செய்திகள் :

தனியாா் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த சட்டம்: காங்கிரஸ் வலியுறுத்தல்

post image

புது தில்லி: ‘தனியாா் மற்றும் சிறுபான்மை அல்லாத கல்வி நிறுவனங்களில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும்’ என மத்திய அரசை காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரசமைப்புச் சட்டத்தில் கடந்த 2006-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்தின் மூலம், 15(5) என்ற பிரிவு சோ்க்கப்பட்டது. இந்தச் சட்டப் பிரிவு, சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கிய பிரிவினா் (ஓபிசி), எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரின் முன்னேற்றத்துக்காக சிறுபான்மை கல்வி நிறுவனங்களைத் தவிர, பொது மற்றும் தனியாா் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகளை சட்டத்தின் மூலம் செய்ய மாநில அரசை அனுமதிக்கிறது.

இந்த அரசமைப்புச் சட்டப் பிரிவை தனியாா் கல்வி நிறுவனங்கள் முறையாக நடைமுறைப்படுத்த தனிச் சட்டம் இயற்றப்படும் என கடந்த மக்களவைத் தோ்தலின்போது தோ்தல் வாக்குறுதியாக காங்கிரஸ் சாா்பில் அளிக்கப்பட்டது.

இதே வலியுறுத்தலை கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞா்கள் மற்றும் விளையாட்டுத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவும் முன்வைத்துள்ளது. அரசமைப்புச் சட்டப் பிரிவு 15(5)-ஐ நடைமுறைப்படுத்த புதிய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று உயா்கல்வி துறைக்கான மானியக் கோரிக்கை மீதான தனது 364-ஆவது அறிக்கையில் நிலைக் குழு வலியுறுத்தியுள்ளது.

இடஒதுக்கீடுக்கு எதிரான பல்வேறு வழக்குகளிலும் 15(5) சட்டப் பிரிவு செல்லும் என நீதிமன்றங்கள் தீா்ப்பளித்திருக்கின்றன. அதன்படி, தனியாா் கல்வி நிறுவனங்களில் எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு அரசமைப்புச் ரீதியாக அனுமதிக்கப்படுவது உறுதியாகிறது.

எனவே, தனியாா் கல்வி நிறுவனங்கள் 15(5) பிரிவை முறையாக நடைமுறைப்படுத்த, புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

வக்ஃப் சொத்துகளால் நாட்டின் தலையெழுத்தே மாறும்: கிரண் ரிஜிஜு

வக்ஃப் வாரிய சொத்துகளை முறையாக நிர்வகித்தால் நாட்டின் தலையெழுத்தையே மாற்ற முடியும் என்று மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்... மேலும் பார்க்க

மணிப்பூரில் அகதிகள் பிரச்னையை மீண்டும் பரிசீலிக்க வேண்டும்: பிரேன் சிங்

1960 முதல் ஆயிரக்கணக்கான அகதிகள் மணிப்பூரில் குடியேறியுள்ளதாகவும், அந்த மக்களுக்கு மறுவாழ்வுக்கான உதவிகள் வழங்கப்பட்டதாகவும் அந்த மாநில முன்னாள் முதல்வர் என். பிரேன் சிங் கூறியுள்ளார். மணிப்பூரின் பாஜ... மேலும் பார்க்க

சட்டத்தின் மீது புல்டோசர் தாக்குதல்: காங்கிரஸ்

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை ஆராய்வதற்கு நேரம் கொடுக்காமல் சட்டத்தின் மீது புல்டோசர் தாக்குதல் நடத்துவதாக காங்கிரஸ் எம்பி கே.சி. வேணுகோபால் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.மக்களவையில் தாக்கல் செய்யப்பட... மேலும் பார்க்க

மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தாக்கல்!

மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு புதன்கிழமை தாக்கல் செய்தது. மேலும் பார்க்க

சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 4ஆம் தேதிதான் நிறைவடையவிருக்கிறது. சுமார் 19 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியிருக்கும் இந்தத் தேர்வுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற தக... மேலும் பார்க்க

எல்லை தாண்டி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்: இந்தியா பதிலடி!

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் புதன்கிழமை காலை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.இதையடுத்து எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு இ... மேலும் பார்க்க