செய்திகள் :

"தன்னுடன் பேச மறுத்ததால் உயிரோடு தீ வைத்த காதலன்" - சிகிச்சை பலனின்றி இளம்பெண் உயிரிழந்த பரிதாபம்!

post image

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகேயுள்ள  இளம்புவனம் கிராமத்தைச்  சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி காளியம்மாள். கருத்து வேறுபாடு காரணமாக காளியம்மாள் தனது கணவரை பிரிந்து தனது 2 மகன்கள் மற்றும் மகளுடன் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் வாழ்ந்து வருகிறார். காளியம்மாளின் 17 வயது மகளுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்  என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான பிரச்னை குறித்து பரமக்குடி மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் புகார் அளிக்கப்பட்டு போலீஸார் விசாரணை நடத்தி இரு தரப்பிடமும் எழுதி வாங்கி பிரச்னையை முடித்து வைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட முத்தையா- காதலன் சந்தோஷ்

தொடர்ந்து சந்தோஷினால் பிரச்னை வந்ததால் காளியம்மாள் தனது 17 வயது மகளை எட்டயபுரம் அருகேயுள்ள  கீழநம்பிபுரத்தில் இருக்கும் தனது தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். இந்த நிலையில் கீழநம்பிபுரம் வீட்டில் கடந்த 23-ம் தேதி மதியம் திடீரென அலறல் சத்தம் கேட்டதையடுத்து, அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்த போது தீக்காயங்களுடன் 17 வயது சிறுமி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

 உடனடியாக அப்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து எட்டயபுரம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து  விசாரணை நடத்தினர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அச்சிறுமி, போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், ”சந்தோஷ், அவரது நண்பர் முத்தையாவுடன் வீட்டிற்கு வந்து  வழக்கம்போல் தன்னிடம் பேச வேண்டும் என மிரட்டி தொந்தரவு கொடுத்தார். நான் அதற்கு மறுப்பு தெரிவித்ததும் என் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்” என தெரிவித்ததாக போலீஸார்  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எட்டயபுரம் காவல் நிலையம்

தொடர்ந்து அச்சிறுமியின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் எட்டயபுரம் காவல் நிலைய போலீஸார், சந்தோஷ்  மற்றும் அவரது நண்பர் முத்தையா ஆகிய இருவர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து பேரூரணியில் உள்ள மாவட்டச்  சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 17 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமண ஆசை காட்டி கிரிப்டோகரன்சி மோசடி; தேனி இளைஞரிடம் 88 லட்சம் பறித்த கும்பல் கைது - நடந்தது என்ன?

தேனியைச் சேர்ந்த இளைஞரிடம் திருமண ஆசைகாட்டி கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யக் கூறி 88.58 லட்ச ரூபாயை மோசடி செய்த 4 பேரை தேனி சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்துள்ளனர். மோசடியில் ஈடுபட்டவர்கள் 2 கூலித... மேலும் பார்க்க

Karnataka Bank Theft: 'Money Heist' பார்த்து SBI வங்கியை கொள்ளை அடித்த மதுரை கும்பல் - பகீர் பின்னணி

மதுரையைச் சேர்ந்த விஜய்குமார், அஜய்குமார் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கர்நாடகா தாவங்கேர் மாவட்டத்தில் இருக்கும் நியாமதி தலுகாவிற்கு பிழைப்புக்காகச் சென்று ஸ்வீட் கடை நடத்தி வந்துள்ளனர். கட... மேலும் பார்க்க

கிளாமர் காளி கொலையில் தேடப்பட்டவர்; வெள்ளைக்காளியின் கூட்டாளி - மதுரை என்கவுன்ட்டர் பின்னணி

மதுரையில் வி.கே.குருசாமி - ராஜபாண்டி தரப்பினருக்குள் நீண்டகாலமாக பகை தொடர்ந்து வருகிறது. இதில் பழிக்குப்பழியாக கொலைகள் நடந்து வந்த நிலையில், சில நாள்களுக்கு முன் குருசாமியின் உறவினர் கிளாமர் காளி என்ற... மேலும் பார்க்க

கள்ள நோட்டல்ல, கலர் நோட்டு - தப்பிய விசிக கடலூர் மாவட்ட பொருளாளர்; சிக்கிய துப்பாக்கிகள் - பின்னணி?

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அதர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்டப் பொருளாளராக பதவி வகித்து வந்தார். இவரும் ஆவட்டி பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர... மேலும் பார்க்க

நெல்லை: 3 மாதங்களில் 41 பேருக்கு ஆயுள் தண்டனை; வழக்குகளை முடிப்பதில் தீவிரம் காட்டும் போலீஸார்

தென் மாவட்டங்களில் பதற்றமான ஊர்கள் நிறைந்தது நெல்லை மாவட்டம். ஆனால், போலீஸாரின் தீவிர கண்காணிப்பு, குற்றவாளிகளை கைது செய்தல், அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தருதலில் போலீஸார் ஒருங்கிணைந்து திறம்பட செயல்பட... மேலும் பார்க்க

லிவ்இன் உறவு; கருகலைப்பு - கும்பமேளா பிரபலம் மோனலிசாவுக்கு வாய்ப்பு கொடுப்பதாக கூறிய இயக்குநர் கைது

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜ் நகரில் சமீபத்தில் நடந்த கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை விற்பனை செய்து மோனலினா போஸ்லே என்ற பெண் பிரபலம் அடைந்தார். அப்பெண் சமூக வலைத்தளத்தில் பிரபலம் அடைந்ததால், அவர் இப்... மேலும் பார்க்க