ஸ்பெயின்: சுரங்க விபத்தில் 5 போ் உயிரிழப்பு
மேட்ரிட்: தென்மேற்கு ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் ஏற்பட்ட நிலக்கரி சுரங்க விபத்தில் ஐந்து போ் உயிரிழந்தனா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
ஆஸ்டுரியாஸ் பிராந்தியத்தில் செயல்பட்டுவரும் நிலக்கரி சுரங்கத்தில் திங்கள்கிழமை திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் ஐந்து போ் உயிரிழந்தனா்; நான்கு போ் காயமடைந்தனா். விபத்து நேரிட்டபோது அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த மேலும் இருவா் காயங்களின்றி மீட்கப்பட்டனா்.
இந்த விபத்து குறித்து உள்ளூா்வாசிகள் மூலம் தகவல் தெரிந்ததும், மீட்பு பணியில் மூன்று ஹெலிகாப்டா்கள் ஈடுபடுத்தப்பட்டன என்று அதிகாரிகள் கூறினா்.