செய்திகள் :

நெல்லை: 3 மாதங்களில் 41 பேருக்கு ஆயுள் தண்டனை; வழக்குகளை முடிப்பதில் தீவிரம் காட்டும் போலீஸார்

post image

தென் மாவட்டங்களில் பதற்றமான ஊர்கள் நிறைந்தது நெல்லை மாவட்டம். ஆனால், போலீஸாரின் தீவிர கண்காணிப்பு, குற்றவாளிகளை கைது செய்தல், அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தருதலில் போலீஸார் ஒருங்கிணைந்து திறம்பட செயல்பட்டு வருகின்றனர்.  

தாழையூத்து முன்னாள் பஞ்சாயத்து தலைவி கிருஷ்ணவேணியை கொலை செய்ய முயன்ற பிரபல ரெளடி ஜேக்கப் உள்பட 6 பேருக்கு கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபரில் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

மாவட்ட காவல் அலுவலகம் - நெல்லை

இதையடுத்து மாவட்ட எஸ்.பி., சிலம்பரசனின் அறிவுறுத்தலின் பேரில் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, தாழையூத்து, நாங்குநேரி, வள்ளியூர் ஆகிய 5 காவல் உட்கோட்டங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வீரவநல்லூரில் பழிக்குப்பழியாக வீடு புகுந்து இளைஞரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் அ.தி.மு.க நிர்வாகி, வழக்கறிஞர் உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

எஸ்.பி ஆய்வு

முக்கூடல் அருகில் தோட்ட உரிமையாளரை கொலை செய்த அண்ணன், தம்பி உள்பட 3 பேருக்கு கடந்த பிப்ரவரி மாதம் 10-ம் தேதி ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. அதே மாதம் 24-ம் தேதி 10 பேருக்கு தலா 4 ஆயுள் தண்டனை வழங்கி நெல்லை மாவட்ட 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

வீரவநல்லூர் அருகில் கடந்த 2008-ல் பெண் உள்பட 5 பேரை கொலை செய்த வழக்கில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

இதுகுறித்து நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் கூறுகையில், "நெல்லை மாவட்டத்தில் நடந்த சாதியக் கொலைகள், பழிக்குப்பழியான கொலைச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளது. நெல்லை அருகே பாளையஞ் செட்டிகுளத்தில் ஒரே சமுதாயத்தினரிடையே நடந்த கொலை வழக்கில் ஒருவருக்கு மரண தண்டனையும், 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

கோபால சமுத்திரம் பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கினை துரிதப்படுத்தி 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

நெல்லை

நெல்லை மாவட்ட போலீஸாரின் துரித நடவடிக்கையால் கடந்த 2025-ல் ஜனவரி முதல் மார்ச் 31-ம் தேதி வரை இதுவரை நடந்த 12 கொலை வழக்குகளில் ஈடுபட்ட ஒருவருக்கு மரண தண்டனையும், 14 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உள்பட 41 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். குற்றங்களை குறைக்கவும், குற்றங்கள் நடைபெறாத மாவட்டமாக நெல்லையை மாற்ற போலீஸாரின் ஒருங்கிணைப்புகளுடன் துரித நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

பணத்தகராறு… பெற்ற தந்தையை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மகன் - நெல்லையில் பயங்கரம்!

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை அருகில் உள்ள சிவந்திபட்டியைச் சேர்ந்தவர் பூலையா. இவருக்கும், இவருடைய மகன் கணேசனுக்கும் சொத்துத் தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில், பூலையா கடந்த 20 நாட்களுக்கு முன்பு ... மேலும் பார்க்க

லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறி - புதுச்சேரி ரௌடி கடலூரில் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட பின்னணி

கடலூர் எம்.புதூர் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவர், நேற்று இரவு பக்கத்து ஊரில் கூத்து நிகழ்ச்சியை பார்த்துவிட்டு இன்று அதிகாலை வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை திடீரென வழிமறித்... மேலும் பார்க்க

`யாரு முக்கியம்?' - பெண்ணை கல்லால் அடித்துக் கொலை செய்த ஆண் நண்பர்; 2 குழந்தைகள் தவிப்பு

சென்னை பல்லாவரம் அருகே வசித்து வந்தவர் ஜோதி ( 33) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஜோதிக்கும் அவரின் கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு விவாகரத்து வரை செ... மேலும் பார்க்க

ரயிலில் கஞ்சா கடத்தி வந்த ஒடிசா வாலிபர்கள்.. ராமநாதபுரம் போலீஸார் விசாரணை; சிக்கியது எப்படி?

ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தூத்துக்குடி கடலோர பகுதிகள் வழியாக இலங்கைக்கு போதை மருந்துகள், கஞ்சா உள்ளிட்டவை அதிகளவில் கடத்தப்பட்டு வருகிறது. படகுகள் மூலம் கடத்தி செல்லப்படும் கஞ்சாவை இலங்கை கடற்... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை; உடந்தையாக இருந்த தாய் உட்பட மூவர் கைது; என்ன நடந்தது?

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார்ப் பள்ளி ஒன்றில் 16 வயது சிறுமி ஒருவர் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிக்கூடம் சென்ற அவருக்குத் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.இதனால் அச்சிறுமி அழுதபடிவக... மேலும் பார்க்க

பல்லடம்: தங்கையை ஆணவக் கொலை செய்த அண்ணன்; காதலனின் புகாரால் அம்பலமான அதிர்ச்சி சம்பவம்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பருவாய் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி - தங்கமணி என்ற தம்பதியின் மகள் வித்யா. 22 வயதான வித்யா, கோவை அரசு கல்லூரியில் முதுகலைப் பட்டம் பயின்று வந்துள்ளார். திருப்பூர் வ... மேலும் பார்க்க