செய்திகள் :

ஆயிரத்தில் ஒருவன் - 2 எப்போது? செல்வராகவன் பதில்!

post image

ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் குறித்து இயக்குநர் செல்வராகவன் பேசியுள்ளார்.

இயக்குநர் செல்வராகவன் - கார்த்தி கூட்டணியில் பிரம்மாண்ட படமாக உருவானது ஆயிரத்தில் ஒருவன். இப்படம் வெளியானபோது கடுமையான எதிர்வினைகளைச் சந்தித்து வணிக ரீதியாகத் தோல்வியடைந்தது. முக்கியமாக, ஈழ பிரச்னையால் இப்படம் விமர்சனங்களையும் எதிர்கொண்டது.

ஆனால், ஆச்சரியமாக காலம் செல்லச் செல்ல ஆயிரத்தில் ஒருவன் படத்தை ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர். இன்றும் ஆண்டிற்கு ஒருமுறை இப்படம் மறுவெளியீடு காண்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பை செல்வராகவன் வெளியிட்டார். இதில், தனுஷ் நாயகனாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், போஸ்டரை தாண்டி மற்ற பணிகள் எதுவும் நடைபெறவில்லை. ரசிகர்கள் ஆயிரத்தில் ஒருவன் - 2 எப்போது, எப்போது என செல்வராகனைக் கேட்கத் துவங்கினர்.

இந்த நிலையில், நேர்காணலில் ஆயிரத்தில் ஒருவன் - 2 குறித்து செல்வராகவனிடம் கேட்கப்பட்டது.

அதற்கு செல்வா, “ ஆயிரத்தில் ஒருவன் - 2 படத்தைத் தயாரிக்க பெரிய தயாரிப்பு நிறுவனம் தேவை. விஎஃப்எக்ஸ் மற்றும் ஏஐ தொழில்நுட்பத்தின் விலை குறைவாக இருப்பதால் இப்படத்தை எடுப்பது இன்னும் சுலபமாக இருக்கும். ஆனால், நான் மட்டும் நினைத்தால் இப்படம் உருவாகாது. அதற்கான நட்சத்திர பட்டாளங்களும் அவர்களிடமிருந்து ஓராண்டு கால்ஷீட்டும் தேவை. இரண்டாம் பாகத்தில் தனுஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆனால், கார்த்தி இல்லாமல் இப்படம் உருவாகாது” என்றார்.

இதையும் படிக்க: மலையாளத்தில் நல்ல திரைப்படங்கள் உருவாக இதுதான் காரணம்: கலித் ரஹ்மான்

72 படங்களில் 5 படம்தான் ஹிட்!

இந்தாண்டில் இதுவரை வெளியான தமிழ்ப் படங்களில் சில படங்களே வணிக வெற்றியைப் பெற்றுள்ளன. ஆண்டிற்கு ஆண்டு திரைப்படங்களின் எண்ணிக்கையும் அறிமுக இயக்குநர்களின் வருகையையும் அதிகம் கொண்ட தமிழ் சினிமாத்துறையில்... மேலும் பார்க்க

பக்தர்கள் வெள்ளத்தில் பவனி வந்த ஆழித்தேர்: திரளானோர் பங்கேற்பு!

திருவாரூரில் தியாகராஜ சுவாமிகள் கோயிலின் ஆழித் தேரோட்டம் இன்று காலை வெகு விமரிசையாகத் தொடங்கியது. நான்கு வீதிகளிலும் பவனிவந்த ஆழித்தேரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். ஆண்டுதோறும் ... மேலும் பார்க்க

மோகன்லாலின் துடரும் வெளியீட்டுத் தேதி!

நடிகர் மோகன்லாலின் துடரும் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் மோகன்லால். அண்மையில், இவர் நடிப்பில் வெளியான எம்புரான்திரைப்படம் ரூ. 250 க... மேலும் பார்க்க

பன்றி மேய்ப்பவரை வில்லனாகக் காட்டியதற்கு மன்னிப்புக் கேட்கிறேன்: வசந்த பாலன்

பன்றி மேய்ப்பவரை வில்லனாகக் காட்டியதற்காக மன்னிப்புக் கேட்பதாக இயக்குநர் வசந்த பாலன் தெரிவித்துள்ளார். நீலம் பண்பாட்டு மையம் சார்பாக இயக்குநர் பா. இரஞ்சித் ஒவ்வொரு ஆண்டும் கலை நிகழ்ச்சிகளையும் திரைப்ப... மேலும் பார்க்க

ஆட்டோகிராஃப் - மறுவெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

இயக்குநர் சேரனின் ஆட்டோகிராஃப் திரைப்படத்தின் மறு வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் சேரன் சொந்தமாகத் தயாரித்து, இயக்கி, நடித்தத் திரைப்படம் ‘ஆட்டோகிராஃப்’. இந்தப் படத்தில் சினேகா, கோபி... மேலும் பார்க்க

இலுப்பக்கோரை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு!

இலுப்பக்கோரை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயம் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ... மேலும் பார்க்க