செய்திகள் :

"யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு செய்தேன்" - சிவகங்கை இளைஞர் கைது; கூட்டாளிகளுக்கு வலைவீச்சு

post image

சிவகங்கை மாவட்டத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த குற்றத்தில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான வன்முறைகள், சாதி ரீதியான மோதல்கள் உள்ளிட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் வகையில் சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் ரோந்து சென்று தீவிரமாகக் கண்காணித்து வருகிறார்கள்.

அந்த கண்காணிப்பின் ஒரு பகுதியாகச் சிவகங்கை தாலுகா போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ தலைமையில் காவலர்கள் ரோந்து சென்றபோது ஓட்டக்குளம் கண்மாய்க்கரை புதரில் மறைவாக ஒரு இளைஞர் இருப்பதைக் கண்டனர்.

குற்றம் கைது - கருமுட்டை விற்பனை

அருகில் சென்று பார்த்தபோது அங்கு வெடி மருந்து, திரி, சணல், வயர் போன்ற பொருட்களுடன் இருந்த இளைஞரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

விசாரித்தபோது, கீழக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 19 வயதான மகேஸ்வரன், பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு எங்கேயும் செல்லாமல் ஊர்சுற்றி வந்துள்ளதும், இங்கு அமர்ந்து நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்து வந்ததும் தெரிய வந்தது.

நண்பர்கள் சந்தோஷகுமார், ரமேஷ்குமார், கர்லா ரமேஷ், சூர்யா ஆகியோருடன் யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு செய்ய கற்றுக் கொண்டதாக மகேஸ்வரன் தெரிவித்ததைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், அங்கிருந்த 4 நாட்டு வெடிகுண்டுகளுடன் வாள் ஒன்றையும் கைப்பற்றி, மகேஸ்வரனைக் கைது செய்தனர்.

நாட்டு வெடிகுண்டு (ஃபைல் படம்)

ஏற்கனவே பல்வேறு இடங்களில் வழக்குகள் உள்ள கூட்டாளிகள் நான்கு பேரையும் தேடி வருகிறார்கள்.

இதற்கிடையே வெடிகுண்டுகள் தயாரிக்க இவர்களுக்குப் பொருட்கள் எங்கிருந்து கிடைத்தது?, என்ன நோக்கத்திற்காக வெடிகுண்டுகள் தயாரித்தார்கள்?, இவர்களின் பின்னணியில் வேறு யாரும் இருக்கிறார்களா? என்று தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/crf99e88

செயின் பறிப்பு சம்பவம்: குற்றவாளி என்கவுன்ட்டர் செய்யப்பட்டது ஏன்? - சென்னை காவல் ஆணையர் விளக்கம்

சென்னையில் நேற்று (மார்ச் 25) காலை நேரத்தில் 7 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விமானம் மூலமாக தப்பிக்க முயன்ற இரண்டு வடமாநில கொள்ளையர்களைப் போலீஸார் மடக்கி பிடித்தனர்.... மேலும் பார்க்க

`விமான பயணம்; சென்னை ரூட் மேப்’ - என்கவுன்ட்டர் செய்யப்பட்ட `இரானி’ கொள்ளையன் ஜாபரின் பகீர் பின்னணி

சென்னை நந்தனத்தில் உள்ள கால்நடை மற்றும் மீன்வளத்துறை அலுவலகம் எதிரில், ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த இந்திரா, கடந்த 25-ம் தேதி காலை 6 மணியளவில் நடந்துச் சென்றார். அப்போது ஹெல்மெட், முகமுடி அணிந்து பைக்கில... மேலும் பார்க்க

போதையில் நண்பரை மதுபாட்டிலால் அடித்துக் கொன்ற இளைஞர்

கோவை ஈச்சனாரி பகுதியில் கட்டுமான பொருள்களை விற்பனை செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.இங்குத் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த சியாம்ஆகிய இரண்டு பேர... மேலும் பார்க்க

'இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்' - சிறார்களால் ஏற்படும் சாலை விபத்துகள்; காரணம் என்ன?

ஒருங்கிணைந்த சாலை விபத்து தரவுத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ள தரவுகளின் படி, 2023-24 ஆண்டில், இந்தியளவில் தமிழ்நாட்டில் தான் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களால் அதிக விபத்துகள் ஏற்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த சாலை ... மேலும் பார்க்க

சென்னை: ஒரே நாளில் 7 செயின் பறிப்புச் சம்பவங்கள்; ஒருவர் என்கவுன்டர்; மூவர் கைது; என்ன நடந்தது?

சென்னையில் நேற்று (மார்ச் 25) காலை ஏழு இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இவைச் சுமார் ஒரு மணி நேரத்தில் நடந்துள்ளன. இவற்றில் சம்பந்தப்பட்ட இருவரை போலீசார் சிசிடிவி கேமரா உதவியுடன்‌ சென்ன... மேலும் பார்க்க

மதுரை: இயக்குநர் வீட்டில் களவு; `5 நாள்களாகியும் விசாரணை இல்லை...' - காவல்துறை மீது குற்றச்சாட்டு!

எழுத்தாளரும் இயக்குநருமான லக்ஷ்மி சரவணக்குமார் தனது வீட்டில் பணம், நகை திருடப்பட்டுவிட்டதாகவும், அது குறித்து புகார் அளிக்கப்பட்டும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.தனியாக வாழும்... மேலும் பார்க்க