செய்திகள் :

கிரிக்கெட்டர் முதல் ஐடி ஊழியர் வரை - உயர் ரக போதை பொருளால் கோவையை கலங்கடித்த நெட்வொர்க்!

post image

கோவை மாவட்டத்தில் உயர் ரக போதை பொருள்கள் அதிகளவு பயன்படுத்துவதாக புகார் உள்ளது. இந்நலையில் ஆர்.எஸ்.புரம் சுற்று வட்டார பகுதிகளில் உயர் ரக போதை பொருள்கள் விற்பனை செய்யும் ஒரு நெட்வொர்க் குறித்து காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

கோவை

இது குறித்து தனிப்படை காவல்துறை நடத்திய விசாரணையில்  7 பேர் கொண்ட முக்கிய நெட்வொர்க் கைது செய்யப்பட்டுள்ளது.

கால் டாக்ஸி தொழில் செய்து வரும் பி.காம் பட்டதாரி மணிகண்டன், ரேபிடோ ஓட்டுநர் விநாயகம், ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வரும் பி.எஸ்சி பட்டதாரி கிருஷ்ணகாந்த், பி.இ பட்டதாரியும், கிரிக்கெட்டருமான மகாவிஷ்ணு, பி.இ பட்டதாரியும், சுய தொழில் செய்பவருமான ஆதர்ஷ்,  பி.காம் பட்டதாரியும்,

உயர் ரக போதை பொருள்

உணவு தொழில் செய்து வருபவருமான ரிதேஷ் லம்பா, பி.பி.எம் பட்டதாரியும் ஜவுளி வர்த்தகருமான  ரோஹன் ஷெட்டி ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மகாவிஷ்ணு என்பவர் பெண் காவல் உதவி ஆய்வாளரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் மும்பை, இமச்சால் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து பல்வேறு உயர் ரக போதை பொருள்களை ஆர்டர் செய்து கூரியரில் வரவழைக்கிறார்கள். பிறகு அதை ஐடி ஊழியர்கள், பப்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்துள்ளனர்.

போதை பொருள்

இவர்கள் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு மேலாக இதை செய்து வருகின்றனர். இவர்களிடமிருந்து ரூ.70 லட்சம் மதிப்பிலான போதை பொருள்கள், 12 செல்போன்கள், 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “போதை பொருள் விற்பனைக்காக இந்த நெட்வொர்க் குறிப்பிட்ட சில வங்கி கணக்கை மட்டும் பயன்படுத்தியுள்ளனர். இதில் கிடைத்த பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். இதன் மூலம் இந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் கோவைப்புதூர் பகுதியில் வீடு கட்டியுள்ளார்.

காவல்துறை

மேலும் சிலர் டீச்சர்ஸ் காலனி பகுதியில் நிலம் வாங்கியும், வீடு கட்டியும் சொத்துகளை வாங்கி குவித்துள்ளனர். இவர்களின் வங்கிக் கணக்கு மற்றும் சொத்துகளை முடக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என்றனர்.  

தலையில் அரிவாளால் வெட்டி சென்னை வழக்கறிஞர் படுகொலை

சென்னை விருகம்பாக்கம், கணபதி ராஜ் நகர் மெயின் ரோடு பகுதியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக விருகம்பாக்கம் காவல் நிலையத்துக்குத் தகவல் வந்தது.உடனடியாக போலீஸார்... மேலும் பார்க்க

``மீரட்டில் நடந்த கொலையைப் போல..'' - காதலனுடன் சேர்ந்து கணவனை மிரட்டிய மனைவி; உ.பி.,யில் அதிர்ச்சி

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் முஸ்கான் என்ற பெண் காதலித்து திருமணம் செய்து கொண்டார். நாளடைவில் புதுக்காதலன் உடன் ஏற்பட்ட நெருக்கத்தால் காதல் கணவனை புதுக்காதலனோடு சேர்ந்து கொலை செய்து டிரம்மில் அடைத்... மேலும் பார்க்க

வயிற்று வலி; ஏர்போர்ட் கழிவறைக்கு சென்று குழந்தைபெற்று குப்பை தொட்டியில் போட்ட கல்லூரி மாணவி

மும்பை விமான நிலையத்தில் உள்ள கழிவறையில் இருந்த குப்பை தொட்டியில் குழந்தை ஒன்றின் உடல் கிடந்தது. அதனை பார்த்த துப்புரவு தொழிலாளி இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். பிறந்தவுடன் குழந்தை ... மேலும் பார்க்க

"தன்னுடன் பேச மறுத்ததால் உயிரோடு தீ வைத்த காதலன்" - சிகிச்சை பலனின்றி இளம்பெண் உயிரிழந்த பரிதாபம்!

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகேயுள்ள இளம்புவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி காளியம்மாள். கருத்து வேறுபாடு காரணமாக காளியம்மாள் தனது கணவரை பிரிந்து தனது 2 மகன்கள் மற்றும் மகளுடன... மேலும் பார்க்க

காவலர் கொலையில் 3 பேர் சிறையில் அடைப்பு; சுடப்பட்ட குற்றவாளிக்குத் தீவிர சிகிச்சை

உசிலம்பட்டியில் போலீஸ்காரர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேரைக் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.சுடப்பட்ட பொன்வண்ணன்மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளப்பட்... மேலும் பார்க்க

வீட்டில் ஸ்டூடியோ; மாடல்களுக்கு லட்சத்தில் சம்பளம்; ஆபாச வீடியோ நெட்வொர்க்கை இயக்கிய நொய்டா தம்பதி!

உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவில் சட்டவிரோதமாக ஆன்லைனில் ஆபாச வீடியோ வெளியிடப்படுவதாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நொய்டாவில் உள்ள உஜ்வால் என்பவரத... மேலும் பார்க்க