செய்திகள் :

புதுக்கோட்டையில் மனைவியைச் சரமாரியாக வெட்டிக் கொன்ற கணவர்

post image

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள எம்.ராசியமங்கலத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மகள் இந்திராணி (வயது 37).

இவருக்கு ஏற்கனவே திருமணமாகி தவபாலன் (வயது 12) என்ற ஆண் குழந்தை உள்ள நிலையில், கணவருடன் ஏற்பட்ட பிரச்னையில் பிரிந்து வந்து தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இவர் ஆலங்குடியில் உள்ள ஒரு கடலை மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த சூழலில், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலைச் சேர்ந்த முருகன் என்பவரோடு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு இரண்டாவதாகத் திருமணம் நடந்துள்ளது.

முருகன் எம்.ராசிமங்கலத்தில் மனைவியோடு தங்கியுள்ளார். இந்நிலையில், இந்த தம்பதியினருக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

அதேபோல், சம்பவத்தன்று மீண்டும் தகராறு ஏற்பட்டபோது, முருகன் வீட்டிலிருந்த அரிவாளால் இந்திராணியைச் சரமாரியாகத் தலை மற்றும் கைகளில் வெட்டியுள்ளார்.

இதில், படுகாயம் அடைந்த இந்திராணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

accused

அப்போது, தடுக்கச் சென்ற இந்திராணியின் தாயார் லெட்சுமி (வயது 60) என்பவரையும் கையில் வெட்டியுள்ளார். இதில், படுகாயம் அடைந்த லட்சுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

இதுகுறித்து, தகவல் அறிந்து அங்குச் சென்ற ஆலங்குடி போலீஸ் டி.எஸ்.பி கலையரசன் தலைமையிலான போலீஸார் இந்திராணியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வு மேற்கொள்வதற்காகப் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த போலீஸார் முருகனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தனது மனைவியைக் கணவர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ள சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

திருப்பூர்: காதலியின் சாவில் மர்மம்; காதலனின் புகாரில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறாய்வு

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பருவாய் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி மற்றும் தங்கமணி என்பவரின் மகள் வித்யா.22 வயதான வித்யா கோவை அரசுக் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பயின்று வந்துள்ளார். திருப்பூர் வ... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: 210 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த கடத்தல்காரர்கள் கைது; நடந்தது என்ன?

வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதாக ராணிப்பேட்டை மாவட்ட போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.இதையடுத்து, கஞ்சா கும்பலைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைத்து தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்... மேலும் பார்க்க

`போலீஸ் பேர் வாங்க என் மகனை என்கவுன்ட்டர் செய்துள்ளனர்' - சுபாஷ் சந்திரபோஸின் தந்தை புகார்

``கொலைச் சம்பவத்தில் ஈடுபடாத என் மகனை வெளியூரில் வைத்து என்கவுன்ட்டர் செய்து இங்கு கொண்டு வந்து போட்டுள்ளனர்" என்று சுபாஷ் சந்திரபோஸின் தந்தை வீரபத்திரன் காவல்துறை மீது குற்றம்சாட்டியுள்ளார்.சுபாஷ் சந... மேலும் பார்க்க

திருமணம் மீறிய உறவு; மனைவியின் இழப்பு... கொலைசெய்த கணவனைக் காட்டிக் கொடுத்த அரிவாள் வெட்டு!

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகேயுள்ள காப்புலிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கிலி பாண்டி. இவர், கடம்பூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் மேனேஜராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மாரியம்மாள் ... மேலும் பார்க்க

சென்னை: IPL போட்டியின்போது செல்போன்கள் திருட்டு - ஏஐ தொழில்நுட்பத்தால் இளைஞர்கள் சிக்கியது எப்படி?

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 28-ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்த கிரிக்கெட் போட்டியை காண ஏராளமான ரசிகர்க... மேலும் பார்க்க

திருமண ஆசை காட்டி கிரிப்டோகரன்சி மோசடி; தேனி இளைஞரிடம் 88 லட்சம் பறித்த கும்பல் கைது - நடந்தது என்ன?

தேனியைச் சேர்ந்த இளைஞரிடம் திருமண ஆசைகாட்டி கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யக் கூறி 88.58 லட்ச ரூபாயை மோசடி செய்த 4 பேரை தேனி சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்துள்ளனர். மோசடியில் ஈடுபட்டவர்கள் 2 கூலித... மேலும் பார்க்க