செய்திகள் :

`மாணவர்களுக்கு நாங்களும் தமிழ் கற்றுக்கொடுக்கிறோம்..!'- உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

post image

தமிழக அரசு இருமொழிக் கொள்கையைத்தான் பின்பற்றுவோம் என்று உறுதியாகக் கூறி வருகிறது. ஆனால் மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை கடைப்பிடிக்காத மாநிலங்களுக்கு கல்வி உதவித்தொகை கொடுக்க முடியாது என்று மிரட்டிக்கொண்டிருக்கிறது. தமிழகம் உட்பட இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிப்பது போன்று இந்தி பேசும் மாநிலங்களில் தென்னிந்திய மொழிகளை ஏன் கற்றுக்கொடுப்பதில்லை என்று தமிழக தலைவர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பதில் கொடுத்திருந்தார்.

மொழியை வைத்து பிளவை ஏற்படுத்தவேண்டாம் என்றும், ஓட்டு வங்கி குறைவதாக நினைக்கும்போது இது போன்று பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் என்றும் தெரிவித்திருந்தார். தற்போது இது தொடர்பாக அவர் புதிதாக அளித்துள்ள பேட்டியில், ''உத்தரப்பிரதேசத்தில் நாங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, பெங்காலி கற்றுக்கொடுக்கிறோம்.

இதன் மூலம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகிறது. குறுகிய அரசியல் லாபத்திற்காக இது போன்று மொழி சர்ச்சையை உருவாக்குபவர்கள் இதன் மூலம் தங்களது அரசியல் நோக்கத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம். ஆனால் இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை தடுக்கின்றனர்'' என்று தெரிவித்து இருந்தார். இதற்கு தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''உத்தரப்பிரதேசத்தில் எத்தனை ஆசிரியர்கள் தமிழ் கற்றுக்கொடுக்கிறார்கள் என்பதையும், எத்தனை மாணவர்கள் தமிழ் கற்றுக்கொள்கிறார்கள் என்பதையும் யோகி ஆதித்யநாத் தெரிவிக்கவேண்டும். உத்தரப்பிரதேசத்தில் இருந்து வேலை தேடி தமிழகத்திற்கு வரும் யாருக்கும் தமிழ் தெரிந்திருக்கவில்லை. காரணம் இல்லாமல் தமிழக மாணவர்கள் இந்தி படிக்கவேண்டிய அவசியம் இல்லை'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Waqf Bill: "இஸ்லாமியர் சொத்துக்களை அபகரிக்கும் முயற்சி" - நாடாளுமன்றத்தில் ஆ.ராசா பேச்சு

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வக்ஃப் சட்டத் திருத்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் இடம்பெற்றிருந்த திமுக எம்.பி ஆ.ராசா, சட்டத் திருத்த மசோதாவில் கூறப்பட்ட... மேலும் பார்க்க

'அவரைக் கூப்பிடாதீங்க'னு எல்லார்கிட்டயும் சொல்லியிருக்காராம்’ - தாடி பாலாஜி vs தவெக பஞ்சாயத்து

ஆரம்பத்தில் திமுக அனுதாபியாக இருந்தவர் நடிகர் தாடி பாலாஜி. விஜய் தமிழகவெற்றி கழகத்தைத் தொடங்கியதும்,அதில்சேர ஆர்வம் காட்டி வந்தார். கள்ளக்குறிச்சியில் நடந்த தவெக-வின் முதல் மாநாட்டில் கலந்து கொண்டார்.... மேலும் பார்க்க

`என் சிறுநீரகம் ரூ.75000, கல்லீரல் ரூ.90000'- கடனை அடைக்க உறுப்புகளை விற்கப்போவதாக விவசாயி போராட்டம்

மகாராஷ்டிராவில் கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். நாட்டிலேயே அதிக விவசாயிகள் தற்கொலை செய்யும் மாநிலமாக மகாராஷ்டிரா இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு விவசாயிகளின் கடன் தள்ள... மேலும் பார்க்க

Waqf : `மத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல்’ - வக்ஃப் மசோதா விவகாரத்தில் பிரதமருக்கு முதல்வர் கடிதம்

வக்ஃப் சட்டதிருத்த மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதற்கு இந்தியா கூட்டணி கட்சிகள் ஓரணியாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த சட்டதிருத்த மசோதாவ... மேலும் பார்க்க

Wakf Amendment Bill : `நாடாளுமன்ற கூட்டுக்குழு நீங்க தானே கேட்டீங்க?’ - அமித் ஷா காட்டம்

வக்பு திருத்த மசோதா மக்களவையில் இன்று மதியம் 12 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மசோதா மீது 8 மணி நேரம் விவாதம் நடத்தப்படும் என்றும், சூழலைப் பொறுத்து கூடுதல் நேரம் விவாதிக்கப்படும் என்றும்... மேலும் பார்க்க

கச்சத்தீவு : ஒருமனதாக நிறைவேறிய தீர்மானம்... ஆனாலும் அனல் பறந்த விவாதம் - நடந்தது என்ன?

தமிழக சட்டமன்றத்தில் நெடுநாள் பிரச்னையான கச்சத்தீவு விவகாரத்தில் முதலமைச்சரின் தனித் தீர்மானம் இன்று ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானதுக்கு பாஜக சார்பில் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆதரவு தெரிவித்து... மேலும் பார்க்க