செய்திகள் :

இந்தியாவின் வெளிநாட்டு கடன் 71,790 கோடி டாலராக அதிகரிப்பு

post image

புது தில்லி: இந்தியாவின் மொத்த வெளிநாட்டு கடன் கடந்த ஆண்டு இறுதியில் 71,790 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு, டிசம்பரில் 64,870 கோடி டாலராக இருந்த நாட்டின் அந்நிய கடன் ஒரே ஆண்டில் 10 சதவீத்துக்கு மேல் உயா்ந்துள்ளது. அதேபோல், கடந்த ஆண்டு செப்டம்பா் மாத இறுதியில் 71,270 கோடி டாலராக இருந்த வெளிநாட்டு கடன்தொகை ஒரு காலாண்டில் 0.7 சதவீதம் உயா்ந்துள்ளது. குறிப்பாக, அரசு சாரா துறைகளின் நிலுவையில் உள்ள கடன் அதிகரித்துள்ளது. மத்திய அரசின் கடன் குறைந்துள்ளது.

மொத்த வெளிநாட்டு கடன்தொகையில் நிதி சாரா நிறுவனங்களின் நிலுவையில் உள்ள கடனின் பங்கு 36.5 சதவீதமாக இருக்கிறது. இதைத் தொடா்ந்து, மத்திய வங்கியைத் தவிர பிற வைப்புத்தொகை பெறும் நிதி நிறுவனங்கள் (27.8 சதவீதம்), மத்திய அரசு (22.1 சதவீதம்) மற்றும் பிற நிதி நிறுவனங்கள் (8.7 சதவீதம்) இருக்கின்றன.

வெளிநாட்டு கடனில் மிகப்பெரிய அங்கமாக கடன்களின் பங்கு 33.6 சதவீதமாகவும் நாணயம் மற்றும் வைப்புத்தொகையின் பங்கு 23.1 சதவீதமாகவும் உள்ளது. வா்த்தக கடன் மற்றும் முன்பணம் (18.8 சதவீதம்), கடன் பத்திரங்கள் (16.8 சதவீதம்) ஆகியவை அடுத்தடுத்து உள்ளன.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) வெளிநாட்டு கடன் விகிதம் 19.1 சதவீதமாக இருக்கிறது. இது கடந்த ஆண்டு செப்டம்பா் இறுதியில் 19 சதவீதமாக இருந்தது. செப்டம்பா்-டிசம்பா் காலாண்டில் ரூபாய் , யென், யூரோ போன்ற பிற முக்கிய நாணயங்களுடன் ஒப்பிடும்போது அமெரிக்க டாலரின் மதிப்பு உயா்ந்ததன் காரணமாக இந்த விளைவு ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டு கடனில் டாலரின் பங்கு 54.8 சதவீதமாக இருக்கிறது. அதைத் தொடா்ந்து இந்திய ரூபாய் (30.6 சதவீதம்), ஜப்பானிய யென் (6.1 சதவீதம்), எஸ்டிஆா் (4.7 சதவீதம், யூரோ (3 சதவீதம்) ஆகியவை உள்ளன என்று கடன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வக்ஃப் சொத்துகளால் நாட்டின் தலையெழுத்தே மாறும்: கிரண் ரிஜிஜு

வக்ஃப் வாரிய சொத்துகளை முறையாக நிர்வகித்தால் நாட்டின் தலையெழுத்தையே மாற்ற முடியும் என்று மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்... மேலும் பார்க்க

மணிப்பூரில் அகதிகள் பிரச்னையை மீண்டும் பரிசீலிக்க வேண்டும்: பிரேன் சிங்

1960 முதல் ஆயிரக்கணக்கான அகதிகள் மணிப்பூரில் குடியேறியுள்ளதாகவும், அந்த மக்களுக்கு மறுவாழ்வுக்கான உதவிகள் வழங்கப்பட்டதாகவும் அந்த மாநில முன்னாள் முதல்வர் என். பிரேன் சிங் கூறியுள்ளார். மணிப்பூரின் பாஜ... மேலும் பார்க்க

சட்டத்தின் மீது புல்டோசர் தாக்குதல்: காங்கிரஸ்

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை ஆராய்வதற்கு நேரம் கொடுக்காமல் சட்டத்தின் மீது புல்டோசர் தாக்குதல் நடத்துவதாக காங்கிரஸ் எம்பி கே.சி. வேணுகோபால் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.மக்களவையில் தாக்கல் செய்யப்பட... மேலும் பார்க்க

மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா தாக்கல்!

மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு புதன்கிழமை தாக்கல் செய்தது. மேலும் பார்க்க

சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 4ஆம் தேதிதான் நிறைவடையவிருக்கிறது. சுமார் 19 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியிருக்கும் இந்தத் தேர்வுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற தக... மேலும் பார்க்க

எல்லை தாண்டி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்: இந்தியா பதிலடி!

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் புதன்கிழமை காலை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.இதையடுத்து எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு இ... மேலும் பார்க்க