விஜய் விமர்சனத்தை பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை: செல்லூர் ராஜூ
விஜய் விமர்சனத்தை பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மதுரையில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கூட்டணி என்பது எடப்பாடி பழனிசாமி சொன்னதுதான் நிதர்சனமான உண்மை. அமித்ஷா அவருடைய கருத்தை பதிவு செய்துள்ளார். அதிமுகவை எப்படி வழிநடத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும். அமித்ஷாவை ஏன் தனித்தனியாக சந்தித்தீர்கள் என செங்கோட்டையனிடம் கேளுங்கள்.
அதிமுகவில் செங்கோட்டையன் மூத்த நிர்வாகி மதிக்கக்கூடியவர். மதிக்ககப்பட்டவர். செங்கோட்டையன் அவரது கருத்தை சொல்லியுள்ளார். இபிஎஸ்ஸிடம் செங்கோட்டையன் சொல்லிவிட்டு சென்றாரா? இல்லையா? என்பது எனக்கு தெரியாது. செங்கோட்டையன் கூட்டணி தொடர்பாக பேசினார் என்று செய்திகள் வந்ததா?. அதிமுக பிரியவில்லை. அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம்.
சத்தீஸ்கரில் பெண் நக்சல் சுட்டுக்கொலை
ஒன்றிரண்டு பேர் போவது வழக்கமான ஒன்று. ஒரு தலைவர் சென்றால் அவர் பின்னால் 4 பேர் இருப்பார்கள். த.வெ.க விமர்சனத்தை நாங்கள் பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. கருத்துக் கணிப்பு எல்லாம் தூள் தூளாக மாறிவிடும், மக்கள் தான் எஜமானர்கள். எழுதி வைத்துக் கொள்ளுங்கள் 1000 கருத்துக் கணிப்புகள், விமர்சனங்கள் வந்தாலும் 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர்.
எங்கள் கொள்கையில் நாங்கள் சரியாக தான் உள்ளோம். எடப்பாடி பழனிசாமி மிகவும் சரியாக உள்ளார்.