செய்திகள் :

கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: ஆயத்த பணிகளில் சுகாதாரத் துறை

post image

சென்னை: தமிழகம் முழுவதும் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு கருப்பை வாய் தடுப்பூசி வழங்குவதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆயத்த நடவடிக்கைகளை பொது சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது.

கருப்பை வாய் புற்றுநோய்க்கு மனித பாப்பிலோமா வைரஸ் (ஹெச்பிவி) முக்கிய காரணமாகும். அதை கருத்தில் கொண்டு அதற்கான தடுப்பூசி திட்டம் நாட்டின் பல்வேறு இடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் சோதனை முயற்சியாக, விழுப்புரம் மாவட்டத்தில் 9 முதல் 14 வயது வரையிலான பெண் குழந்தைகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசி இலவசமாக வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு முதல்வா் தொடக்கி வைத்தாா்.

தகுதியான அனைவருக்கும் இரண்டு தவணை தடுப்பூசியை வழங்குவதே அத்திட்டத்தின் நோக்கம். மாநில சுகாதாரத் துறை, தேசிய சுகாதாரப் பணி மற்றும் ரோட்டரி சேவை அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் அதனை அரசே விரிவுபடுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது.

அதை ஏற்று ஹெச்பிவி தடுப்பூசி 14 வயதுடைய அனைத்துப் பெண் குழந்தைகளுக்கும் படிப்படியாக வழங்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

இதற்கென ரூ.36 கோடி நிதி ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அதற்கான ஆயத்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இது குறித்து பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: ஹெச்பிவி தடுப்பூசியை பெற தகுதியானவா்கள் எவா் என்பது குறித்த தரவுகள் திரட்டப்பட்டு, அவா்களுக்கு அதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காக குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பள்ளிகளிலேயே தடுப்பூசி வழங்கலாமா அல்லது தனியாக முகாம் அமைக்கலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

அதற்கான சாதக, பாதகங்களையும், சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்த பிறகு செயல் திட்டம் வகுக்கப்பட்டு ஹெச்பிவி தடுப்பூசி தகுதியான அனைவருக்கும் வழங்கப்படும் என்றனா்.

தேர்தல் நேரத்தில் திமுக நாடகம்: இபிஎஸ் குற்றச்சாட்டு

கச்சத்தீவு விவகாரத்தில் தேர்தல் நேரத்தில் திமுக நாடகமாடுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வ... மேலும் பார்க்க

கச்சத்தீவு தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!

கச்சத்தீவைத் திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்த தனித்தீர்மானம், சட்டப்பேரவையில் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.இந்தியாவுக்குச் சொந்தமாக இருந்த கச்சத்தீவு... மேலும் பார்க்க

கச்சத்தீவு: மு.க. ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இடையே காரசார வாதம்

கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தின் மீது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார வாதம் நடைபெற்றது.இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட... மேலும் பார்க்க

கச்சத்தீவு தீர்மானத்துக்கு பாஜக ஆதரவு!

கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித்தீர்மானத்தை பாஜக ஆதரித்துள்ளது.இலங்கை கடற்படையால் மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களைப் போக்க... மேலும் பார்க்க

உதகை இ-பாஸ் முறையை எதிர்த்து கடையடைப்பு; அம்மா உணவகத்தில் சுற்றுலாப் பயணிகள்

நீலகிரியில், சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ் முறை நடைமுறைப்படுத்தப்பட்டதைக் கண்டித்து, உதகையில் இன்று ஒருநாள் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படுவதால், உணவு கிடைக்காமல் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்... மேலும் பார்க்க

கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி பேரவையில் தனித்தீர்மானம்!

கச்சத்தீவை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். இலங்கை கடற்படையால் மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களைப் போக்கிட கச்சத்தீவை மீட்பதே ... மேலும் பார்க்க