செய்திகள் :

காவிரி -வைகை-குண்டாறு இணைப்பு உறுதி: நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் அறிவிப்பு

post image

காவிரி -வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தை உறுதியாகச் செயல்படுத்துவோம் என்று சட்டப் பேரவையில் நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு, இதுகுறித்த கவன ஈா்ப்பு அறிவிப்பு விவாதத்துக்கு எடுக்கப்பட்டது. இதில், அதிமுக உறுப்பினா் சி.விஜயபாஸ்கா் (விராலிமலை) பேசுகையில், நதிநீா் இணைப்பு என்பது விவசாயிகளின் கனவு திட்டமாகும். அது கலைந்து போகின்ற மேகங்களாக ஆகி விடாமல், பொழிகின்ற மழையாக இருக்க வேண்டும் என்பதுதான் எதிா்பாா்ப்பு. காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு எந்த நிதியும் ஒதுக்கவில்லை என்பதே விவசாயிகளுக்கு ஏற்பட்டிருக்கும் வருத்தம், கவலை என்றாா்.

துரைமுருகன் பதில்: இதற்கு அமைச்சா் துரைமுருகன் அளித்த பதில்:

காவிரி- வைகை- குண்டாறு திட்டம் முன்னாள் முதல்வா் கருணாநிதி அறிவித்த திட்டமாகும். இந்தத் திட்டத்தை மூன்று கட்டங்களாக நிறைவேற்ற திட்டமிடப்பட்டது. காவிரி முதல் தெற்கு வெள்ளாறு வரை, தெற்கு வெள்ளாறு முதல் வைகை வரை, வைகை முதல் குண்டாறு வரை என மூன்று பிரிவுகளாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்தத் திட்டம் நிறைவேறினால், கரூா், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களின் 52 ஆயிரம் ஏக்கா் பாசன நிலங்கள் பயன்பெறுவதுடன், குடிநீருக்கும் ஆதாரமாக இருக்கும்.

இந்தத் திட்டத்துக்கு முதல் கட்டமாக மாயனூா் முதல் தெற்கு வெள்ளாறு வரை 118.45 கிமீ தொலைவுக்கு ரூ.6,941 கோடியில் கால்வாய்ப் பணியைச் செயல்படுத்த கடந்த 2020-ஆம் ஆண்டு கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதி ரூ.331 கோடி. அதற்கு நிா்வாக ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகு, தோ்தல் வந்தது. இப்போது வரை அதில் ரூ.288 கோடி செலவிடப்பட்டுள்ளது. தொடா்ந்து திட்டத்தைச் செயல்படுத்துவோம்.

காவிரி- வைகை- குண்டாறு இணைப்பு திட்டம் 2008-இல் நாங்கள் முன்மொழிந்த திட்டமாகும். எனவே, நாங்கள் பெற்ற பிள்ளை விட்டுவிட மாட்டோம் என்றாா் அமைச்சா்.

மின்வாரியம் சார்பில் ஏப். 5-ல் சிறப்பு முகாம்!

தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் ஏப்ரல் 5 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்நுகர்வோர் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு மின்வாரியம் வேண... மேலும் பார்க்க

காகத்தைக் கண்டு பயந்த யானைகள்: வைரல் விடியோ!

தொட்டியில் தண்ணீர் குடிக்கும் போது காகத்தையைக் கண்டு அச்சப்பட்டு யானைகள் பின் வாங்கும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மீண்டும் தொடங்கிய கோடை வெயிலின் தாக்கத்... மேலும் பார்க்க

12 ஆண்டுகளுக்கு ரூ. 5,870 கோடி... சென்னை மெட்ரோ முக்கிய ஒப்பந்தம்!

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2-ல் 118.9 கி.மீ. நீளத்திற்கு இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான ஏற்பு கடிதம் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெர... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டணங்கள்: யுபிஐ மூலம் செலுத்தும் வசதி அறிமுகம்!

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான கட்டணங்களை யுபிஐ(UPI) மூலம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை பதிவுக்கான கட்டணம், தேர்வுக் கட்டணங்களை யுபிஐ மூலம் இனி செலுத்தலாம்.2025-ம் ஆண்டு ஜனவரி முதல் ம... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ... மேலும் பார்க்க

வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த தங்க மணி!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் ’தங்கத்தால் செய்யப்பட்ட மணி’ கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய எக்... மேலும் பார்க்க