஷ்ரேயாஸ் ஐயரை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ‘மக்களின் கேப்டன்’ எனப் புகழ்ந்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்திய அணிக்கும் ஷ்ரேயாஸை கேப்டனாக நியமிக்க வேண்... மேலும் பார்க்க