செய்திகள் :

'இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்' - சிறார்களால் ஏற்படும் சாலை விபத்துகள்; காரணம் என்ன?

post image

ஒருங்கிணைந்த சாலை விபத்து தரவுத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ள தரவுகளின் படி, 2023-24 ஆண்டில், இந்தியளவில் தமிழ்நாட்டில் தான் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களால் அதிக விபத்துகள் ஏற்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த சாலை விபத்து தரவுத்தளம் என்பது இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துகள் குறித்த தரவுகளை பதிவு செய்யும் ஒரு தரவுத்தளம் ஆகும்.

கடந்த ஆண்டில் இருந்து, இந்தத் தரவுத்தளத்தில், நேரம், எப்படிப்பட்ட விபத்து, எதனால் விபத்து போன்ற 15 விஷயங்களை குறிப்பிட்டு, சாலை விபத்து குறித்த தகவல்கள் பதியப்படுகின்றன. 'அப்போது தான் சாலை விபத்தின் முக்கிய காரணத்தை கண்டுபிடித்து, அதை தடுக்க முடியும்' என்பது திட்டம்.

விபத்தை தடுக்க 'இந்தத்' தரவுத்தளம்
விபத்தை தடுக்க 'இந்தத்' தரவுத்தளம்

அப்படி பதியப்பட்டதில் இருந்து தான், இந்தியளவில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களால் ஏற்படும் விபத்து தமிழ்நாட்டில் தான் அதிகம் ஏற்படுகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

பெற்றோருக்கு சிறையும், அபராதமும்...

2022-ம் ஆண்டு சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டர் வாகன வழிகாட்டுதல்களின் படி, 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் வாகனம் ஓட்டி எதாவது விபத்து நேர்ந்தால், அவர்களது பெற்றோர்கள் மூன்று ஆண்டு சிறையும், ரூ.25,000 அபராதத்தையும் ஏற்க வேண்டும்.

ஆனால், இந்த நடைமுறை கடுமையாக செயல்படுத்தப்படுவதில்லை என்பது இந்த விபத்து அதிகரிப்புக்கு முக்கிய காரணம் என்கிறார்கள்.

மேலும், 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் வாகனம் ஓட்டி பிடிப்பட்டால், பெரும்பாலும் அபராதம், எச்சரிக்கை, பெற்றோரிடம் தகவலை தெரிவிப்பது என்பதுடனே போலீஸார் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்திவிடுகின்றன. வாகனங்களை பறிமுதல் செய்வதில்லை.

லேர்னர் லைசன்ஸ்

இன்னொரு பக்கம், லேர்னர் லைசன்ஸ் 16 - 18 வயதிலேயே கிடைத்துவிடுகிறது. இதை வைத்துகொண்டு பலர் தப்பித்து விடுகின்றனர். இந்த விபத்துகளை கட்டுபடுத்த இந்த வயதினையும் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

திண்டுக்கல்: நிலத்தகராறில் 3 பேர் கொலையா? கிணற்றில் உடல்களைத் தேடிய போலீஸார்; நடந்தது என்ன?

திண்டுக்கல் அருகே அணைப்பட்டியில் இருதரப்புக்கும் இடையில் நிலப்பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது.இதில் 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களின் உடல்கள் அணைப்பட்டியில் உள்ள ஒரு கிணற்றில் வீச... மேலும் பார்க்க

சைபர் கிரிமினல்களிடம் ரூ.50 லட்சத்தை இழந்த வயதான தம்பதி தற்கொலை

இணையத்தளக் குற்றவாளிகள் பெண்கள் மற்றும் முதியவர்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து அவர்களிடம் இருக்கும் பணத்தைப் பறிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடக்கின்றன. அதிகமானோர் கோடிக்கணக்கில் பணத்தை இழந்துள்ள... மேலும் பார்க்க

கிரிக்கெட்டர் முதல் ஐடி ஊழியர் வரை - உயர் ரக போதை பொருளால் கோவையை கலங்கடித்த நெட்வொர்க்!

கோவை மாவட்டத்தில் உயர் ரக போதை பொருள்கள் அதிகளவு பயன்படுத்துவதாக புகார் உள்ளது. இந்நலையில் ஆர்.எஸ்.புரம் சுற்று வட்டார பகுதிகளில் உயர் ரக போதை பொருள்கள் விற்பனை செய்யும் ஒரு நெட்வொர்க் குறித்து காவல்த... மேலும் பார்க்க

`கொலை செய்துவிட்டேன், சொல்லிவிடுங்கள்...' - மனைவியைக் கொன்று சூட்கேஸில் உடலை அடைத்த இன்ஜினீயர்

இந்தியாவில் பெங்களூரு சாஃப்ட்வேர் தலைநகரமாக விளங்குகிறது. இதனால் நாடு முழுவதும் இருந்து சாப்ட்வேர் இன்ஜினீயர்கள் பெங்களூரு வந்து வேலை செய்கின்றனர். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு மும்பையை சேர்ந்த ராக... மேலும் பார்க்க

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் சிக்கிய 70 வயது பாடகர்... ரூ.1.2 கோடியைப் பறித்த சைபர் கிரிமினல்கள்!

நாடு முழுவதும் அப்பாவி மக்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து அவர்களிடமிருந்து பணத்தை பறிக்கும் சம்பங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கிறது. மும்பை, ஐதராபாத் போன்ற நகரங்களில் இது போன்ற குற்றங்கள் அதிக அ... மேலும் பார்க்க

பெங்களூரு: ட்ராலியில் பெண்ணின் உடல் மீட்பு; போலீசாருக்கு போன் செய்த கணவர் கைது!

பெங்களூருவில் 32 வயதுடைய பெண் கௌரி அனில் சம்ப்ரேக்கர் உடலை ட்ராலியில் கண்டெடுத்துள்ளனர் பெங்களூரு போலீசார். தென்கிழக்கு பெங்களூருவை சேர்ந்தவர் ராகேஷ் ராஜேந்திர கெடேகர். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ப... மேலும் பார்க்க