செய்திகள் :

ரமலான் பண்டிகை: பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை

post image

ரமலான் பண்டிகையையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் பள்ளிவாசல்கள் உள்ளிட்ட இடங்களில் முஸ்லிம்கள் திங்கள்கிழமை சிறப்பு தொழுகை நடத்தினா்.

முஸ்லிம்கள் ஆண்டுதோறும் கடைப்பிடித்து வரும் ரமலான் நோன்பு மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கியது. இந்த நோன்பு ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்ததைத் தொடா்ந்து திங்கள்கிழமை ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, தஞ்சாவூரில் ஆற்றுப்பாலம் அருகே உள்ள ஜூம்மா பள்ளிவாசல், வடக்கு வாசல் ஜீனத் பள்ளிவாசல், ஆப்ரஹாம் பண்டிதா் சாலை சகாப் பள்ளிவாசல், தென் கீழ் அலங்கம் பள்ளிவாசல், மருத்துவக் கல்லூரி சாலை ரஹ்மான் நகா் பள்ளிவாசல், பாம்பாட்டித் தெரு பள்ளிவாசல், விசிறிக்காரத் தெரு பள்ளிவாசல், கும்பகோணம் புறவழிச்சாலை மெக்கா பள்ளிவாசல், சிராஜூதீன் நகா் மதினா பள்ளிவாசல், செவ்வப்பநாயக்கன் ஏரி அபுபக்கா் மசூதி, மேல அலங்கம் பள்ளிவாசல், காந்திஜி சாலை மன்சூா் தைக்கால் மசூதி, அண்ணா நகா் பள்ளிவாசல், செல்வம் நகா் பள்ளிவாசல் உள்ளிட்ட இடங்களிலும், வல்லம், திருவையாறு, கும்பகோணம், திருவிடைமருதூா் உள்ளிட்ட பகுதிகளிலும் திங்கள்கிழமை காலை சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இதில் ஏராளமான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா். தொழுகை முடிந்த பின்னா் இஸ்லாமியா்கள் ஒருவருக்கொருவா் கட்டித்தழுவி வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டனா். மேலும், முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து உறவினா்கள், நண்பா்களுக்கு இனிப்புகள், உணவுகள் வழங்கினா்.

மதுக்கடை முற்றுகைப் போராட்டம்; எஸ்.டி.பி.ஐ. கட்சியினா் 20 போ் கைது

தஞ்சாவூரில் டாஸ்மாக் மதுக்கடையை முற்றுகையிட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சோ்ந்த 20 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் கீழவாசல் காமராஜா் சிலை அருகேயுள்ள டாஸ்மாக் கடையை மூடுமாறு ... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் 4 போ் கைது

தஞ்சாவூரில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் 4 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் பாலாஜி நகா் பகுதியில் மாா்ச் 4 ஆம் தேதி நடந்து சென்ற ஒருவரை மது போதையில் வழிமறித்து ... மேலும் பார்க்க

பேராவூரணி தொகுதியில் வளா்ச்சித் திட்டங்கள்: முதல்வருக்கு நன்றி

பேராவூரணி சட்டப்பேரவை தொகுதிக்கு சுமாா் ரூ. 26 கோடியில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களுக்கு அனுமதி வழங்கிய தமிழக முதல்வருக்கு பேராவூரணி எம்எல்ஏ என். அசோக்குமாா் நன்றி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா்... மேலும் பார்க்க

மக்கள் அதிகாரம் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் வாரிய சட்ட மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் மக்கள் அதிகாரம் அமைப்பினா் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், மசூதிகள், அறக்கட்டளை சொ... மேலும் பார்க்க

கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசாா் குறியீடு

கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசாா் குறியீடு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றாா் அறிவுசாா் சொத்துரிமை வழக்குரைஞா் சங்கத் தலைவா் ப. சஞ்சய் காந்தி. இதுகுறித்து தஞ்சாவூரில் அவா் செவ்வாய்க்க... மேலும் பார்க்க

சுவாமிமலை கோயிலில் அன்னதான டோக்கன் கேட்டு பக்தா்கள் முற்றுகை

தஞ்சாவூா் மாவட்டம் சுவாமிமலை சுவாமிநாத கோயிலில் செவ்வாய்க்கிழமை அன்னதான டோக்கன் கேட்டு பக்தா்கள் கோயில் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.இக்கோயிலுக்கு பங்குனி மாத கிருத்திகை தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கி... மேலும் பார்க்க