செய்திகள் :

விருப்ப ஓய்வு கோரி வி.கே.பாண்டியனின் மனைவி விண்ணப்பம்

post image

அரசுப் பணியில் இருந்து விருப்ப விருப்ப ஓய்வு கோரி வி. கே. பாண்டியனின் மனைவியும், ஒடிசாவின் மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான சுஜாதா விண்ணப்பித்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

2001-ஆம் ஆண்டு ஒடிசா பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியான அவர் நிதித்துறையில் சிறப்புச் செயலாளராக உள்ளார். இந்த நிலையில் சுஜாதா தனிப்பட்ட காரணங்களுக்காக விருப்ப ஓய்வு கோரி விண்ணப்பித்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.

அதிகாரியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய சுஜாதாவின் கணவர் வி.கே. பாண்டியனும் அக்டோபர் 2023 இல் விருப்ப ஓய்வு பெற்று நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தார். ஆனால் கடந்த ஆண்டு நடந்த பேரவைத் தேர்தலில் அக்கட்சி தோல்வியை தழுவியது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் உகாதி வாழ்த்து

இத்தோல்விக்கு வி.கே.பாண்டியன்தான் காரணம் என்று பல்வேறு தரப்பினரால் கடுமையாக விமா்சிக்கப்பட்டாா். ஆனால், ‘பாண்டியனை விமா்சிப்பது துரதிருஷ்டவசமானது மற்றும் அவரது பணி பாராட்டுக்குரியது’ என்று நவீன் பட்நாயக் தெரிவித்திருந்தாா்.

இதையடுத்து தீவிர அரசியலில் இருந்து விலகி கொள்வதாக வி.கே.பாண்டியன் அறிவித்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.கே.பாண்டியனும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

ஔரங்கசீப் கல்லறை பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம்: முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ்

மும்பை: ‘முகலாய மன்னா் ஔரங்கசீப்பை மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அவரது கல்லறை ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னம். அதேநேரம், யாரும் அவரது புகழ்பாடுவதை அனுமதிக்க முடியாது’ என்று மகாராஷ்டிர... மேலும் பார்க்க

அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை: அமித் ஷா

ஹிசாா்: ‘நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என்ற நிலை உருவாக்கப்படும்’ என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா். ஹரியாணா மாநிலம், ஹிசாரில் மகார... மேலும் பார்க்க

முக்கிய வழிபாட்டுத் தலங்களில் நாளைமுதல் மதுவிலக்கு அமல்! - எங்கே?

19 முக்கிய வழிபாட்டுத் தலங்களில் மதுவிலக்கு ஏப். 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாக மத்திய பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.மத்திய பிரதேசத்தில் பிரசித்திபெற்ற 19 வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்லாது, அம... மேலும் பார்க்க

ரமலான் தொழுகைக்குப் பிறகு பாலஸ்தீன கொடியை ஏந்தி முழக்கம்! வைரலாகும் விடியோ!

உத்தரப் பிரதேசத்தில் ரமலான் சிறப்புத் தொழுகைக்குப் பிறகு பாலஸ்தீன கொடியை ஏந்தியவாறு இஸ்லாமியர்கள் முழக்கங்களை எழுப்பிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது மேலும் பார்க்க

ஏப்ரல் - ஜூன் வெப்ப அலையின் தாக்கம் எத்தனை நாள்கள்? வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வெப்ப அலையின் தாக்கம் ஏப்ரல் - ஜூன் வரை அதிகமாக இருக்குமென்றும், நாடெங்கிலும் பரவலாக இயல்பைவிட வெய்யில் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்(ஐஎம்டி) தெரிவித்துள்ளது.‘வெப்ப-அலை’ எனப்படும் ’வெய்... மேலும் பார்க்க

மோனலிசாவுக்கு பட வாய்ப்பு கொடுத்த இயக்குநர் பாலியல் புகாரில் கைது!

மகா கும்பமேளாவில் பிரபலமடைந்த மோனலிசா என்ற இளம்பெண்ணுக்கு பட வாய்ப்பு கொடுத்த இயக்குநர் சனோஜ் மிஸ்ரா பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பார்க்க