செய்திகள் :

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை பந்துவீச்சு!

post image

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 33-வது ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

மும்பை அணி 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி என்பதால் இவர்கள் மீது எப்போதும் எதிர்பார்ப்புக்கு பஞ்சமிருக்காது. ஆனால், இந்த முறை தொடர் தோல்விகளால் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் கீழே உள்ளது.

தில்லியுடனான கடந்த ஆட்டத்தில் 12 ரன் வித்தியாசத்தில் வென்ற மும்பை அணி தனது கட்டாய வெற்றியை நோக்கி இன்று மைதானத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.

சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா ஆகியோர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால், அதிரடி பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா தொடர்ந்து தடுமாறி வருகிறார். பந்து வீச்சிலும் நல்ல ஆர்டரை வைத்துள்ள இந்த அணி பழைய நிலைக்கு திரும்பவேண்டும் என முயற்சித்து வருகின்றனர்.

முன்னாள் சாம்பியன் ஹைதராபாத் அணியின் மீது இந்த ஐபிஎல் தொடரில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. இந்த அணியின் பேட்டிங் ஆர்டர் மிக சிறப்பாக இருந்ததால் அவர்கள் ரன் மழையைக் குவிப்பார்கள் என அனைவரும் எண்ணிய நிலையில் முன்னதாக விளையாடிய போட்டிகளில் நிலையற்ற ஆட்டத்தையே இவர்கள் வெளிப்படுத்தி வந்தனர்.

பஞ்சாப் அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 246 ரன் இலக்கை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றனர். அபிஷேக் ஷர்மா (55 பந்தில் 141 ரன்), டிராவிஸ் ஹெட் (66 ரன்) ஆகியோரின் ஆட்டம் அணியின் வெற்றிக்கு உதவியது. இதே வேகத்தை இந்த ஆட்டத்திலும் அவர்கள் காட்டினால் இன்று வெற்றி பெறுவார்கள்.

இரு அணிகளும் முன்னதாக ஆடிய 6 ஆட்டங்களில் 4-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. புள்ளிப்பட்டியலில் முன்னேற இரு அணிகளுக்கும் இந்த ஆட்டம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. ஹைதராபாத் அணி தனது பேட்டிங் பலத்தைக் காட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

இதையும் படிக்க | சூப்பா் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி!

சிஎஸ்கேவில் மற்றொரு இளம் வீரர்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மற்றொரு இளம் வீரர் இணைந்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற நிலையில் அடுத்து நடந்த 5 ஆட்டங்களிலும் ... மேலும் பார்க்க

பஞ்சாபுடன் பலப்பரீட்சை: பெங்களூரில் ஆர்சிபி வெல்லுமா?

சொந்த மண்ணில் தொடர்ந்து தோல்வியுறும் ஆர்சிபிக்கு இன்று (ஏப்.18) பெங்களூரில் கடும் சவால் காத்திருக்கிறது.நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு புதிய கேப்டனாக ரஜத் படிதார் தேர்வானார். இவரது தலைமையில் மு... மேலும் பார்க்க

விக்கெட் கீப்பர் செய்த தவறினால் நோ பால்: ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை!

வான்கடே திடலில் நேற்றிரவு (ஏப்.17) நடைபெற்ற போட்டியில் இதற்கெல்லாம் நோ பால் தருவார்களா என ஐபிஎல் ரசிகர்கள் அதிர்ச்சியைந்த சம்பவம் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 16... மேலும் பார்க்க

சிஎஸ்கேவில் இணையும் குட்டி ஏபிடி வில்லியர்ஸ்? வைரலாகும் இன்ஸ்டா பதிவு!

இளம் தென்னாப்பிரிக்க வீரர் டெவால்ட் ப்ரீவிஸ் பகிர்ந்த இன்ஸ்டாகிராம் பதிவு சிஎஸ்கே ரசிகர்களிடம் ஆர்வத்தை தூண்டியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ’குட்டி ஏபிடி’ என்றழைக்கப்படும் டெவால்ட் ப்ரீவிஸ் ... மேலும் பார்க்க

அதிக டாட் பந்துகள்: எதிரணிகளைத் திணறடிக்கும் கலீல் அகமது!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது, இந்த சீசனில் அதிக டாட் பந்துகளை வீசியவர்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.நடப்பாண்டு தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 7... மேலும் பார்க்க

க்ளென் பிலிப்ஸுக்கு மாற்றாக இலங்கை வீரர்!

குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் க்ளென் பிலிப்ஸ் காயத்தினால் வெளியேறியதால் அவருக்குப் பதிலாக இலங்கை வீரர் தசுன் ஷானகா தேர்வாகியுள்ளார்.சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஃபீல்டிங் செய்த க்ளென் பிலிப்ஸ் த... மேலும் பார்க்க