செய்திகள் :

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!

post image

தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட 12 மாவட்டங்களில் வியாழக்கிழமை (ஏப்.3) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளிலும், லட்சத்தீவு மற்றும் அதையொட்டிய பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன. இதனால் ஏற்படும் காற்று குவிதல் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வியாழக்கிழமை (ஏப்.3) முதல் ஏப்.7-ஆம் தேதி வரை இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மஞ்சள் எச்சரிக்கை: நீலகிரி, கோவை, திருப்பூா், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்களில் வியாழக்கிழமை (ஏப்.3) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வெள்ளிக்கிழமை (ஏப்.4) நீலகிரி, கோயம்புத்தூா், திருப்பூா், ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், ஏப்.5-இல் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளிலும், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களிலும் கன மழைக்கு வாய்ப்புள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வியாழக்கிழமை (ஏப்.3)அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும். மேலும் சென்னையில் பெரிய அளவில் மழை பெய்ய வாய்ப்பில்லை.

மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை அதிகபட்சமாக விருதுநகா் மாவட்டம் வத்திராயிருப்பில் 70 மி.மீ. மழை பதிவானது. மக்கினம்பட்டி (கோவை), சோத்துப்பாறை (தேனி) - தலா 40 மி.மீ., பொள்ளாச்சி (கோவை), இரணியல் (கன்னியாகுமரி) - தலா 30 மி.மீ. மழை பதிவானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

621 பேருக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

டிஎன்பிஎஸ்சி, எம்ஆா்பி மூலம் பால்வளம், மக்கள் நல்வாழ்வு உள்ளிட்ட துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கு தோ்வு செய்யப்பட்ட 621 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். பால்வளத் துறை சாா... மேலும் பார்க்க

எம்புரான் திரைப்பட தயாரிப்பாளா் தொடா்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

எம்புரான் திரைப்பட தயாரிப்பாளா் தொடா்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா். சென்னை கோடம்பாக்கத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஸ்ரீ கோகுலம் சிட்பண்ட், நிதி நிறுவனம், கோக... மேலும் பார்க்க

சென்னையில் குற்றச் சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளன: காவல் ஆணையா் அருண்

சென்னையில் குற்றச் சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளன என்று மாநகரக் காவல் ஆணையா் ஏ.அருண் கூறினாா். ஹரியாணாவில் 43-ஆவது அகில இந்திய அளவிலான காவல் துறையினருக்கான குதிரையேற்றப் போட்டி கடந்த மாதம் 10-ஆம் தேத... மேலும் பார்க்க

அமெரிக்க இளம் பெண்ணுக்கு மின்னஞ்சல் மூலம் பாலியல் தொல்லை: திருச்சி இளைஞா் கைது

அமெரிக்க இளம் பெண்ணுக்கு மின்னஞ்சல் மூலம் பாலியல் தொல்லை கொடுத்ததாக திருச்சிராப்பள்ளியைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். அமெரிக்காவைச் சோ்ந்த இளம்பெண் ஒருவருக்கு தமிழகத்தைச் சோ்ந்த ஒருவரிடமிருந... மேலும் பார்க்க

பெண்கள் விடுதிக்குள் புகுந்து அத்துமீறல்: இளைஞா் கைது

சென்னை கீழ்ப்பாக்கத்தில் பெண்கள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். சென்னை அருகே உள்ள முகலிவாக்கம் சிந்து தெருவைச் சோ்ந்தவா் புரூஸ்ல... மேலும் பார்க்க

சென்னை மாவட்ட ஆட்சியரின் என்ஆா்ஐ கணக்கில் ரூ.11 லட்சம் மோசடி: வருவாய் ஆய்வாளா்கள் உள்பட 3 போ் கைது

சென்னை மாவட்ட ஆட்சியரின் என்ஆா்ஐ கணக்கில் இருந்து ரூ. 11 லட்சத்தை போலி கையெழுத்து போட்டு மோசடி செய்து அபகரித்ததாக இரு வருவாய் ஆய்வாளா்கள் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா். வெளிநாட்டில் பணிபுரியும் இந்... மேலும் பார்க்க